Thursday 26 November 2020

நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் மக்கியவெல்லி .





    நிக்கலொ மக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்ககோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவல்லி (NICCOLO DI BERNARDO DEI MACHIAVELLIஒரு இத்தாலிய ராஜதந்திரியும் அரசியல் மெய்யியலாளரும், இசைக்கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மறுமலர்ச்சி  காலத்தின் மாபெரும் அரசியல் மற்றும் வரலாற்றுச் சிந்தனையாளர் நிக்கலோ மக்கியவெல்லி. இவர் தன்னுடைய அரசியல் அனுபவத்தினைக் கொண்டு எதிர்காலத்தேய அரசியல் விளைவுகளை சரியாக முன்கணிப்புச் செய்தார். இத்தாலிய ஆட்சியாளர்களிடையே சமரசம் பேசினார். மனிதர்கள் தினமும் எப்படி ஒழுகுகின்றார்கள் எக்பதனை உணர்ந்த கொள்ள விரும்பி அதனையே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டு செயற்பட்டார். மனிதர்களது செயற்பாடுகள், அவற்றினது நோக்கங்கள், விளைவுகள் பற்றிய பல தகவல்களை பொறுமையொடு திரட்டி அய்வு செய்து கோட்பாடுகளை உரவாக்கினார். கடவுள் நம்பிக்கை எதுவுமற்ற பகுத்தறிவாளருக்கும் இவருக்குமிடையிலே எந்தவிதமான வேறுபாடுகளும் இருக்கவில்லை. மறுமலர்ச்சி காலத்தில் அவரைப்போன்று அவருக்கு முன்னால் புதுமையாக சீர்தித்தவரெவருமில்லையென்றெ கூறலாம்.

அரசியல் வரலாற்றினை எடுத்து நோக்குவோமேயானால் அரசியல் பற்றிய ஆய்வுகள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்றன. பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு அறிஞர்கள் தோற்றம் பெற்று தமது கருத்துக்களையும் கோட்பாடுகளையும் தெரிவித்து இருப்பதைக் எம்மால் அவதானிக்க முடியும். இவ்வகையிலே நவீனகால அரசியலின் தந்தை என வர்ணிக்கப்படும் மக்கியாவல்லி நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை நோக்குவோம்.

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற புளோரன்ஸ் நகரத்தில் கி.பி 1469 மே 1இல் மக்கியாவல்லி பிறந்தார். அவர் தந்தை பெர்னான்டோ மக்கியவெல்லி வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்தார். தாயார் பர்த்தோலாம்மியா டி ஸ்டீபனோ நெல்லி.  இருவரும் புளொரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். ஆரம்பம் முதலாகவே கல்வியில் ஆர்சம் கொண்ட இளைஞராக காணப்பட்டார். அரசாங்கத்தில் சிறிய தொழிலில் சேர்ந்து இவர் படிப்படியாக தனத திறமையின் மூலமாக அமைச்சகப் பதவிpயினைப் பெற்றுக்கொண்டார். அரசுக்கு ஆலோசனை கூறுவதில் மக்கியவெல்லியின் பங்கு அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது.

