Friday, 8 January 2021

இந்திய தேசிய விடுதலை உணர்விற்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பு

 

1947. ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகின்றது. அந்நாள் “இந்தியா புதிய தேசத்தின் உதயநாள்” என்று சொன்னால் மிகையாகாது. ஏனென்றால் இறையாண்மை கொண்ட நாடாக திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரங்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லலாம். இந்தியா சுதந்திரம் பெற்று சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து சுதந்திரமாக தாய் மண்ணில் இந்தியர்கள் சுதந்திரக்காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முதன்முதல் காரணம் அந்நாட்டு தேசிய தலைவர்களும் போராட்ட வீரர்களுமே.

இந்தியாவின் அரசர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி மனப்பான்மையும் ஒற்றுமையின்மையும் ஏகாதிபத்தியம் தோன்றக் காரணமாகும். ஆங்கிலக்கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதி பெற்று சூரத்தில் தனது வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது. கி.பி 1664 இல் பிரேஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு 16ஆம் லூயியின் அமைச்சராக விளங்கிய கால்பெர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் தங்கள் வணிகத்தளங்களை ஏற்படுத்தியது. அதன் காரணமாக கர்நாடக போரின் விளைவால் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பிரான்சின் செல்வாக்கை அடி;யோடு அழித்தனர். அதன் பின்பு 1857 இல் பெருங்கலகம் ஏற்பட்டது. இதனை அடக்கியப் பின்பு ஆங்கில அரசு மகாராணி விக்டோரியா அவர்களின் பெயரினால் 1858 இல் வெளியிடப்பட்ட விக்டோரியா பேரறிக்கை மூலம் கிழக்கிந்திய வணிகக்குழு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. விக்டோரியா மகாராணி இந்தியாவை தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.  இன்று முதல் 1947 இல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா ஆங்கில அரசின் கீழ் ஒர் குடியேற்ற நாடாக விளங்கியது. இக்காலத்திலே “மகாத்மா காந்தி” என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகனதாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரபோராட்ட வீரர் என்ற வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றார். “சத்தியாகிரகம்” என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இவர் “விடுதலைப்பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். அத்துடன் “மகாத்மா” என்னும் பட்டத்தை காந்திக்கு வழங்கியவர் “இரவீந்திரநாத் தாகூர்” 

விடுதலை போராட்ட காலத்தில் மக்களிடையே நாம் அனைவரும் பாரத தேசத்தை சார்ந்தவர்கள் என்ற உணர்ச்சி உருவாகி வளர்ச்சி பெற்றது. அது தீவிரவாதம், மிதவாதம் என்ற இரு கிளைகளாகக் கிளர்ந்தெழுந்தது. மிதவாத இயக்கத்தின் தலைவர் அண்ணல் காந்தியடிகள் ஆவார். 

மோகனதாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி இந்தியாவின் குஐராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும் புத்தலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஐராத்தி ஆகும். இந்திய தேசிய விடுதலை உணர்விற்கு மகாத்மா காந்தியின் பங்களிப்பினை ஆராய்வோம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி ஈடுபடுவதற்கான காரணங்களை ஆராயும் போது தென்னாபிரிக்காவில் 1893 – 1914 வரை அவர் பெற்ற அனுபவம் ஆகும். காந்தி தன்னுடைய பதினெட்டாவது வயதில் “பாரிஸ்டர்” எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாகக் முடித்து பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றனார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்ஆபிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்று வரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்ஆபிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும் ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது “வெள்ளையர் இல்லை” என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னல்களுக்கும் அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கரஸ் என்ற கட்சியினைத் தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஐோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சினையில் வெற்றிக்கண்ட மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதும் கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது. தென்ஆபிரிக்காவில் காந்தி அமைத்த பத்திரிகை “இந்தியன் ஓப்பீனியன்” ஆகும்.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாகக் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தி அவர்கள் 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திலகரின் மறைவுக்குப் பின் மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயற்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் சத்தியாத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, இரண்டாம் உலக போர் என சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியொடு நகர்ந்த காலங்கள் இவை.

இந்தியாவின் காந்தியின் முதல் அரசியல் சோதனை போராட்டமாக “சம்பிரான் சத்தியாகிரகம்” அமைந்தது. சம்பிரான் சத்தியாகிரகம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

20ஆம் நூற்றாண்டில் சின்தட்டிக் சாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இண்டிகோ அதன் சந்தை மதிப்பை இழந்தது. ஆனால் தோட்ட அதிபர்கள் இண்டிகோ விவசாயிகளை விடுவிக்காமல் நிலக்குத்தகையை அதிகரித்தும் மேலும் சட்டபூர்வமற்ற வழியில் விடுவிக்க கட்டணம் வசூலித்தனர். இதனை எதிர்த்து இராஜ்குமார் சுக்லாவும் ஷம்பீர் முகமதுவும் காந்தியை அழைத்தனர். காந்தி சம்பரானுக்கு இராஜேந்திரபிரசாத், மாஸ்ஹர் - உல் - ஹீக் கிருபாலானி மற்றும் மகாதேவ்தேசாய் உடன் சென்று விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அரசு காந்தியை எதிர்த்தது. பின்னர் அவரையே விசாரணை குழுவிற்கு உறுப்பினராக நியமித்தது. தின்காத்திகா முறை ஒழிக்கப்பட்டது. விவசாயிகளிடம் முறையற்று வசூல் செய்யப்பட்ட தொகையில் 35% ஊதிய உயர்வை அளிக்க முன்வந்தனர். 

கேதா சத்தியகிரகம் 1918 காந்தி தலைமையில் ஏற்பட்டுக்கொண்டது. கேதா மாவட்டத்தில் (குஜராத்) ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயிகள் வரிதள்ளுபடியை அரசிடம் வேண்டினர். ஆனால் அரசு வரியை தள்ளுபடி செய்யாமல் வரிவசூல் செய்ய பலாத்தகாரத்தை பயன்படுத்தியது. காந்தி விவசாயிகளிடம் வரிகொடுக்க வேண்டாம் என்று அழைப்பு விடுத்ததால் ஆங்கில அரசு பலத்தை பயன்படுத்தி பின்னர் வரிவசூலை நிறுத்தி வைக்க இரகசிய ஆணையை பிறப்பித்தது. ஆகையால் குஜராத் விவசாயிகளிடம்; காந்தியின் புகழ் பெருகியது.

இந்த போராட்டங்களுக்கு காந்திக்கு வெற்றியை தேடிக்கொடுத்ததால் அவர் அகில இந்திய தலைவர் நிலையை அடைந்தார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 

எட்வின் மாண்டேகு என்று புதிய இந்திய விவகாரத்துறை செயலர் இந்திய தேசியவாதிகளை அமைதிபடுத்த 1917 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் நாள் அரசின் நிர்வாகக் கொள்கையை ( ஆகஸ்டு அறிக்கை ) அறிவித்தார். 1919 ஆம் ஆண்டுச்சட்டத்தின் படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து சென்னை, வங்காளம், பம்பாய், ஐக்கிய மாகாணம், பஞ்சாப், பீகார், மத்திய மாகாணம், அஸ்ஸம் ஆகிய எட்டு மாநிலங்களில் இரட்டையாட்சி அமுல் செய்யப்பட்டது. மத்தியில் இரண்டு அவைகள் உடைய சட்டசபை உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் அவை, மத்திய சட்டமியற்றும் சபை. இலண்டனில் புதிதாக இந்திய உயர் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது.

உலகப்போர் முடிந்தவுடன் பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியில் நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில் 1917 டிசம்பர் 10ஆம் நாள் ஒரு குழு அமைந்தது. அந்த குழு 1918 ஏப்ரல் 15ஆம் நாள் அறிக்கையை சமர்பித்தது. இதன் பரிந்துரையின் படி 1919 மார்ச் 18ஆம் நாள் சட்டம் இயற்றப்பட்டது. இவ்ரௌலட் சட்டத்தை “கறுப்பு மசோதா” என்றும் அழைத்தனர். இவ்சட்டத்தை காந்தியடிகள் எதிர்த்து சாத்வீக போராட்டத்தை தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் சத்தியாகிரக நாளாக நாடெங்கும் அனுசரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் சென்னையில் வைத்து சத்தியாகிரக நாளை ஏப்ரல் 6க்கு தள்ளி வைத்தார்.

ரௌலட் சட்டத்தினை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தை ஒட்டி பஞ்சாப்பின் புகழ்மிக்க தலைவராகிய டாம்கட் சைபுதீன் கிடசுலுவும் டாக்டர் சத்திய பாலும் நாடுகடத்தப்பட்டனர்.  இதனை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கடுமையான அடக்கு முறைகளை கையாண்டதோடு மனித உரிமைகள் மிக கொடிய முறையில் மீறப்பட்டது. அரசின் கீழ்த்தரமான அடக்குமுறைகளை கண்டித்து 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பைசாகி தினத்தன்று ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் மூன்று பக்கம் மூடிய பூங்காவில் பொது கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம் சடைபெற்று கொண்டிருக்கும் போது ஜெனரல் டயர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். அரசின் அறிக்கையின் படி 379 பேர் இறந்தனர். ஆனால் 1000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியா முழுவதிலும் இந்த கொடூரச்செயல் கண்டிக்கப்பட்டது. இரவீரந்திர நாத் தாகூர் “நைட்ஹீட்” பட்டத்தை துறந்தார். இப்படுகொலை பற்றி விசாரணை செய்ய ஒழுங்கின்மை விசாரணை குழுவை நீதிபதி ஹண்டர் பிரபுவின் தலைமையில் அமைத்தது. குழுவின் 7 உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாவார். காங்கிரசும் விசாரணை குழுவை நியமித்தது. மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ், மகாத்மா காந்தி அதன் உறுப்பினர்களாவார். 

செவ்ரஷ் உடன்படிக்கை துருக்கியை தூண்டியதால் இந்திய முஸ்லீம்கள் பிரிட்டிஷ் பேரரசின் மீது கோபமும் வெறுப்பும் கொண்டனர். அதன் விளைவே கிலாபத் இயக்கமாகும். கிலாபத் இயக்கம் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டது.

முதல் உலகப்போருக்கு முன்பு இருந்த நிலையிலேயெ துருக்கியில் பேரரசின் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

துருக்கி சுல்தானின் சமயத்தலைமை ஆட்சி அதிகாரம் இரண்டும் முன்பிருந்தபடியே உறுதிசெய்யப்பட வேண்டும்.

 கிலாபத் மாநாடு 1919 செப்டம்பர் 21 ஆம் நாள் லக்னோவில் நடைபெற்றது. அலி சகோதரர்களும் முகமது அலி, ஷவுக்கத் அலி மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் அம்மாநாட்டின் முக்கிய தலைவர்களாவார். 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் கிலாபத் தினமாக நாடு முழுவதும் அழைப்பு விடுவிக்கப்பட்டது. 

