காலத்தால் அழியாத சிவபூமி அரும்பொருள் காட்சியகம் 2020. ஐனவரி. 25 அன்று யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டது.
12 பரப்பில் 3 தளங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியகத்தின் கட்டிட அமைப்பு, காட்சிப்படுத்தலில் பின்பற்றப்பட்டுள்ள ஒழுங்குமுறை, காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், சிற்பங்கள், பழங்கால பாவனைப் பொருட்கள் அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் என்பன அருங்காட்சியகத்தைப் பார்க்க வருபவர்களுக்கு இதுவரை தெரிந்திருக்காத தமிழர் பற்றிய புதிய வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
அவற்றுள் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு 350 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த 21 தமிழ் மன்னர்களுக்கு கடவுளருக்கு அடுத்த நிலையில் பீடங்கள் அமைத்து அவற்றின் மேல் மன்னர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அவற்றின் கீழ் ஆட்சியாண்டு பொறிக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அரும்பொருள் காட்சியகம் தமிழர் பண்பாட்டை மேலும் தலைநிமிரச் செய்துள்ளது. இவ் அரும்பொருள் காட்சியகத்தின் மூலம் எம் சந்ததியினர் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்து வரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களை சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது.
YOUTUPE LINK : https://www.youtube.com/watch?v=tY-ZPRJQoSY&t=21s
TAMIL MUUCHCHU.
No comments:
Post a Comment