இவர் அரசில் உயர்பதவியில் இருந்தமையின் பின்னணியில் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள, இராணுவத் தலைவர்கள் மற்றும் சமகால பிற உலகத் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமார்கள் போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகக்கூடிய சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட்டதனால் அவர்களிடமிருந்து மக்கியவெல்லி பல்வேறு அனுபவங்களினை உள்வாங்கிக்கொண்டார். குறிப்பாக சமகாலத்துப் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகளின் மன்னர்களோடும் தொடர்பு வைத்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிய மன்னன் 12ஆம் லூயியுடன் இரகசியப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டார். 1503இல் போப்பினைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலை நேரடியாகக் கவனிப்பதற்கு உரோமபுரிக்கு மக்கியவெல்லி அனுப்பப்பட்டார். தொடர்ந்து புதிய போப்பாண்டவரின் தூதுவராக நியமிக்கப்பட்டார் இருப்பினும் மெடசி குடும்பமானது மீண்டும் புளோரன்சின் அரியணைக்கு வந்ததும் 1512 நவம்பர் 7இல் மக்கியவெல்லி வேலைநீக்கஞ் செய்யப்பட்டார். அவ்வம்சத்தினரால் சிறைவைக்கப்பட்ட இவர் விடுதலையடைந்ததும் காஸ்யானோ என்ற இடத்திற்குச் சென்று அங்கு தன்னுடைய வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இக்காலக்கட்டத்திலிருந்துதான் மக்கியாவல்லியின் எழுத்துப்பணி ஆரம்பித்தத எனலாம். தம்வாழ்வின் பெரும் பாகத்தை தனது நாட்டுப்புற பண்ணையில் தான் கழித்தார். அப்போது தான் புகழ் பெற்ற நூலாகிய “இளவரசன்” எனும் நூலை எழுதினார். இளவரசன் மற்றும் லிவி மீதான உரைக்கோவை ஆகிய இரு நூல்களும் மக்கியாவல்லியின் இரு முண்னணி புத்தகங்களாகும்.

           இடைக்காலத்தின் இறுதியளவில் இத்தாலியினது அமைப்பு 5 பெரும் பிரிவுகளால் ஆளப்படலாயிற்று. வெனிஸ், புளோரன்ஸ், நேப்பிள்ஸ், மிலான், உரோமன் தேவாலயம் போன்ற பிரிவுகளே அவை. மேலும் இவற்றுக்கிடையிலே ஒற்றுமையும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் போப்பின் நடவடிக்கைகளே இத்தாலியினது ஒற்றுமையின்மையினைக் குறைத்து வந்தமை நோக்கத்தக்கது.

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடப்போகின்றதென்ற அச்சத்தின் காரணத்தினால் போப் நாட்டில் இத்தகைய ஒற்றுமையின்மையை ஆதரித்து வந்தார். அரசருக்கும் போப்பிற்குமிடையிலான போராட்டங்களும் நாட்டினது அமைதியின்மையினைக் குறைத்து வந்தது. ஆட்சியாளர்களும் ஜனநாயகத்தினை மதிக்கவில்லை. அரசியற் கொலைகள், கடத்தல்கள் என்பன சர்வசாதாரணமாக அங்கு நடந்த வந்தன. அந்தவகையில் இத்தாலியினது குழப்பமான அரசியல் நிலையில் அதனைக் குழப்பமற்ற நாடாக்க வேண்டுமென்ற முயற்சியில் முக்கியத்துவம் பெற்றவர் மக்கியவெல்லி.

அரசியல் நிலைப்பாட்டினை வரலாற்று ரீதியாக அறிய வேண்டுமென்று எண்ணினாரே தவிர பிற விடயங்களில் அவர் தலையிடவில்லை. தமது கால அரசியலில் தீவிரமான அக்கறையினைச் செலுத்தினார். தன்னுடைய கருத்துக்களை நிரூபிப்பதற்கு அவர் வரலாற்றுக் காரணங்களினை ஆராய்ந்தார். அரசியல் தத்துவத்தினை விட நடைமுறை அரசியலில் ஆர்வங்காட்டினார். அரசாங்கம் இயங்கும் முறை அதனை இயக்ககின்ற சக்தி போன்றவற்றில் அக்கறை காட்டினார். தனிப்பட்ட நபர்களுக்காக மட்டுமன்றி சகலருக்கும் பயன்படுகின்ற வகையில் அரசு பணியாற்ற வேண்டுமென்று எண்ணினார். 