 இரண்டாவது கிலாபத் மாநாடு டெல்லியில் 1919 ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 ஆம் நாள் நடைபெற்றது. இதில் காந்தியடிகள் கூட்டத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். காந்தியின் அறிக்கையின்படி கிலாபத் மாநாடு நியமித்த குழு ஒத்துழையாமை திட்டத்தை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் படி நடவடிக்கையை எடுக்க கல்கத்தாவில் லாலா லஜபதிராஜ் தலைமையில் 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சிறப்புகூட்டம் கூட்டப்பட்டது. ஒத்துழையாமை நிறைவேற்றப்பட்டது.

ரவ்லத் சட்டத்தை எதிர்த்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 மாண்டெகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்சட்டம் எனும் இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுதலை வெளிக்காட்டவும் இச்சீர்திருத்த சட்டத்தின் பயனின்மையை ஆங்கியேலயருக்கு உணர்த்தவும் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை (கி.பி1920 - கி.பி 1922) 1920ஆம் ஆண்டு தொடங்கினார். இவ்வியக்கம் மூன்று படிநிலைகளில் கடைபிடிக்கப்பட்டது. 

முதற்கட்டமாக ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும் பட்டங்களையும் விருதுகளையும் துறந்தனர். அதன்படி காந்தி “கெய்சர் இ ஹிந்தி” எனும் பட்டத்தை துறந்தார். இரண்டாவது கட்டமாக வேலைநிறுத்தம் உட்பட பெரும் போராட்டங்களை நடத்தினர். அனைத்து அரச அலுவலகங்கள் , பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இருப்பது பிரிட்டிஷ்காரர் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. 

மூன்றாவது கட்டம் மற்றும் கடைசிக்கட்டமாக வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரிசெலுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சில், கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற முறைகளில் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்றது. வன்முறைகள் தலைவிரித்தாடின.

ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனினும் வன்முறைகள் பல இடங்களில் தொடர்ந்தன. 1922 ஆம் ஆண்டு ஜனவரி 5 உத்தரபிரதேசத்தில் “சௌரி சௌரா” (கோராக்பூர்) என்னுமிடத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் போது காவலர்கள் விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் கோபமடைந்த விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக காவல் நிலையத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர். இதனைக் கண்ட வருத்தமடைந்த காந்தியடிகள் ஒத்தழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட்டார். பர்தோலியில் 1922ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் கூடிய காங்கிரஸ் செயற்குழு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்த்pயதை ஏற்றுக்கொண்டது. ஆனால் காந்தியடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.இதனால் தேசிய இயக்க நடவடிக்கைகள் சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 

காந்தி இந்து – முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றிக்காக பாடுபட்டார். 

1920 ஆகஸ்ட் 31 அன்று காந்திஜி காதி பிரதிக்ஞை எழுத்தக் கொண்ட அதனை இவ்வாறு எழுத்தில் பதித்தார். “இன்றைய தினத்திலிருந்து  நான் கையால் நூற்ற கதர் ஆடையையும், கதர் குல்லாவையும் மட்டுமே அணிவேன்.”

இந்தியாவுக்கு ஓராண்டுக்குள் சுதந்திரம் தராவிட்டால் சத்தியாகிரகம் தீவிரமடையும் என 1928இல் அறிவித்தார். ஓராண்டு கெடு முடிந்ததும் 1929 டிசம்பரில் இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி சத்தியாகிரகம் அறிவித்தார் காந்தி.

முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாக் கொண்ட காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு பல லட்சக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரி விதித்தது. இது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்தது. எனவே இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் “தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா? ” எனக்கருதி சத்தியாக்கிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து காந்தியடிகள் மார்ச் 12. 1930 ஆம் ஆண்டு சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார். 1930. மார்ச். 02 சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆச்சிரமத்திலிரந்து தினமும் 12 மைல்கள் நடந்து 3 வாரத்தில் 241 மைல் தூரத்தில் உள்ள  (சுமார் 400 கி.மீ ) பயணம் மேற்கொண்டு 23 நாள் பயணத்திற்கு பிறகு குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள  தண்டியை வந்தடைந்தனர். இவ்தண்டி யாத்திரை உப்புச் சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்டது. வழி நெடுகிலும் ஆயிரங்கணக்கான மக்கள் காந்தியடிகளுடன் சேர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டனர். இது உரிமைக்கும் வலிமைக்கும் உள்ள போராட்டம் என்று அழைத்தார். தண்டி கடற்கரையில் உள்ள உப்புக்கல்லை எடுத்து இந்த உப்புக்கல்லை கொண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தினை ஆட்டப் போகின்றேன் என்று உறுதிமொழி எடுத்தமை குறிப்பிடத்தக்கது.  

தண்டியில் கடல் நீரிலிருந்த உப்பு காய்ச்சி விநியோகித்து ஏப்ரல் 6ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறினார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது. மட்டுமல்லாமல் போராட்டம் தீவிரம் அடைய காந்தி உட்பட பல்லாயிரங்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்பு சரோஜினி நாயுடு தலைமையேற்று அவரும் தர்சனா உப்புமண்டி முற்றுகையில் கைது செய்யப்பட்டார்.  ஆனால் போராட்டம் திவிரமடைவதைக் கண்ட ஆங்கில அரசு வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.  தமிழ்நாட்டில் சி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரைப்பகுதியில் வேதாரண்யத்தில் உப்பு சட்டங்களை மீறி உப்புக் காய்ச்சினார். டி.பிரகாசமும், கே. நாகெஸ்வராவும் மெரினா கடற்கரையில் உப்பு சத்தியாகிரகம் செய்தனர். “உப்பு சத்தியாகிரகம்”  என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். 

சட்ட மறுப்பு இயக்கத்தை ஆங்கில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இந்திய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஆங்கில அரசு ஈடுபட்டது. இதனால் 1930 ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல்; வட்டமேசை மாநாட்டை கூட்டியது. 1930 நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி 19 வரை முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. 89 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக் டொனால்டு தலைமை தாங்கினார். சட்டமறுப்பு இயக்கம் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது. 

முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே பிரிட்டிஷ் அரசு இர்வின் பிரபுவை காந்திஜியை சந்திக்க இந்தியாவிற்கு அனுப்பியது. இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்முடிவில் 1931 ஆம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இதற்கு கைமாறாக ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்வதென்றும் உப்புச்சட்டங்களை திரும்பபெறுவது என்றும் ஒப்புக்கொண்டது.பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க இந்த ஒப்பந்தம் வகைசெய்யவில்லை. என்றும் போராட்டத்தின் போது நடந்த போரில் இராணுவ அத்துமீறல்கள் பற்றி எதுவும் கூறாததால் ஒப்பந்தம் பற்றி மக்களிடையேயும் தலைவர்களிடமும் எதிர்ப்பு இருந்தது.

இரண்டாம் வட்டமேசை மாநாடு இலண்டனில் 1931 இல் நடைபெற்றது. காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் படி காந்தியடிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சினை போன்றவற்றிக்கு எந்ததீர்வும் இந்த மாநாட்டில் எட்டப்படவில்லை. எனவே காந்தியடிகள் பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார். காந்திஜி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. இதனால் சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது. 

இர்வீன் பிரபுவுக்கு பின்பு வைரஸ்ராயாக வந்த வெல்லிங்டன் பிரபு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை கைவிட்டார். அடக்குமுறையை கையாண்டார். வரிகொடாக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரு, ஷெர்வானி, போன்றோரும் வங்காளத்தில் சுபாஸ்சந்திரபோசும் அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இவை யாவும் காந்தி லண்டனில் இருந்தபோது நடைபெற்றவையாகும். காந்தி இந்தியா திரும்பியவுடன் வைஸ்ராவை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ஆகையால் காந்தி மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தை 1932அம் ஆண்ட ஜனவரி 3ம் நாள் துவங்கினார். காந்தி ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

1932 இல் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இங்கிலாந்து பிரதமர் “இராம்சே-மெக்டொனால்டு” வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார். 

இந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தை தாழ்த்தப்பட்ட இனமக்களின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் வரவேற்றார். காந்தி இதனை ஏற்க மறுத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் துவங்கினார்.  மேற்கொண்டார். 1932 ஆம் ஆண்டு அம்பேத்காருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப்பின் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.  இவ்வுடன்படிக்கையின் படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித்தொகுதி ஒதுக்கீடு கைவிடப்பட்டது. சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அதிக அளவு எண்ணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களை தனியாக பிரிக்கும் ஆங்கிலேயரின் சூழ்ச்சி தோல்வியடைந்தது.

1932 ஆம் ஆண்டு நவபர் 17 முதல் டிசம்பர் 24 வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் அதில் கலந்துகொள்ளவில்லை. மூன்று வட்டமேசை மாநாடு பற்றிய வெள்ளை அறிக்கையை 1933 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இதன் அடிப்படையிலேயே 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கசட்டம் இயற்றப்பட்டது. காந்தி 1934 மே 20ஆம் நாள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திவிட்டர்ர.

1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள் இரண்டாம் உலகப்போர் மூண்டது. இந்திய வைஸ்ராய் லின்லித் பிரபு இந்திய தலைவர்களை கலந்து ஆலோசனை செய்யாமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினார். இந்த வெள்ளை அறிக்கையில் திருப்தியடையாமல் காங்கிரஸ் ஆட்சிசெய்த அனைத்து மாநிலங்களிலும் பதவி விலகியது. மேலும் போர் நடவடிக்கைகளை எதிர்த்தது. காங்கிரஸ் அரசு பதவி விலகிய தினத்தினை முஸ்லீம் லிக் விடிவு நாள் ஆக கொண்டாடியது.

லின்லித்கோ பிரபு 1940 ஆம் ஆண்டு 8ஆம் நாள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுவே ஆகஸ்டுகொடை எனப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் தியாகிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் சட்டமறியல் இயக்கத்தில் ஈடுபட அனுமதிக்கப்பெற்றனர். இதுவே “தனிநபர் சத்தியாகிரகம்” எனப்பட்டது. 

1940ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தை காந்தி தொடங்கிவைத்தார். முதல் தனிநபர் சத்தியாகிரகியாக வினோபாவிற்கும் அவரை தொடர்ந்து ஜவஹரலால் நேரு, வல்லபாய் பட்டேலுக்கும் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். 

இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் இங்கிலாந்திற்கு எதிராக ஈடுபட்டது. இங்கிலாந்து போரில் வெற்றி பெற, இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே காங்கிரசின் ஒத்துழைப்பைப் பெறவும் இந்திய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், 1942 ஆம் ஆண்டு சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இக்குழு “கிரிப்ஸ் தூதுக்குழு” என்று அழைக்கப்பட்டது. இக்குழு இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு உதவிகரமாய் இந்தியா இருக்கவேண்டும் என அறிவித்தது. போருக்குப் பின்னர் இந்தியர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் எனவும், இந்திய அரசியல் அமைப்பினை வரைவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிட்டார். எனவே கிரிப்ஸ் தூதுக்குழு தோல்வியடைந்தது. 

கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி, காந்தியடிகளின் போக்கில் மாற்றங்களை கொண்ட வந்தது. அதுவரை அவர் பின்பற்றி வந்த அகிம்சை வழிகள் எத்தகைய பலனையும் அளிக்கவில்லை. என்பதை உணர்ந்தார். எனவே அவர் ஆங்கிலேயர் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவேண்டுமெனக் கோரினார். 

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வெற்றி மேல் வெற்றிகளை குவித்துக்கொண்டே சென்றது. எனவே ஆங்கிலேயர்கள் இனி இந்தியாவில் இருந்தால் ஜப்பான் இந்தியா மீது படையெடுக்கக் கூடும் என காங்கிரஸ் தலைவவர்கள் உணர்ந்தனர். 

இதனால் 1942 ஆம் ஆண்டு 8ஆம் நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. மும்பையில் நடந்த இந்த செயற்குழு கூட்டத்தில் காந்தியடிகள் ஆற்றிய மறக்க முடியாத சொற்பொழிவைத் தொடர்ந்து அத்தீர்மானம் நிறைவேறியது. இதன்படி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி’’ என அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை காந்தி தொடக்கி வைத்தார். 1942. ஆகஸ்ட் 08 பம்பாய் மாநாட்டின் போது பேசிய காந்தி “செய் அல்லது செத்து மடி” என்று வீரம் செறிந்த முழக்கத்தை எழுப்பினார். இவ்முழக்கம் நாட்டின் சுதந்திர வேள்வினை கொழுந்து விட்டு எறிந்தது. இவ்விடுதலை போராட்டம் பொதுமக்கள் போராட்டமாக மாற்றும் வல்லமையை தந்தது இவ்வெள்ளையனே வெளியேறு இயக்கம.

 முழுச்சுதந்திரம் தவிர வேறு எதனாலும் நான் திருப்தி அடையமாட்டேன். நாம் அதற்காக வாழ்வோம் அல்லது வீழ்வோம். இந்தியாவை விடுதலை பெறச்செய்வோம். அல்லது அதற்காக செத்து மடிவோம் என்றார். உண்மையில் அவரது பேச்சு மிகப்பெரிய அளவிலான ஆயுதமற்ற புரட்சிக்கு எழுச்சி குரலாக அமைந்தது. காந்திஜியின் மனஉறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. அதற்கு அடுத்தநாளே காந்திஜி, நேருஜி. அபுல் கலாம் ஆசாத் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நாடெங்கும் வன்முறைகள் வெடித்தன. 

இரண்டாம் உலகபோர் 1945 ஆம் ஆண்டு முடிவடைந்தது. போருக்குப் பின் இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்றி பெற்று “கிளமண்ட் அட்லி” தலைமையில் ஆட்சி அமைத்தது. தொழிற்கட்சியின் தலைவர் அட்லி இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். அவர் இங்கிலாந்தின் பிரதமரானார். அவர் காங்கிரஸின் மீது ஆங்கில அரசு விதித்திருந்த தடை உத்தரவுகளையும் விலக்கினார். அட்லி இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க ஒர் குழுவை அமைத்தார். அக்குழு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பரிந்துரைத்தது. இதன்படி காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்திய சுதந்திர பிரகடனம் அரங்கேறியது. ஆனால் இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

காந்தியடிகள் இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர். இந்திய விடுதலை போராட்டத்திற்கு அச்சாணியாக திகழ்ந்தவர். காந்தியின் தலைமையில் விடுதலை உணர்வுடைய நாட்டுமக்கள் இந்தியாவின் விடுதலைக்காக போராடினர். இந்திய விடுதலை போராட்டத்தினர் காந்திஜின் அகிம்சை நெறியைப் பின்பற்றி விடுதலை வேள்வி நடத்தினர். போரில் உயிர்பலி ஏற்படுவது இயல்பு. போரில் ஆயுதங்களை பயன்படுத்துவது போர் தர்மம். ஆனால் ஆயுதப்போரைக்காந்தி வெறுத்தார். சத்திய நெறியில் அகிம்சை அடிப்படையில் போரிடுவதை விரும்பியவர் காந்தி. ஆங்கிலேயர்கள் தாங்களாகவே இந்தியாவை விட்டுவெளியேற காந்தியின் அகிம்சை போரே காரணமாகும்.

அடிமை விலங்கு பூட்டியவர் ஆங்கிலேயர். அவர்களிடமிருந்து விடுதலை அடையக் காந்தியின் அறநெறியே காரணமாயிருந்தது. காந்தி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கத்திற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைபப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடாத்தினர்.

சத்தியசோதனை என்கிற தன்னுடைய சுயசரிதத்தை 1923ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார். உலக அளவில் வெளியான சுயசரிதைகளுள் காந்தியின் சத்தியசோதனைக்கு முதன்மையான இடம் உண்டு. மொழிவாரி மாகாண பிரிவினைக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை உருவாக்கியவர் காந்தி.

அகிம்சை எனும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மாகாந்தி அவர்கள் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே புதுடில்லியில் “நாதுராம் கொட்சே” என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஆயுள் முழுக்க அகிம்சையை போதித்த காந்தி சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலுக்கு இரையானார். இந்தியாவுக்குச் சுதந்திரத்துக்காக 32 ஆண்டுகள் போராடிய காந்தி இந்திய சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் சோகம் நிறைந்தவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாமனிதர்களும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் சென்ற அரசியல் தலைவர்களும் சமூகத்தின் ஒப்பற்ற மேம்பாட்டிற்காக சாதனை புரிந்தவர்களும் கொடியவர்களின் கொலை வெறிக்கு ஆளாகி உயிர்த்துறந்தனர். அந்தவகையில் காந்தி எனும் மாபெரும் அகிம்சை சக்தியும் உயிர்துறந்தது. அகிம்சையை கற்றுத் தந்து அதனால் சுதந்திரமும் பெற்று  தந்த அண்ணல் வாழ்ந்த புண்ணிய பூமியில் வஞ்சகனது முதல் குண்டுக்கு அண்ணலே பலியானார். 

தென்னாபிரிக்காவில் எந்த ரயில் நிலையத்தில் காந்தி தூக்கி எறியப்பட்டாரோ அங்கு காந்திக்கு  தற்போதும் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடாத்தி விடுதலைக்கு காரணமாக இருந்ததால் இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் திகதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தி. ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்ப சத்தியாக்கிரகம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்தி நடத்தி துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளைக்காரர்களை திகை;க்கச் செய்தவர். பாரத நாட்டிற்காகவே தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலகசரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும். “என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி” என்பது தான் காந்தி மக்களுக்குச் சொன்ன அதி உன்னதமான தத்துவம்.




Tuesday, 1 December 2020

போல்கன் நாடுகளில் துருக்கியருக்கு எதிரான தேசிய எழுச்சியும் பல்கேரியரின் சுதந்திரபோராட்டமும்

 

    குரொயேஷியா, போஸ்னியா, ஹெர்ச்சிகோவினா, மாசிடோனியா, சேர்பியா, மாண்டிநெக்ரொ, அல்பெனியா, கிறீஸ், பல்கேரியா ஆகிய நாடுகளைக் உள்ளடக்கிய நிலப்பரப்பே பால்கன் நாடுகள் என்றழைக்கப்படும் தீபகற்பபகுதியாகும். இதில் திரெஸ், துருக்கியின் சில பகுதிகள் அடங்கும். 

போல்கன் குடா அல்லது போல்கன் தீபகற்பம் ஐரோப்பாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒருகுடா பகுதி. இப்பகுதி தென்கிழக்கு ஐரோப்பா என்றும் வழங்கப்படுகின்றது. பல்கேரிய நாட்டிலிருந்து சேர்பியா வரை பரவிக்காணப்படும் பால்கன் மலைத்தொடரின் பெயரே இதற்கும் வழங்கப்படலாயிற்று. “பால்கன்” என்ற சொல்லுக்கு துருக்கி மொழியில் காடுகள் சூழ்ந்த மலைத்தொடர் என்று பொருள்படும். பண்டைய கிரேக்கத்தில் இப்பகுதி ஹீமாஸ் குடா என்று அழைக்கப்பட்டது.

போல்கன் பகுதியின் புவியியல் எல்லைகளாக தெற்கில் மத்தியதரைக்கடலும், தென்கிழக்கில் ஏஜியன் கடலும் , வடகிழக்கில் கருங்கடலும், வடமேற்கில் ஏட்றியாட்டிக்கடலும் தென்மேற்கில் அயோனியன் கடலும், வடக்கில் கொச்சிக்கா கிறுக்கா ஆறும் உள்ளடங்குகின்றது.  

ரஸ்யாவின் பெரும்பான்மை இனமாக ஸ்லாவியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு குடிப்பெயர்ந்த வாழ்ந்த வந்தனர். சேர்பியாவில் ஸ்லாவிய அர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும், சேர்பியப்பகுதியாக இருந்த கோஸவோவிலும் அதன் அண்டை நாடுகளான அல்பேனியாவிலும் முஸ்லிம்களும் குரோவேயாவில் கத்தோலிக்க மதத்தவரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய, ஆசிய பகுதிகளை தரைவழியாக இணைப்பதனாலும் மத்தியதரைக்கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையேயான நிலப்பரப்பை கொண்டிருந்நதாலும் வாணிப முக்கியத்துவம் மிகுந்ததாகவும் பல கலாச்சாரங்களையும் பேரரசு மாற்றங்களையும் கொண்ட பிரதேசமாக போல்கன் பிரதேசம் விளங்கியது. 

1908 ஒட்டோமன் துருக்கி தனது ஆட்சியின் கீழ்  தற்போதைய சேர்பியா, பல்கேரியா, அல்பேனியா, கிறீஸ் ஆகிய நாடுகளைக் கொண்டிருந்தது.  1908 துருக்கி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் ராணுவத்தலைவர் “அஹ்மத் நியாஸ் பாய்” அவரால் 200 இளைஞர்களுடன் 3 ரேஷன்களால் இளந்துருக்கியர் புரட்சியை மேற்கொண்டனர். இந்தப்புரட்சி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படத்தியது. இவ்அவரச நிலைமையை உணர்ந்துக்கொண்ட சுல்தான் 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச்சட்டம் மீளுருவாக்கம், படைகளின் சீர்திருத்தம், இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தார்.  இதனால் ஒட்டோமன் துருக்கி பேரரசு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. 