வலிமை அதிகரிக்க வேண்டுமாயின் அரசன் கருணை காட்டுதல் கூடாதெனப் போதித்தார். முன்னர் குறிப்பிட்டது போன்று மக்கியவல்லிக்கு முன்னதாக இவரைப் போன்று புதுமையான சிந்தனைகளை அரசியலில் மேற்கொண்டவர்கள் எவருமில்லை எனக் கூறலாம். உலக விடயங்களில் தெய்வத்தின் தலையீடு சிறிதும் இல்லையென்பதே இவரது வாதமாகும். அரசியலையும் சமயத்தையும் பிரித்த பெருமைக்குரியவர் மக்கியவெல்லி. அரசினை மனிதனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற கருவியாகவே இவர் கருதினார். மதத்தலைவர்களது அறிவுரை தேவைப்படுகின்ற சமயத்தில் மட்டும் அதனைப் பெற முடியும். இதனால் நடைமுறை அரசியல் பொறுத்து மதமானது எந்தவிதமான பங்கினையும் வழங்கவில்லை. அந்தவகையில் மதத்தினுடைய தலையீடு அரசியலில் தேவையற்றதென்பது இவருடைய கருத்து. இத்தாலியின் ஐக்கியத்தினை எதிர்பார்த்து நின்ற மக்கியவெல்லி அதன் பொருட்டுப் போப் பாண்டவரினை எதிர்த்து நின்றார். இதற்காக எந்தவிதமான குறுக்கு வழிகளையும் இராஜதந்திரத்தினையும் கூடப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருந்தார். மேலும் அரசியல் கலையானது மனிதனுடைய சுயநலமே. அத்துடன் நாகரிகத்தினடிப்படையில் கற்றுக்கொள்வதன்று என்பதனைத் தன்னுடைய நீண்ட நாளைய அனுபவத்தின் மூலமாக அறிந்த கொண்டார். பொருளாதார சிறப்பே அரசியலுக்கு அடிப்படையெனவும் ஏற்றுக் கொண்டார்.

செல்வமானது நாட்டு மக்களிடையே எவ்வாறு பகிரப்பட்ட காணப்படுகின்றதோ அதனடிப்படையிலே தான் ஆட்சி செய்கின்ற அதிகாரங்களும் அமைந்திருப்பதாகக் கண்டறிந்தார். சூழ்நிலைகளின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் அரசியலமைப்புகள் காணப்படுவது சிறப்பானதென மக்கியாவல்லி கருதினார். ஸ்பர்ட்டா, வெனிஸ், உரோம் ஆகியவற்றினுடைய குடியரசு முறையிலான அரசாங்கத்தினைப் பாராட்டினார். செல்வந்தர்களது ஆட்சியினை ஆதரிக்கவில்லை. சிறப்புடைய ஆட்சியென கலப்பாட்சியைக் கருதினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தன்னுடைய காலத்தில் இருந்திருப்பாரெயானால் அரசும் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் இருந்திருப்பர் எனக் கூறுகிறார்.

 இவருடைய  இளவரசன்  என்ற நூலில் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும்.    எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை அதில் எடுத்துக் கூறுகிறார். அரசனானவன் தன்னுடைய பதவியினைக் காத்துக் கொள்கின்ற அதேவேளை எதிரிகளை அவன் அடக்குதல் வேண்டும். புரட்சிகள் நாட்டில் ஏற்படாத வண்ணம் அவன் நாட்டினைக் காத்திடுதல் வேண்டும். அவன் எதிரிகளை தோற்கடிக்க எண்ணுகின்ற போது அதனை அவன் பகிரங்கமான காரணங்களோடு சரியான வழியில் மேற்கொள்ளுதல் அவசியம். மக்களுடைய சொத்துக்களில் கைவைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

அரசன் கொடியவன் என்ற பெயர் தனக்கு கிடைத்துவிடுமோ என அவன் ஒரு போதும் அஞ்சக்கூடாது. கடுமையான போக்குடன் கொடூரத்தன்மையும் அவனுக்கிருத்தல் வேண்டும். நாடு விரிவுபடுத்தப்படுவதனை ஆதரித்தார். அரசனது அதிகார எல்லையினை அதிகரிப்பது தொடர்பான விடயங்களே இவரது நூலில் காணப்படுகின்றது. அரசு தன்னுடைய எல்லைகளைப் பெருக்;க வேண்டும் அல்லது அழிந்துவிடவேண்டுமென்பது இவருடைய எண்ணமாகும். உரோமின் கொள்கையினை இவர் பாராட்டினார். தந்திரமும் அறிவுடைமையும் அரசியலுக்கும் இன்றியமையாதன என்பது மக்கியவெல்லியினுடைய வாதமாகும்.