1912 போல்கன் நாடுகளான சேர்பியா, மண்டி நீக்ரோ, பல்கேரியா, கிறீஸ் மற்றும் அல்பேனியா நாடுகள் துருக்கியின் பலவீனத்தை அறிந்துக் கொண்டு அதன் சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டன. அத்தோடு துருக்கியுடன் போர் செய்து ஒட்டோமன் துருக்கியின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. இது ஒட்டோமன் துருக்கியின் வீழ்ச்சிக்கு மேலும் காரணமாகியது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே போல்கன் நாடுகள் ஒட்டோமன் துருக்கியின் ஆட்சியில் இருந்து ஒவ்வொன்றாக விடுதலை பெறத் தொடங்கின. இதுவே போல்கன் நாடுகளின் துருக்கியருக்கு எதிரான தேசிய எழுச்சி பற்றிய சுருக்கமாகும் இனி அதனை விரிவாக நோக்கலாம்.

ஒட்டோமன் தென்கிழக்கு ஐரோப்பாவிலே தங்கள் வெற்றிநெறியை ஆரம்பித்த பொழுது போல்கன் தீபகற்பம் தாக்குதலை எதிர்த்து வெல்லமுடியாத நிலைமையில் இருந்தது. 200 ஆண்டுகளுள் விசாலித்துப் பரம்பியிருந்த பல்வேறு ஆணிலங்களுட் பெரும்பாலானவை ஒட்டோமன் பேரரசு வலைக்குள் அகப்பட்டன. 1361 இல் பைசாந்திரிய பேரரசின் தளர்ந்த பிடியிலிருந்து அதிரியானோபிள் பறித்தெடுக்கப்பட்டது. அக்காலத்திலிருந்து 1453 வரையும் அது துருக்கிய எமிரின் ஐரோப்பியத் தலைநகராயிருந்தது. 1363 இல் பிலிபொலிசையும் 1382இல் சேபியாவையும் பல்கேரியர் விட்டுக்கொடுக்க வேண்டியவராயினர். 1393இல் திருநோவோ அழிவடைதலோடு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பல்கேரியாவின் சுதந்திரம் மறைந்தொழிக்கப்பட்டது. இதற்கிடையில் சிலாவியரின் பெரியவொரு கூட்டிணைப்பொன்று முறியடிக்கப்பட்டது. 1389 இல் கொசோவோ சமவெளியில் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் விளைவு சேர்பியப் பேரரசின் வீழ்ச்சியோடு நின்றுவிடவில்லை. அது தென்சிலாவியரின் அரசியல் நிலையைப் பல ஆண்டுகளுக்கு முற்றாக அழித்தது. சேர்பியா 1459 இலும், பொசினியா 1465 இலும் ஒட்டோமன் துருக்கி பேரரசுடன் இணைக்கப்பட்டது. இவ்விளைவுகள் யாவற்றிக்கும் துருக்கியர் கொன்ஸ்தாந்தனேபிளைக் கைப்பற்றியமையே காரணம் எனலாம்.

போல்கன் நிலப்பகுதியில் சேர்பியர்களும் அல்பேனியர்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்து வந்தனர். முதலில் ரோமப்பேரரசின் கீழும் பின்னர் பைசாண்டிய பேரரசின் கீழும் இருந்த காலத்தில் சேர்பியர்கள் மற்றும் அல்பேனியர்கள் கலாசாரத்தில் பெருத்த வேறுபாடுகள் இல்லை. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை சேர்பியர்களின் கையில் இருந்த இந்த நிலப்பிரதேசம் 1389இல் ஒட்டோமன் துருக்கி அரசுடனான போரில் தோல்வியடைந்து அடிமையுற்றது. அடுத்த நூறு வருடங்களில் போல்கன் பகுதிகள் முழுமையாக துருக்கியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. வேளாண்மைக்கு ஏற்ற வளமான பகுதிகளாக இருந்த அல்பேனியா மற்றும் கோஸவா பகுதிகளில் அல்பேனிய இனத்தவர்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வாழத்தொடங்கினர். 

ஒட்டோமன் பேரரசின் கீழ் படிப்படியாக இந்த அல்பெனியர்கள் இஸ்லாமுக்கு மாற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம் எனப்படும் பழைய கிறிஸ்துவத்தைச் சார்ந்திருந்த பல சேர்பியர்கள் அல்பேனிய மற்றும் கோஸவோவை விட்டு வெளியேறி வடக்கே பெல்கிரெட்டை நோக்கி நகரத்தொடங்கினர். 

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்பேனியாவிலும் கோஸவாவிலும் கிறிஸ்துவம் சிறுபான்மையாக்கப்பட்டு விட்டது.. ஆதிக்க இனமாக இருந்த சேர்பிய இனம் ஒட்டோமன் துருக்கி பேரரசில் இரண்டாம்தர குடிகளாக்கப்பட்டனர். 

ஒட்டோமன் பேரரசில் மேலாண்மையை இழந்த சேர்பியர்கள் அதனை மீண்டும் பெறும் நாள் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு பின் வந்தது. 19 அம் நூற்றாண்டில் ஐரோப்பா பலம் பெறத்தொடங்கியது. துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு பலம் இழக்கத்தொடங்கியது. இந்நிலையில் 1878இல் ஒட்டோமன் துருக்கி - ரஸ்யப்போர் தொடங்கியது.

போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் போல்கன் நாடுகளின் தேசிய எழுச்சியின் அதிகரிப்பு என வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். எனவே ரஸ்யா துருக்கிக்கு எதிரான போரினை 1877 ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவித்தது. இப்போரில் ரஸ்யாவின் குறிக்கோள் துருக்கிய ஆதிக்கத்தில் இருந்து ஸ்லாவிக் மக்களை விடுவிப்பதாகும். இப்போரின் பின்ணனியை நோக்கும் போது 1875ஆல் போஸ்னியா மற்றும் ஹெர்சகொவினால் துருக்கிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுச்சி தொடங்கியது. இவ் எழுச்சிக்கு முக்கிய காரணம் நிதி ரீதியாக ஒட்டோமன் துருக்கியால் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரிகளாகும்.  ஒரு வருடம் கழித்து ஏப்ரல் மாதம் 1876 பல்கேரியாவில் ஒரு எழுச்சி வெடித்தது. துருக்கியர் இக்கிளர்ச்சியினை நெருப்பு மற்றும் வாளால் மிகக்கொடுரமாக அடக்கினர். பல்கேரியாவில் மட்டும் 30 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் துருக்கிக்கு எதிராக சேர்பியா மற்றும் மாண்டினீக்ரொ போரைத் தொடங்கியது. ஆனால் இப்படையெடுப்பு யூலை - ஆகஸ்டில் தோல்வியில் முடிவுற்றது. 

ரஸ்யாவில் ஸ்லாவ்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சமூக இயக்கம் விரிவடைந்தது. ஆயிரங்கணக்கான ரஸ்ய தொண்டர்கள் போல்கன் சென்றனர். நாடு முழுவதும் நன்கொடைகள் சேர்க்கப்பட்டன. இராணுவத்தில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது.டிசம்பர் 11 அன்று ரஷ்யாவின் முன்முயற்சியினால் கூட்டப்பட்ட “கான்ஸ்டான்டினோபிள் மாநாடு”  தொடங்கியது. ஒரு சமரச முடிவு உருவாக்கப்பட்டது. இது பல்கேரியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகொவினா ஆகிய நாடுகள் கூட்டு கட்டுப்பாட்டின் கீழ் சுயாட்சியை வழங்க முடிவெடுக்கபப்பட்டது. எனினும் துருக்கிய மாநாட்டு முடிவுகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டது.  இதனால் 1877.ஜனவரி. 20 இல் கான்ஸ்டான்டினோபிள் மாநாடு முடிவு இல்லாமல் முடிந்தது.  

துருக்கிக்கு எதிரான போர்த்திட்டம் அக்டோபர் 1876 இல் ஜெனரல் N.N. ஒப்ருச்சேவ் அவர்களால் வரையப்பட்டது. மார்ச் 1877க்குள் இவ்திட்டத்தை பேரரசர், போர் அமைச்சர், தளபதி, கிராண்ட் டியூக் நிகோலாய் நிகோலேவிச் சீனியர், ஜெனரல்.யு.யு. நேபோகோயிட்ச்கி, மேஜர் ஜெனரல் கே.வி. லெவிட்ஸ்கி ஆகியோரால் சரி செய்யப்பட்டது. 

1877 ஏப்ரல் 12 ரஸ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் துருக்கியுடனான போர் வெடித்தமை குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டார். கருங்கடலில் துருக்கிய கடற்படை முற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது. அடுத்தடுத்த போரின் போது ரஸ்ய இராணுவம் துருக்கியர்களின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்தி டானூப்பையும் ப்கா பாஸையும் கைப்பற்றியது. 5 மாத முற்றுகையின் பின்னர் ஒட்டோமன் பா~hவின் சிறந்த துருக்கிய இராணுவத்தை பிளெவ்னாவில் சரணடையும்படி கட்டாயப்படுத்தியது. 

போல்கன் வழியாக ரஸ்யா இராணுவம் கடைசி துருக்கிய பிரிவுகளை தோற்கடித்து கான்ஸ்டான்டினோபிளுக்கு செல்லும் பாதையைத் தடுத்தது. ஒட்டோமன் துருக்கியினை போரிலிருந்து அடிபணிய வழிவகுத்தது. 1878இல் பெர்லின் உடன்படிக்கை கையெழுத்தானது. 1396 இல் ஒட்டோமன் பேரரசால் கைப்பற்றப்பட்ட பல்கேரியா மாநிலம் மீட்டெடுக்கப்பட்டது. 

1878 இல் நடந்த ஒட்டோமன் - ரஸ்யப்போரில் ஒட்டோமன்; பேரரசு தோல்வியடைய ஸ்லாவிய ரஸ்யாவின் நட்பு இனமான சேர்பியர்கள் மீண்டும் பலம் பெறத்தொடங்கினர். சேர்பிய தேசியவாதம் பலமடங்கு பலமடைந்தது. ஆனால் இதன் எதிர்விளைவாக கோஸவோ நிலப்பரப்பில் சிறுபான்மையாய் இருந்த சேர்பியர்கள் அல்பேனியர்களால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டனர். கோஸவோ நிலப்பகுதி இஸ்லாமிய அல்பேனியர்கள் ஆதரவு பகுதியாகவும் சேர்பியா ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவத்தை சார்ந்தவர்கள் பகுதியாகவும் உருவெடுத்தது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் சேர்பியர்கள் கையில் மீண்டும் சேர்பிய ஆதிக்கம் முழுமையாக வந்தடைந்தது.