டான்ரே போலவே இவரும் தேசபக்தி கொண்டவராக காணப்பட்டார். ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளது அரசியலமைப்புக்களைப் பாராட்டினார். திறமையான நிர்வாகியாகவும் அரசியல் நிர்வாகியாகவும் இராஜதந்;திரியாகவும் விளங்கினார்.

இவருடைய மக்களால் அரசன் விரும்பப்படுவதை விட அவனைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டுமென்ற கொள்கை சிறப்பானது. இவ்வாறு இவர் கருதியமைக்கு முக்கியமான காரணம் அவர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற எண்ணம் மக்கள் பற்றி அவர் மனதில் காணப்பட்டதே. மக்கள் சுயநல நோக்குடையவர்கள். சபல புத்திக்காரரர்கள் நன்றி மறந்தவர்கள். இவர்களைக் கட்டுப்படுத்திவிட்டால் அவர்கள் அரசருக்காக உயிரையும் கொடுப்பர.; அதே நேரத்தில் அரசன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் அரசரை அழித்துவிடவும் தயங்கமாட்டார்கள். சமகாலத்தில் இவர் இத்தகைய நிலையினைக் கருத்திற் கொண்டு இக்கருத்தினைக் குறிப்பிட்டிருந்தாலும் கூட அக்கருத்தஸ்ரீதுக்கள் இக்காலத்திற்கும் பொருந்துவனவாக உள்ளன. ஒன்றினை ஆராய்ந்து அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்கியாவல்லியினது குறிக்கோள்.

 சமகாலத்தில் இத்தாலியில் குடியரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் சர்வாதிகார அட்சி ஏற்பட்டமையினைக் கருத்தில் கொண்டுதான் மக்கியவல்லி குடியரசு நடைமுறைக்கு ஏற்றதன்று எனக் கூறுகின்றார். அரசனுக்குப் பல்வேறு ஆலோசனைகளை இளவரசனில் இவர் குறிப்பிடுகின்றார். அரசன் தான் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அரசனே நேரடியாகச் சென்று சில காலத்திற்காவது சட்டம் ஒழுங்கினை மேற்பார்வை செய்து கொள்ளுதல் வேண்டும்.  கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ஜனநாயக முறைப்படியான ஆட்சியினை இவர் ஆதரிக்கவில்லை. மாறாக அப்பகுதிகள் சில காலத்துக்கு மோசமான ஆட்சியாளர்களது பொறுப்பில்விட வேண்டுமெனவும் அவ்வாறு விடப்படும்போது தான் அங்கே மிகக்குறுகிய காலத்தில் சட்டம், ஒழுங்கு போன்றன நிலை நாட்டப்படமெனக் கூறுகிறார். இருப்பினும் நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன் அத்தகைய கொடுங்கோலாச்சியாளர்களை அகற்றி விடவேண்டும். இது மக்கள் பொறுத்து அச்ச உணர்வினை ஏற்படுத்தும். ஏதேசச்சதிகாரிகளால் ஆட்சி செய்வது என்பது ஒர் முறையாகவும் ஜனநாயகமுறைப்படியும் மக்களுக்காக ஆட்சி செய்வதென்பதும் மற்றொரு வழியாகும்.

பழமையான அரசுகளுக்கும் புதிய அரசுகளுக்கும் அவற்றுக்கு முக்கியமான அடிப்படைகளாக விளங்குபவை சிறந்த சட்டங்களும் அரசனது படைகளுமே. அரசில் சிறந்த படைபலம் காணப்படாத நிலையில் நல்ல சட்டங்கள் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. இதனால் எங்கு படைபலம் சிறந்த முறையில் காணப்படுகின்றதோ அந்த நாட்டில் நல்ல சட்டங்கள் காணப்படும்.