1789 இல் நிகழ்ந்த பிரான்சியப்புரட்சியும் அதைத்தொடர்ந்த எழுச்சிகளும் போல்கன் நாடுகளிலே தெளிவான தொடர் விளைவுகளை ஏற்படுத்தியது. துருக்கியின் ஆதிக்கத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த நாட்டினங்களிற் சேர்பியரே முதலில் வெளிப்பட்டனர். 1804 இல் இவர்கள் கலகக்கொடியை உயர்த்தி 1817 இல் அவ்நாட்டு ஒபரனொவிச்சு குலத்தின் பரம்பரை இளவரசன் ஒருவனின் கீழ் ஒன்றுபட்டு துருக்கியரிடமிருந்து ஓரளவுத்தன்னாட்சியைப் பெறும் வரையும் வீரத்துடன் ஓயாது போர் புரிந்தனர். 

இதன்பின்னர் 1912 அக்டொபர். 08 முதல் 1913 மே. 30 வரை முதலாவது போல்கன் போர் ஏற்பட்டது, ஒட்டோமன் துருக்கிய பேரரசுக்கு எதிராக பல்பேரியா, சேர்பியா, கிரீஸ் மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய போல்கன் நாடுகள் ஒன்றுசேர்ந்து யுத்ததில் ஈடுபட்டமையே முதலாவது போல்கன் போராகும். இப்போரில் போல்கன் நாடுகள் வெற்றி பெற்று தங்களை சுதந்திர நாடுகளாகக் அறிவித்துக்கொண்டன. ஒட்டோமன் துருக்கியர்களுக்கு இவ்யுத்தம் திட்டமிடப்படாத பேரழிவாக இருந்தது.  துருக்கி ஐரோப்பாவில் 83 வீதமான பிரதேசங்களையும் ஐரோப்பிய மக்கள் தொகையில் 69 வீதமான மக்களையும் இழந்தனர். துருக்கியின் மீதமுள்ள அனைத்து ஐரோப்பிய பிராந்தியங்களையும் போல்கன் நாடுகள் கைப்பற்றி பிரிந்துக்கொண்டன. 

ஒட்டோமன் பேரரசின் கீழிருந்த நாடுகள் பல்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டிருந்தன. அந்த மக்களின் தேவைகளை அறிந்து கொள்ளவோ அவற்றுக்கேற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ ஒட்டோமன் பேரரசால் இயலவில்லை. இதனால் ஒட்டோமன் பேரரசின் கீழிருந்து தன்னிச்சையாகத் தம்மை விடுவித்துக்கொண்ட இந்த நாடுகள் தமது பகுதிகளை மீட்கத்திட்டமிட்டன. இதன் அடிப்படையில் பல்கெரியா, சேர்பியா, கிறீஸ,; மாண்டிநெக்ரோ ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பு உருவானது. ஒட்டோமன் துருக்கி பேரரசின் மீது பன்முனைத்தாக்குதல் நடாத்த திட்டம் தீட்டப்பட்டது. பல்கேரியாவின் படைப்பலமும் கிரிஸின் புதுப்பிக்கப்பட்ட கப்பல் படையும் இணைந்து கூடுதல் பலம் சேர்த்தது. 

முதல் போல்கன் போரில் பல்கேரியா இராணுவ ரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாக காணப்பட்டது. பல்கேரிய இராணுவத்தில் 4.3 மில்லியன் மக்கள் தொகையில் மொத்தம் 599,878 ஆண்களை இராணுவத்தில் இணைத்தது. பல்கேரிய இராணுவத்தில் 9 காலாட் படைபிரிவகள் ஒரு குதிரைப்படைப்பிரிவுகள் 1116 பீரங்கிகள் ஆகியன காணப்பட்டது. இராணுவ தளபதியாக ஜார் ஃபெர்டினாண்ட் நியமிக்கப்பட்டதுடன், துணை ஜெனரலாக மிஹைல் சாவோ நியமிக்கப்பட்டனர். பல்கேரியர்கள் 6 டார்பிடோ படகுகளைக் கொண்ட ஒரு சிறிய கடற்படையையும் கொண்டிருந்தனர். பல்கேரியா திரேஸ் மற்றும் மாசிடொனியாவில் தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. பல்கேரியா மூன்று படைப்பிரிவாக பிரிந்து செயற்பட்டது. முதல் இராணுவம் (79,370 ஆண்கள்) ஜெனரல் வாசில் குட்;டின்செவின் கீழ் யம்பொலின் தெற்கே ட்ண்ட்ஷா ஆற்றின் குறுக்கே தன் படை நடவடிக்கைகளைக் மேற்கொண்டது. ஜெனரல் நிகொலா இவானாவின் கிழ் இரண்டாவது இராணுவ பிரிவு (122,748 ஆண்கள்) அட்ரியானொபிலின் கோட்டையைக் கைப்பற்ற நியமிக்கப்பட்டனர். மூன்றாம் படைபிரிவு ராட்கோ டிமிட்ரீவின் கீழ் ஸ்ட்ரான்ஜா மலையைக் கடக்கவும் கிர்க் கிலிஸ் (கோர்க்லரோலி) கோட்டையை கைப்பற்ற நியமிக்கப்பட்டது. 

சேர்பியா முன்னாள் போர் மந்திரி ராடோமிர் புட்னிக் தலைமையில் 258,000 வீரர்களையும் 228 கனரக துப்பாக்கிகளுடன் தனது போர்ப்படைப்பிரிவினை செயற்படுத்தியது. 

ஒட்டோமன் துருக்கி பேரரசு மிகவும் ஆபத்தான வேறொரு போரில் ஏற்கனவே சிக்கியிருந்தது. கிரேக்க அரசறிஞரான M.K வெனிசெலோசும் பல்கேரிய அரசறிஞரான எம். கெசோவும் தம் பொறுமையாலும் திறமையாலும் தம் இருநாடுகளையும் சேர்பியாவையும் மொண்டிநிக்ரொவையும் ஒன்றுபடுத்தி துருக்கிக்கெதிராக ஒரு கூட்டிணைப்பைத் தாபித்தனர். தீபகற்பத்தில் அந்நாடுகளுக்கிடையேயிருந்து முரண்பாடுகளையும் பண்டைதொட்டு பகைமைகளையும் பார்க்குமிடத்து இவ்வொற்றுமை அற்புதமான வெற்றியாகும். 1912 ஒக்டோபர் 8 ஆம் திகதி மொன்டிநீக்ரோ துருக்கி மீது போர்ப்பிரகடனம் செய்தது. 14ஆம் திகதி பல்கெரியா, செர்பியா, கிறீஸ் ஆகிய நாடுகள் கொன்ஸ்தாந்துனெபிளில் தமது இறுதிக்கூற்றைச் சமர்ப்பித்தன. 18ஆம் திகதி வரையில் துருக்கியானது அக்கூட்டிணைப்பு நாடுகள் நான்குடனும் போரில் ஈடுபட்டது.

மறுபுறத்தில் இத்தகைய போரை எதிர்கொள்ள ஒட்டோமன் படைகள் தயார் நிலையில் இல்லை. இளந்துருக்கியர் கலகத்திற்குப் பிறகு பெரிய அளவிலான போர்பயிற்சி எதனையும் மேற்கொள்ளாத துருக்கி படைகளின் தளபதிகளும் அனுபவமற்ற புதியவர்களாக இருந்தனர். போல்கன் அணிப்படைகளின் எண்ணிக்கையினைவிட துருக்கிய படைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கூடுதல் படைகளையும் ஆயுதங்களையும் ஏதுவான சாலை மற்றும் இரும்புபாதை வசதிகளும் இல்லை. 1912 ஆம் ஆண்டில் துருக்கி பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு கடினமான நிலையில் காணப்பட்டது. ஒட்டோமன் துருக்கியின் இராணுவத்திறன்கள் பல காரணிகளால் தடைப்பட்டன. உள்நாட்டு மோதல்கள் தொடங்கி இளம் துருக்கி புரட்சி மற்றும் பலமாதங்கள் கழித்து எதிர்புரட்சிகர சதி ஆகியவற்றால் துருக்கி இராணுவம் பாதிக்கப்பட்டது. 

ஒரு மாதகாலத்துக்குள் எம். கெசோவு வெற்றி உணர்ச்சியுடன் எழுதியது போல போல்கன் நட்புறவு ஒட்டொமன் துருக்கி பேரரசைத் தகர்த்தது. 1,00,00,000 குடித்தொகையுள்ள நான்கு சிறிய நாடுகள் 2,50,00,000 குடித்தொகையுள்ள ஒரு பெரிய வல்லரசைத் தோற்கடித்து விட்டன. ஐரோப்பிய வல்லரசுகளின் வேண்டுகோட்படி பொரு நாடுகள் டிசம்பர் 03 அந் திகதி படைத்தகைவு செய்ய ஒப்புக்கொண்டன. கிரேக்க கடற்படையின் நடவடிக்கைகளை இப்படைத்தகைவு கட்டப்படுத்தலாகாதெனவும் விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அக்கடற்படையானது ஈஜியன் கடலில் முக்கியமான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையே.

படைத்தகைவிற்குச் கைச்சாத்திட்ட பத்து நாட்களின் பின்னர் போரிட்ட நாடுகள் எல்லாவற்றின் பேராளர்களும் இலண்டனிற் கூடினார்கள். இங்கே பிரித்தானிய பிறநாட்டு அமைச்சன் சேர் எட்வேட்டு கிரே முதலில் போரைத்தவிர்க்கவும் பின்னர் அதை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும் தீவிரமாக வேலை செய்;து கொண்டிருந்தான் (1913 ஜனவரி 23 ஆம் திகதி) அமைதிப்பொருத்தணையின் நியதிகளை ஏற்பாடு செய்து முடித்த பொழுது துருக்கிய இளைஞர் கொன்சுதாந்தினோபிளில் ஒரு திடீர் புரட்சியை நிறைவேற்றினர். அதனால் இலண்டணில் நடந்தகொண்டிருந்த இணக்கப்பேச்சுக்கள் சடுதியாக முடிவுற்றன.

இவ்முதலாவது போல்கன் போரில் துருக்கி தோல்வியடைய பல காரணங்கள் விவரிக்கப்பட்டது. இரண்டாம் சுல்தான் அப்துல்ஹமீட்டின் கொடுங்கோன்மை மற்றும் சித்தப்பிரமை ஆட்சியின் கீழ் துருக்கி இராணுவம் சூழ்ச்சிகளிலோ அல்லது யுத்த விளையாட்டுக்களில் ஈடுபடவோ தடைசெய்யப்பட்டிருந்தது. 1908 ஆம் ஆண்டின் இளம் துருக்கியர் புரட்சிக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் இராணுவம் பெரிய அளவிலான சூழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை கற்றுக்கொள்ள போதுமான நேரம் இல்லை. 

துருக்கிய இராணுவம் இரண்டு வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக கட்டாயப்படுத்தப்பட்ட நிசாமியே துருப்புக்களும், 7 ஆண்டுகள் பணியாற்றிய இடஒதுக்கீட்டாளர்களான ரெடிஃப் ஆகியனவாகும். ரெடிஃப் துருப்புக்களுக்கான பயிற்சி பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டது. மேலும் 1912 ஆம் ஆண்டில் போல்கனில் 50,000 ரெடிஃப் துருப்புக்கள் மிகச் சிறந்த பயிற்சிப்பெற்றன. ஒட்டோமன்களுடன்; பணியாற்றிய ஒரு ஜேர்மன் அதிகாரி மேஜர் ஓட்டோ வான் லோசோவ் சில ரெடிஃப் துருப்புக்களுக்கு ஒரு துப்பாக்கியைக் கையாளவோ அல்லது சுடவோ தெரியாது என்று புகார் கூறினார். 

ஒட்டோமன் இராணுவத்தில் மருத்துவ சேவைகள் போன்றன மிகவும் மோசமானதாகக் காணப்பட்டது. வைத்திய பற்றாக்குறை நிலவியதுடன் அம்புலன்ஸ் சேவைகளும் பற்றாக்குறையாகக் காணப்பட்டது. அத்துடன் சில மருத்துவபீடங்கள் அதிக எண்ணிக்கையிலான காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முற்றிலும் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் இறந்தனர். இது மனவுறுதியைச் சிதைத்தது. அத்துடன் இராணுவ வீரர்களுக்கு உணவும் வழங்கமுடியவில்லை. அப்படியிருந்தும் ஒட்டோமன் வீரர்கள் தினசரி 90 கிராம் சீஸ் மற்றும் 150 கிராம் இறைச்சியுடன் வாழ்வாதார நிலைக்கு கீழே வாழ்ந்தனர். ஆனால் நாள் முழுவதும் அணிவகுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் இராணுவத்தின் பெரும்பகுதி நோய்வாய்ப்பட்டு சோர்ந்து போயிருந்தது.

1912 இலையுதிர்காலத்தில் பெய்த கனமழையால் போல்கன் மண்சாலைகளை புதைகுழிகளாக மாற்றியது. இதனால் களத்தில் இராணுவத்திற்கு வெடிமருந்துகளை வைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இது போன்ற காரணங்களால் போல்கன் போரில் ஒட்டோமன் படை பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

போல்கன் போர் பெப்ரவரி 4ஆம் திகதி மீண்டும் தொடங்கி ஏப்ரலில் பிற்பகுதி வரையிலே தொடர்ந்து நடந்தது. மே மாதத்தில் இணக்கப்பேச்சுக்கள் இலண்டனில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. மே 30 ஆம் திகதி அமைதிப்பெருத்தனை கைச்சாத்திடப்பட்டது. கிறீற்றையும் கருங்கடலிலுள்ள மடியாவிலிருந்து ஈஜியன் கடலிலுள்ள ஈனேசுவரையுமுள்ள ஆள்புலங்களையும் துருக்கி கைவிட்டது. இதனாற் கொன்ஸ்தாந்துனேபிளையும் அதன் சுற்றாடலையும் தவிர ஐரோப்பியத் துருக்கி மறைந்தொழிந்ததெனலாம்.  

கிழக்கு திரெஸ் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய விரம்பாத
கிரேக்கமும் சேர்பியாவும் தங்கள் பரஸ்பர வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு லண்டன் உடன்படிக்கை முடிவுக்கு வருவதற்கு முன்பே 01.மே.1913 அன்று பல்கேரியாவுக்கு எதிராக இயக்கப்பட்ட ஒரு இராணுவ கூட்டணியில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து 1913 மே, ஜீன் 01 அன்று “பரஸ்பர நட்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்” செய்யப்பட்டது. இவ்வாறு இரண்டாம் போல்கன் போருக்கான காட்சி அமைக்கப்பட்டது.  ஐரோப்பாவில் துருக்கி பேரரசின் கீழ் இருந்த பகுதிகளை போல்கன் நாடுகள் கைப்பற்றின.  இப்போரில் வெற்றிப்பெற்றாலும் தனக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என பல்கெரியா கருதி இரண்டாம் போல்கன் போருக்கு வழிவகுத்தது. முதல் உலகப்போருக்கு போல்கன் போர் முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் துருக்கியருக்கு எதிரான போல்கன் நாடுகளின் தேசிய எழச்சி அமைந்தது. இனி பல்கேரியரின் சுதந்திரபோராட்டம் பற்றி நோக்குவோம்.

பல்கேரியா எனும் நாடு போல்கன் பிராந்தியத்தில் நீண்ட வரலாற்றினைக் கொண்ட ஓர் நாடாகும். முதலாம் போல்கன் போரின் தொடர்ச்சியாகவே பல்கேரியரின் சுதந்திர போராட்டம் அமைகின்றது.

ஆசிய கண்டத்தின் 1,10,994 ச.கி.மீ பரப்பளவினை உடைய சோபியா நகரினை தலைநகராகக் கொண்டது பல்கேரியா. மற்ற முக்கிய நகரங்களாக ப்ளோவ்டிவ், வர்ணா, புர்காஸ் ஆகிய திகழ்கின்றன.  இதன் எல்லைகளாக கருங்கடல், துருக்கி, கிறீஸ், மெசடொனியா, சேர்பியா, மாண்டிநிக்ரோ, ரொமேனியா ஆகியவற்றைக் எல்லைகளாகக் கொண்டது. பல்கேரியாவின் வரலாற்றுச்சுருக்கத்தினை நோக்கும் போது 1018 வரை தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து வந்த பகுதி அதற்குப் பிறகு பைசான்ட்டியன்ஸ் 1018 – 1185 வரையும் துருக்கி பேரரசு 1398 – 1792 வரை ஆட்சி செய்தது. அந்தவகையில் பல்கேரியாவின் வரலாறு 632 இல் தொடங்குகின்றது. 681 இல் முதல் பல்கேரிய இராச்சியம் “கான் அஸ்பாரு” என்பவரால் நிறுவப்பட்டது. 

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதன் எல்லைகளை மேற்கில் சார்லமேனின் பேரரசிற்கும், தெற்கில் கான்ஸ்டான்டினோபிளுக்கும் விரிவுபடுத்தியது. பின்னர் பைசான்டியம் பல்கேரியாவைக் கைப்பற்றியது. 1018 முதல் 1186 வரை நாட்டை பேரரசர் வாசிலி போல்கரோபாய்ட்ஸி ஆட்சி செய்தார். எனினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்கேரியா ஒட்டோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது. 

1760 களில் தொடங்கிய சுதந்திர போராட்டம் 1878இல் ரஸ்யாவின் உதவியும் கிடைத்தது. இதன் காரணமாக கம்யூனிச சிந்தனைகள், சித்தாந்தங்கள், அரசியல் கொள்கைகள் ஆகிய காணப்பட்டன. 1997 கம்யூனிச கொள்கையிலிருந்து விலகி ஜனநாயக முறைக்கு மாற்றம் ஏற்பட்டு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. 

பல்கேரியா ஆரம்பத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. விடின்ஸ்கி (மேற்கு) மற்றும் டார்னோவஸ்கி (கிழக்கு) இராச்சியங்கள். 1393 ஆம் ஆண்டில் டார்னோவோவின் “அரச நகரம்” ஒட்டோமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 1396இல் கடைசியாக பல்கேரிய நிலங்கள் வீழ்ச்சியடைந்தன. பல்கேரிய பிரபுத்துவமும் மதகுருக்களும் படையெடுப்பாளர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். ஒரு சிலர் நாடுகடத்தப்பட்டனர். இது பல்கொரிய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படுகின்றது. இது ஐந்து நூற்றாண்டுகளாகக் தொடர்ந்தது. பல்கேரியர்களின் எழுச்சிகள் மேற்குத் துருக்கியர்களின் ஆக்கிரமிப்பு அபிலாi~களுக்குத் தடையாக இருந்தன. அந்த நேரத்தில் ஐரோப்பா அமைதியாக அதன் மறுமலர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தது.

பல்கேரிய சுதந்திரபோராட்டம் என்பது ரஸ்யா – துருக்கி போரில் (1877-1878) தொடர்ச்சியான நிகழ்வுகள் ஆகும். இது 1878 மார்ச் 3 “சான் ஸ்டெபனோ” ஒப்பந்தத்pன் கீழ் பல்கேரியாவை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மீண்டும் ஸ்தாபிக்க வழிவகுத்தது. பீட்டரால் எழுதப்பட்ட இவ்ஒப்பந்தம் ஒட்டோமன் துருக்கி பேரரசை 14ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிய பல்கேரியாவின் பெரும்பகுதியை பல்கேரியாவிற்கு திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்தியது. அதே ஆண்டின் பேர்லின் காங்கிரஸில் பேர்லின் உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சான் ஸ்டெபனோ ஒப்பந்தத்pன்படி நிறுவப்பட்ட பல்கேரிய அரசின் பிரதேசங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் பகுதி சுயாதீனமாக செயற்பட்டது எனினும் ஒட்டோமன் துருக்கியின் கீழ் அடிமையாக காணப்பட்டது. இரண்டாம் பகுதி ஒட்டோமன் பேரரசின் தன்னாட்சி மாகாணமாக இருந்தது. மூன்றாவது பகுதியான மாசிடோனியா மற்றும் லோசன்கிராட் அனைத்தும் ஒட்டோமன் பேரரசிற்கு மீட்டமைக்கப்பட்டன. 1908 ஆம் ஆண்டு வரை பல்கேரியா தனது சுதந்திர பிரகடனத்தை அறிவிக்கும் வரை ஒட்டோமன் துருக்கி பேரரசின் கீழ் இருந்தது.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கேரிய தேசிய மறுமலர்ச்சியின்  சகாப்தம் தொடங்கியது. ஒரு சுயாதீன தேவாலயத்திற்கான போராட்டம், புத்தகங்களை வெளியிடுதல் அதேபோல் பல்கேரிய மொழியில் குறிப்பிட்ட கால இடைவெளிகள் மதச்சார்பற்ற பல்கேரிய பள்ளிகளை நிறுவுதல், மொழி மற்றும் கலாசாரத்தை அதிகாரபூர்வமாக்குதல் ஆகிய அனைத்தும் ஒரு தேசத்தை உருவாக்குதற்கான படிகளாகும். 