சமயத்தின் பின்னணியில் இயங்குகின்ற அரசுகள் எப்போதும் நிலைத்திருக்கமாட்டா. சிறந்த அரசுகள் உறுதித்தன்மை அற்றவை. இறுதியில் இவை சர்வாதிகாரிகளிடம் சென்று விடும். மதச்சார்பான அரசுகளின் குறைபாடுகள் பலவற்றினை விபரிக்கின்றார். ஒற்றுமையின்மை , பேராசை. நன்நடத்தைகள் கட்டுப்பாடுகள் இருக்கமாட்டாது போன்ற இயல்புகள் அவை கொண்டிருக்கும். கடவளிடம் பயமோ பக்தியோ இருக்கமாட்டாது. பலம் வாய்ந்த படைகளைக் கொண்டிருக்க மாட்டாது. அரசன் வேட்டைக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்கியாவல்லி வலியுறுத்தினார். அரசன் ஓய்வு காலங்களில் அவன் வேட்டைக்குச் செல்லும் போது தான் அவனால் தன்னுடைய எல்லைகளின் அளவினைக் அறிந்துக் கொள்ள முடிவதுடன் அவனால் சிறப்பாகவும் இயங்க முடியாது.

நாடுகள் இரண்டு சமபலமான நிலையில் மோதுகின்ற போது அரசன் எந்த நாடு வெற்றி வாய்ப்பினைப் பெறுகின்றதென அறிந்துகொண்டு அவற்றுடன் சேர்ந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் இளவரசன் எனும் நூலில் 17, 23, 24 போன்ற அத்தியாயங்களில் அரசனது கடமைகள் ஆட்சி செய்யும் முறைகளை விவரிக்கின்றன.

இவரது இளவரசன் எனும் நூலின் கருத்துக்களை நோக்கும் போது இவரும் ஏனைய அரசியல் சிந்தனையாளர்களைப் போலவே சூழ்நிலையின் தாக்கத்தற்கு உட்பட்டவராகவே காணப்படுவதை அவதானிக்கலாம். ஏனெனில் இவரின் கருத்துக்களில் முக்கிய இடம்பெற்றது அரசே ஆகும். இவர் ஒழுக்கம், மதம், கலாசாரம் என்பவற்றின முக்கியப்படுத்தவில்லை. அதிகாரத்தின் மூலமே அரசாட்சி செய்யலாம் என்பதை வலியுறுதிதுகின்றார். எனவே தான் இவர் தனது ஆய்வின்போது கிரேக்க உரோம கால பகுதியிலிருந்து சில மூலங்களை எடுத்துக் கொண்ட போதும் மத்திய கால சிந்தனைகளை அறவே நிராகரிக்கின்றார். பிரான்ஸ் நாட்டு மக்களை இவர் மதிக்காத போதும் அந்நாட்டு நிர்வாகமுறையினை விரும்பினார். ஜேர்மன் நாட்டினையும் விரும்பினார். காரணம் அந்நாடுகளில் காணப்படுகின்ற ஒற்றுமையே.

மேலும் இளவரசன் எனும் நூலினது கடைசி பகுதி இத்தாலியினைக் காட்டமிராண்டிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று கூறப்படுகின்றது. அவரது இளவரசன் என்ற நூலானது மதம், பொருளாதாரம் போன்ற சில விடயங்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை.

மக்கியாவல்லியின் டிஸ்கோர்ஸி என்ற நூலானது இளவரசன் பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு இவரது கருத்துக்கள் வழிகாட்டியாக உள்ளதோடு நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகராகவும் காணப்படுகின்றார. மக்கியாவல்லி நவீன அரசியலின் ஸ்தாபகர் என்ற கருத்தை ஏற்பவர்கள் அதற்கான காரணங்களைக்’ குறிப்பிடுகின்றனர். அதாவது மக்கியாவல்லியே முதன்முதலில் யதார்த்த பூர்வமான அரசியல் பற்றி சிந்தித்த ஒரு அறிஞர் என்றும், மத்திய கால சிந்தனையின் முடிவையும் நவீனகால சிந்தனையின் ஆரம்பத்தையும் இணைப்பவர் என்றும் தெய்வீக உரிமைக்கோட்பாடு, இயற்கைச் சட்டங்கள் போன்றவற்றினை முதன்முதலாக துணிவுடன் நிராகரித்து அரசியலுக்கும் மதத்திற்கும் இடையில் உறுதியான பிரிகோட்டை வரைய முற்பட்டவர் என்றும் கூறி இவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.
இக்காரணங்களை மட்டுமன்றி அதிகார அரசியல் பற்றி கூறிய முதல்வர் என்றும் ராஜதந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு சர்வதேச ரீதியில் நோக்கிய அறிஞர் என்றும் மக்கியாவல்லியினை மேன்மைப்படுத்தி அவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.

இவ்வாறு இவரது அரசு பற்றிய கருத்துக்களின் மூலம் இவர் தற்கால அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை விளக்கினாலும்  நடைமுறை அரசியல் பற்றி ஆராய்வதிலே அதிகார அரசியலுக்கு முக்கிய இடத்தினைக் கொடுப்பதனால் தான் இவரை நவீன அரசியலின் தந்தை என கூறுவதை சிலர் நிராகரிக்கின்றார்கள். அவர்கள் மக்கியாவல்லியை “அதிகார அரசியலின் தந்தை” என கூறுவதே சாலச்சிறந்தது என தெரிவிக்கின்றனர்.

        அவருடைய கொள்கைகள் பல பிற்கால அரசியல் வல்லுனர்கள் பலரால் விமர்ச்சிக்கப்பட்டன. அரசியல் ஒன்று தான் நாட்டினைக் காக்குமென்று இவருடைய கருத்தாகும் இவருடைய அரசியல் அனுபவத்திற்குப் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது. மக்களை நன்றியற்றவர்களெனக் குறிப்பிடுகின்றார். அரசியல் அறிவில்லாத மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொணடிருக்க வேண்டும். அவர்களது மனத்தினை மாற்றுவதற்கு இதனை அவர்களது நாட்டினதும் நன்மை பொறுத்தே செய்தல் வேண்டும். மக்கள் ஆபத்தானர்கள். அதேநேரத்தில் அவர்களது மனம் பக்குவப்படாமல் காணப்படுகின்றது. தலைவனற்ற கூட்டம் ஆபத்தானது. ஏமாற்றமும் பலாத்காரமும் மக்களை ஆட்சி செய்வதற்கு சிறந்த வழிகாட்டியாக கொள்ளுகிறார். ஏமாற்றுதல் என்பது மக்கியாவல்லி கைக்கண்ட யுக்தியாகும். அதாவது நாடு ஆபத்தில் காணப்படுகின்றபோது நியாயம், அநியாயம் பார்ப்பது பயனற்றது என்பது இவரது வாதமாகும். அத்துடன் ஆட்சிக்கலை என்பது மக்கியாவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும்.

மக்கியாவல்லியினுடைய நூல்கள் குடியரசுக் கொள்கையையினை வெளிப்படுப்படுத்தினாலும் இக்கொள்கையினைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அவற்றில் அவர் எடுத்துக்காட்டவில்லை. மதம் சம்பந்தமான கருத்துக்கள் எவற்றினையும் இவர் குறிப்பிடவில்லை. இத்தாலியின் அரசியல் நிலையினை மட்டுமே இவை வெளிப்படுத்துகின்றன. மக்கியாவல்லியின் சிந்தனைகள் தொடர்ச்சியாக சொல்லப்படாமல் சிதறிக் காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே கருத்தினை பல இடங்களில் குறிப்பிடுகின்றார். மக்கியவெல்லி நயவஞ்சக அரசியல் தத்துவஞானியாகக் கருதப்படுகின்றார். சர்வதேச அரசியலும் உள்நாட்ட அரசியலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனியார் நீதி ஒழக்கம், பொதுநீதி ஒழுக்கம் போன்ற பிரிவுகளை அக்காலத்திலேயே தெரிவித்தவர். இவர் பற்றிப் பலரிடையே தவறான கருத்துக்கள் காணப்பட்டபோதும் உண்மையில் அவரை குறுகிய எண்ணங்கொண்ட சுயநலமிக்கவர் எனக் கூறிக் கொள்வது எந்தளவுக்குப் பொருத்தமானதென்பது வினாவுக்குரியதே.