“ஸ்லாவிக் பல்கேரியரின் வரலாறு” எனும் நூலினை பைஸ்னியா ஹிலெண்டர்ஸ்கி 1762இல் எழுதினார். சர்ச்  தேசிய போராட்டம் துருக்கிய அரசாங்கத்தை பல்கேரியர்களை ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்க கட்டாயப்படுத்தியது. நீலா மடாலயம் பல்கேரியாவின் ஆன்மீக மையமாகக் காணப்பட்டது.

பல்கேரிய தேசிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தில் அரசியல் விடுதலைக்கான இயக்கம் தொடங்கியது. 1869ஆம் ஆண்டில் பல்கேரிய புரட்சிகர மத்திய குழு புக்கரெஸ்டில் நிறுவப்பட்டது. இது ருமேனியாவின் பிரதேசத்திலிருந்து ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வழிவகுத்தது. அதன் முக்கிய நபர் வாசில் லெவஸ்கி (1837- 1873) பல்கேரியரின் தேசிய வீராங்கனை “ சுதந்திரத்தின் தூதர்” என்று அழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக ஒட்டோமன் துருக்கி பொலிஸாரால் தேடப்பட்ட புத்திசாலித்தனமான புரட்சியாளர் இவர். எனினும் செர்பியாவில் பிடிபட்ட தூக்கிலிடப்பட்டார். ஒட்டோமன் துருக்கி ஆட்சிக்கு எதிரான ஏப்ரல் புரட்சி (1876) பல்கேரியரின் தேசிய விடுதலை இயக்கத்தில் ஒர் திருப்புமுனையாக இருந்தது. திரேஸ் பிராந்தியத்தில் இந்த விடுதலை இயக்கத்தில் ;இருந்த ஆயிரங்கணக்கான புரட்சியாளர்கள் பல்கேரியாவுக்காக தங்கள் உயிரை டிகாடத்தனர். அவர்கள்pல் தேசிய கவிஞர் “ரிஸ்டோ போடேவ்” உள்ளடங்குவார். 

1877 முதல் பல்கேரிய இளவரசனான சாக்ஸ் கோபர்கொட்டின் ஃபெர்பினாண்ட் துருக்;கியிலிருந்து சுதந்திரத்தை அறிவித்ததை தொடர்ந்து 1878 இல் மார்ச் 3 இல் பல்கேரிய சமாதான உடன்படிக்கையின் மூலம் சுதந்திரம் அடைந்தது.  முதலாவது போல்கன் போரில் கைப்பற்றிய பிரதேசங்களை வென்றவர்களுக்கிடையே எப்படிப் பகிர்ந்த கொள்வது? அதைப்பற்றி இலண்டன் பொருத்தணை ஒன்றும் கூறவில்லை. 

துருக்கியிலுள்ள ஒட்டோமன் பேரரசின் அலுவல்கள் சம்பந்தமாக முடிவு காணும் உறுத்pக்கு அப்பொருத்தணை ஐரோப்பாவின் பொதுமாத்திரையை மட்டும் இட்டது. ஆனால் நயமடைந்தோரிடையே அந்நயங்களை எப்படிப்பிரித்துக் கொள்வது. அவர்களுக்கிடையிற் காரமான விவாதங்கள் விளைந்தன. இது இரண்டாம் போல்கன் போருக்கு வழிவகுத்தது. ஆதலால் 1913 யூன் மாதம் 2ஆம் திகதி சேர்பியாவும் கிரீசும் பல்கேரியாவுக்கு விரொதமாகக் தற்காப்பு நட்புறவை நிறைவேற்றின. 29 ஆம் திகதி பல்கெரியர் சேர்பியரைத் தாக்கினர். சேர்பியரும் கிரேக்கரும் பல்கேரியரைப் பின்வாங்கி ஓடச்செய்தனர். நட்புறவாளர்களுக்கிடையில் நடந்த இந்தப் போரில் இரு கட்சியினரும் கோரமான கொடிய செயல்களைச் செய்தனர். பின்னர் வேறொரு முனையிற் பல்கேரியாவைத் தாக்கினர். யூலையில் 9 ஆம் திகதி ருமேனியரும் இப்போரிற் சேர்ந்து சிலித்திரியாவைன் கைப்பற்றி சேபியா மீது அணிவகுத்துச் சென்றனர். இந்த நல்வாய்ப்பைத் துருக்கி தவறவிடவில்லை.

துருக்கியர் யூலை 12ஆம் திகதி பெரிதும் நெருக்கப்பட்ட பல்கேரியரைத் தாக்கி எரித்திரியாநோபிளைத் திருப்பிக் கைப்பற்றினர். படுதோல்வியடைந்த பல்கேரியர்  பரிவுகாட்டும்படி கதறினர். யூலை 3ஆம் திகதி படைத்தகைவு நிறைவேற்றப்பட்டது. ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைதிப் பொருத்தனை புகரேட்டிற் கைச்சாத்திடப்பட்டது. சிலித்திரியா என்னும் முக்கியமான கோட்டை ஒட்படத் தொபரூசாப் பிரிவிற் பெரிய துண்டொன்றையும் பல்கேரியா உருமேனியாவிற்கு கையளித்தது. ஏறத்தாழ மசிடோனியா முழுவதிலும் பல்கேரியாவிற்கிருந்த உரிமைகளை அது கைவிட்டது. மசிடோனியாவை சேர்பியாவும் கிறீசும் பங்கிட்டன. கிரிசு எபிரேசு பகுதியைப் பெற சேர்பியாவும் மொன்டிநீக்ரோவும் நோவி பசார் என்னும் பகுதியைப் பகிர்ந்தன. துருக்கியர் பல்கேரியாவிலிருந்து எத்திரியானோபிளைப் மீண்டும் பெற்றனர். மூன்று போர்களிலும் துருக்கி நாற்பது இலட்சம் மக்களை இழந்தது. அதன் 65,350 சதுரமைல் நிலப்பரப்பு 10,882 சதுர மைலாகச் சுருங்கிற்று. சேர்பியாவின் குடித்தொகை 50 சதவிகிதமாய் அதிகரித்தது. அதன் ஆள்புலம் இதனிலும் கூடியது. கிரிசே எல்லா நாடுகளிலும் கூடிய தோயமடைந்தது. மொண்டிநீக்ரோ போல் அதன் குடித்தொகையும் ஆள்புலமும் ஏறத்தாள இரட்டித்தன. இம்புரோசும் தெனதோசும் தவிர்ந்த ஈஜியன் தீவுகளும் கிறீற்றும் கிரிசுக்கு அளிக்கப்பட்டன. உரோட்சு உட்படத் தாதக்கனீசை இத்தாலி தன்னிடம் வைத்துக்கொண்டது. 

ஒட்டோமன் ஆட்சியுடன் பல்கேரியாவின் முறிவைக் குறிக்கும் 1908 ஆம் ஆண்டு அறிவிப்பானது பல்கேரியாவின் இரண்டாவது விடுதலையாகும். 1908 ஆம் ஆண்டில் பல்கேரியா இளவரசர் ஃபெர்எனாண்ட் அரச பட்டத்தை எடுத்துக் கொண்டபோது சுதந்திரத்தை நோக்கி சென்றது. 

முதலாம் உலகப்போரில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா, ஹங்கேரி தரப்பில் பல்கேரியா பங்கேற்றது. ஆகால் பேரழிவில் முடிந்தது. 1919 முதல்  ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் பல்கேரியா மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது. இதனால் ஈஜியன் கடலை இழந்தது. 1919 முதல் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் பல்கேரியா மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது. இதனால் ஈஜியன் கடலை இழந்தது. வெஸ்டர்க் திரோஸ் கிரேக்கத்தின் ஒரு பகுதியாக தெற்கு டோப்ருஜா ருமேனியாவுக்குச் சென்றது. மற்றும் ஸ்ருட்மிகா, போஸ்ன்லெக்ராட் மற்றும் சாரிப்ரோட் ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் குரோடிய, டஸ்லோவேனியன் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டன.

1944 செப்டம்பர் 04 அன்று தேசபக்தி முன்னணியின் அரசாங்கம் நாட்டில் நிறுவப்பட்டது. பல்கேரியா ஜனநாயக சக்திகளின் பக்கம் ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் இணைந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரங்கணக்;கான பல்கேரியர்கள் இறந்தனர். 1946 செப்டம்பர் 15 இல் சோவியத் ஒன்றியத்தின் வெற்றியின் பின்னர் பல்கேரியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. தேசியமயமாக்கல் மற்றும் கூட்டுமயமாக்கல் முறை ஏற்படுத்தப்பட்டது. பல்கேரிய சோவியத் முகாமை என்று அழைக்கப்படும் ஒரு பகுதியாக மாறியது. 1989 நவம்பர் 10 பல்கேரியாவில் ஜனநாயக மாற்றத்தின் தொடக்கத்தை குறித்தது. ஒரு புதிய அரசியலமைப்பு 1991இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகள் மீட்டெடுக்கப்பட்டன. சந்தை பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. 2004 இல் பல்கேரியா நேட்டோவின் உறுப்பினரானது. 2007 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரானது.


SK SANJU 

EUSL                                                                                                                                                                                                    



Thursday, 26 November 2020

அரிஸ்டோட்டிலின் அரசியற் சிந்தனைகள்





மனித சமுதாயம் எப்போது சிந்திக்க தெடங்கியதோ அன்று முதற்கொண்டு மனிதர்களத நடவடிக்கைகள் அறிஞர் பெருமக்களின் சிந்தனப்பொக்கை ஒட்டியே இருந்து வந்துள்ளன. எக்காலத்திற்கும் இந்த உண்மை பொருந்தும்.

எதிர்காலம் நம்மைப் பொறுத்தே உள்ளது. உருவாகும் சரித்திரத்தில் நாமும் ஓர் அங்கம்தான் என்னும் கருத்தே எச்செயலுக்கும் தூண்டுகோலாக அமைந்திடும். சிந்தனைகளை பற்றிய அறிவு இதற்குப் பெருந்துணையாக இருந்திடும். சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிந்தனயாளரான அரிஸ்டோட்டிலின் சிந்தனைகள் உலக வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன என்றால் மிகையாகாது. நவீன சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அரிஸ்டோட்டில் ஓர் துருவ நட்சத்திரமென விளங்கி வருகிறார். சிந்தனை எதற்காக எனச் சிந்தித்த மாபெரும் சிந்தனை சிற்பி இவராவர்.