மக்கியாவல்லி தனது அதிகார அரசினைப் பற்றி வரைவிலக்கணப்படுத்தும் போது ஒரு தனியார் மூலமோ அன்றி வழிவழியாக பல நபர்கள் மூலமோ ஏற்படுகின்ற அரச அதிகாரத்தின் முக்கிய பண்புகளாக தலைமை தாங்கி நடாத்தும் வீரம், ஒற்றுமையை நிலைநாட்டவல்ல மனோசக்தி, நினைத்ததை செய்யும் துணிச்சல் ஈவு இரக்கமற்ற தண்டணை என்பனவெ மக்கிய அம்சங்களாக இருக்கவேண்டும் என கூறுகிறார்.
மேலும் இந்த அரசை ஆள்பவனுக்கு சில சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது ஆள்;பவன் சிங்கம் போன்ற வீரமுள்ளவனாகவும் நரிபோலத் தந்திரமுள்ளவனாகவும் காணப்படவேண்டும் என வலியுறுத்தும் இவர் பொதுமக்களின் உளவியல் தன்மையினை மிகக்கீழ்த்தரமானதாகவே வர்ணிக்கிறார்.

அதுமட்டுமன்றி மக்கியாவல்லியின் கருத்துக்கள் மனிதப்பண்புகளற்ற கருத்துக்கள் என்றும் பாசிச கொள்கைக்கு வித்திட்டவர் என்றும் இவரின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே துர்அதிஸ்டவசமாக ஏற்பட்டவை என்றும் இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டமையால்தான் இவ்வாறான அராஜக கருத்துக்களை தெரிவித்தார் என்றும் இலக்குகளைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றும், இன்னொரன்ன காரணங்களை தெரிவித்த இவரின் கருத்துக்கள் அரசியலில் இருந்து முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும் எனவாதிடுகின்றனர்.

மக்கியாவல்லியின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே சர்ச்சைக்குரிய கருத்துக்களாகும். இவரின் கருத்துக்களை சிலர் ஏற்கின்றார்கள். பலர் நிராகரிக்கின்றார்கள். ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் மனநிலையினைப் பொறுத்த விடயமாகும்.

எது எப்படியாயினும் இவருடைய அரசியற் கண்ணேட்டம், மனித இயல்பு தொடர்பான கருத்துக்கள் , நாட்டுப்பற்று, சார்புடைமை, திறனாய்வின்மை போன்றனவும் குறைபாடுகளாகச் சொல்லப்பட்டாலும் அரசியலைச் சமயத்திலிருந்து பிரிக்க எடுத்த முயற்சியும் இளரசன் அரசியல் தத்துவதற்கும் எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன. அன்றைய இத்தாலியின் இயல்பான பிரதிபலிப்பாக இவரைக் கருதலாம். அதுமட்டுமன்றி மக்கியாவல்லி அரசியல் வரலாற்றிலே புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவர் என்பதை யாராலும் மறுக்க மடியாது. அதுமட்டுமன்றி அவர் தன்னம்பிக்கை மிகுந்தவர் என்பதை அவரின் கருத்துக்களிலிருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் ஏனையவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மனம் தளராமல் தனத சொந்தக் கருத்துக்களை துணிவுடன் வெளியிட்டமையால் இவர் ஒரு தன்னப்பிக்கை உடைய அரசியல் அறிஞர் என்றும் நவீன அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்றும் எமக்கு காட்டிநிற்கின்றது.

No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...