நல்ல சட்டங்களினால் தேசம் ஆட்சி செய்யப்படுவதனைவிட நல்ல மனிதனொருவனால் அது ஆட்சி செய்யப்படுவதே நாட்டுக்கு சிறப்பெனக் கூறியவர் அரிஸ்டோட்டில். பிளோட்டோவின் மாணவரான அரிஸ்டோட்டில் கிரேக்க அரசியல் சிந்தனையாளர்களில் தலை சிறந்தவர்களிலொருவராகக் கருதப்படுகின்றார். மேலைநாட்டு அரசியல் கோட்பாடுகளை வகுத்த இவரது பிறப்பு கி.மு 384இல் இடம்பெற்றது.பிறப்பினால் ஏதென்ஸ் நாட்டவரல்ல. இவர் கிரேக்கத்தின் குடியேற்றமான மசிடோனியாவில் உள்ள ஸ்ரெஜிராவில் பிறந்தவர். தந்தையார் நிக்கோமாக்ஸ் இவர் அரசவைத்தியராகப் பணியாற்றியவர். இப்பின்னணியில் நீண்டகாலமாகவே அரசகுடும்பங்களுடன் தொடர்புகள் இவருக்கிருந்தது. அரிஸ்டோட்டிலின் தந்தையார் இயற்கை விஞ்ஞானத்தில் ஈடுபாடு காட்டியிருந்ததுடன் அதன்பொருட்டு ஒரு விலங்கு ஆய்வு கூடத்தினையும் கிரீஸில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிளோட்டோவினது மெய்யறிவு ஆற்றலினால் கவரப்பட்ட இவர் கற்பனையாக ஆராய்கின்ற வாழ்க்கைதான் முழுமையான இன்பத்தினைத் தருவாதாக எணணினார். தந்தையாரின் மரணத்தினைத்தொடரந்து அரிஸ்டோட்டில் அவரது தொழிலான மருத்துவத்தினை மேற்கொள்ளுமாறு குடும்ப உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட போதும் அதனை விரும்பாத இவர் அரசியல் தத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பிற்காலத்தில் சிறப்பும் பெற்றார். மேலும் இவர் பிளேட்டோவின் இறப்பினைத் தொடர்ந்து அவருடைய கல்விக்கழகத்தில் 17 வருடங்கள் உறுப்பினராக இருந்து அக்கல்விக் கழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றினார்.

பிளேட்டோவினது சீடராக இவர் இருந்தபோதும் சிந்தனைச் சுதந்திரத்திற்கே முன்னுரிமையினை வழங்கினார். “நான் பிளேட்டோவின் நண்பன்” எனக் குறிப்பிட்டார். இவர் பிளேட்டோவினைப் போன்று அரசியல்வாதியாக இருந்து பிற்காலங்களில் தத்துவஞானியாக மாறியவர் அல்ல.

பிளேட்டோவின் இறப்பின் பின்னதாக மசிடோனியாவிற்குச் சென்ற இவர் அங்கு அலெக்சாண்டருக்குக் கல்வி போதித்தார். கி.மு334இல் ஏதேன்ஸ் திரும்பிய இவர் அங்கு தனியாக லீசியம் எனப்பட்ட கல்விக்கூடத்தினை ஆரம்பித்தார். அக்காலப் பகுதியில் பிளேட்டோவின் கல்விக்கூடம் படிப்படியாக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வந்துகொண்டிருந்த சூழலில் இவரது கல்விக்கூடம் அதற்கு மாற்றீடாக அமைந்திருந்தது. வானியல், உயிரியல், உடற்கூற்றியல், உடலியல், அளவையியல், அரசியல், இலக்கியம், தத்துவம், இயற்கை விஞ்ஞான அறிவியல் போன்ற துறைகளை அவை பிரதிபலித்தன.

பிளேட்டோவின் மாணவராக அரிஸ்டோட்டில் காணப்பட்டாலும் அவருடைய சில கருத்துக்கள் அரிஸ்டோட்டினால் கண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் அவதானிக்கத்தக்கது. பொதுவாகவே இவர் எந்த ஒரு விடயத்தினையும் தான் சொல்வதற்கு முன்னதாக அவ்விடயந் தொடர்பாக ஏற்கனவே உள்ள கருத்துக்கள நனகு ஆராய்ந்து பார்த்து பின்பு தான் தன்னுடைய சிந்தனைகளை வெளியிடுகின்ற இயல்பினைக் கொண்டவர்.
பிளேட்டோவினால் ஆக்கப்பட்ட அரிஸ்டோட்டில் மூலமாகவே பிளேட்டோவினைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் அரஸ்டோட்டிலின் அரசியல் சிந்தனைகள் தொடர்பாக நோக்கலாம்.

அரசினது நோக்கம் மக்களது மகிழ்ச்சியும் ஒழுக்கமுமே என்ற கருத்தினை வலியுறுத்துகின்றார். மனிதன் பேசுதிறன் பெற்றிருப்பதனால் அது அவனுடைய அரசியல் தன்மைக்கான சாட்சயென அரிஸ்டோட்டில் குறிப்பிடுகிறர். பெரும்பாலானவர்களுடைய கருத்து அரசியல் என்ற அரிஸ்டோட்டிலின் படைப்பானது இவரது வாழ்நாளின் கடைசிக்காலத்தில் எழுதப்பட்டதென்பதே. அரிஸ்டோட்டிலின் மாணவர்களில் பலர் பொருள் ஒழுங்கில் சில குறைபாடுகள் இருப்பதாகக்கூறி இதில் சொல்லப்பட்ட கருத்துககளை ஏற்பதற்குத் துணியவில்லை. இருப்பினும் இன்று அரசியல் என்ற இந்நூலானது உலகில் காணப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. மலும் பலரது நடைமுறை வாழ்விற்கு இந்நூல் பொருத்தப்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் காரியத்திலிருந்து காரணத்தை அறிந்துகொள்கினற் தர்க்கமுறையினை லகுக்கு வழங்கினார். பிளேட்டோ தான் காணுகன்ற இலட்சிய அரசியல் உள்ள பொதுவுடைமை சம்மந்தமான கருத்துக்களை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரிஸ்டோட்டில் பொதுவுடைமை முறையில ஐக்கியம் ஏற்படமட்டாதெனக் கூறுகின்றார்; இதனால் இவர் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்ளாது அரசின் ஒற்றுமையுணர்வு என்ற கருத்தினை மையமாகக் கொண்ட அரசியலமைப்பின் தொடர்பகளை அராய்கின்றார் எனலாம். அரிஸ்டோட்டில் தர்க்கம், ஒழுக்கவியல், பேச்சுக்கலை, பௌதீகம், அரசியல், உளவியல், அரசியலமைப்புக்கள் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட நூல்கள் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. அரிஸ்டோட்டடில் எல்லா கிரெக்க நகர அரசுகளுக்கும் ஒரே அரசாங்கம் தேவையென்பதனை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் சமகாலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் இவருடைய அறிவுரையினைக் கேட்கவில்லை. சமகாலத்தில் சிரேக்க நாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் தான் இவரது அரசியல் சிந்தனைகளும் அமைந்திருந்தன. உதாரணமாக அடிமைக் கொள்கையினை இவர் ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.

பிளேட்டோவினைப் போன்று கற்பனை அரசினை இவர் வர்ணித்துள்ளார். அத்துடன் இவர் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்அரசியல் கருத்துக்களை எடுத்துக்காட்டினார். ரசின் முக்கியமான குறிக்கோளாக மக்களது முன்னேற்றமே இருத்தல் வேண்டும்.

அரிஸ்டோட்டில் தான் வாழ்ந்த காலப்பகுதியில் காணப்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புக்கள் பலவற்றினை ஆராய்ந்து அவை எவ்வாறு செயற்பட்டனவென்பதை எடுத்துரைத்தார். இவரது இத்தகைய அரசியல் கோட்பாடுகளை அரசியல் மற்றும் அரசியல் கோட்பாடுகள் போன்ற நூல்கள் விபரிக்கின்றன. அரசியலென்ற நூலின் முற்பகுதியில் அரசு மற்றும் குடும்பம் போன்ற சமுதாயக் கோட்பாடுகளை விபரித்துள்ளார். லிஸியஸ் கழகத்தில் அரிஸ்டோட்டில் இருந்த சமயததில் தான் 158விதமான அரசியல் அமைப்புச் சட்டஙகள ஆராய்ந்த அறிந்த கொண்ட பின் “அரசியல்” என்ற நூலை எழுதினார். அரிஸ்டோட்டிலின் அரசியல் தத்துவம் நகர இராஜ்ஜியங்களின் ரசியல் தத்துவமாக அமைந்தது. அவை அனைத்தும் அவரால் பரிசீலனை செய்யப்பட்டவை. மறைந்து போன நகர இராஜ்ஜியங்களின் அரசியல் அமைப்பச்சட்டங்கள், தன்னைச்சுற்ற நடக்கும் நடப்பு நிலையான ஒன்றல்ல என்றும் நகர இராஜ்ஜியங்கள்தாம் இலட்சிய இராஜ்ஜியங்கள் அவை புத்துயிர் பெற்றுவிடம் என்றும் எண்ணியே தன்னுடைய “அரசியல் “  என்ற நூலை எழுதினார். 

மேலும் அதில் அரசினது தோற்றம் தொடர்பாகவும் அதனது இன்றியமையாமை சம்மதமாகவும் கோட்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார். மனிதர்களைக் கொண்ட அவைகள் எல்லாவற்றிலும் அரசென்பது உயரதரமான வடிவத்தில் காணப்படுகின்றது. மக்கள் நிறைந்த தொகுதியே அரசு. இக்காலத்தின் அடிப்படையில் நோக்குகின்ற போது குடும்பம், கிராமம் என்பவைகளுக்குப் பிற்பட்டவையே. இருப்பினும் தத்துவரீதியாகப் பார்க்கின்றபோது “அரசு” என்பதே முதலிடத்தில் காணப்படும். ஆணும் பெண்ணும் சேர்வதனால் குடும்பம் ஏற்படுகின்றது.
 பல குடும்பங்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நோக்குடன் சேர்வதனால் கிராமம் தோன்றுகின்றது. கிராமங்கள் பல இணைவதன் மூலமாக அரசு தோன்றுகின்றது. எனவெ அரசு மனிதனின் நல்வாழ்வின் பொருட்டுத் தோன்றி மக்கள் முன்னேறறத்தின் பொருட்டுத் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

அரசு எவ்வாறு தோன்றியதென்பது பற்றிக் குறிப்பிடுகின்றபோது இவர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் முன்னேற்றத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறினாரே தவிர உண்மையான அரசியல் முன்னேற்றம் பற்றியதாக அரிஸ்டோட்டிலின் கருத்துக்கள் காணப்படவில்லை என்ற குறைபாடு உள்ளது. அரசாங்கம்; எந்த அடிப்படையில் செயற்பட வேண்டுமெனக் கூறினாரே தவிர அரசுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் பற்றி அவர் அதிகம் சொல்லவில்லை. மேலும் ஒரு அரசு எப்படியிருக்க வேண்டுமெனக் கூறுகின்றபோது நியாயமும் நட்பும் சேர்ந்த வகையில் அரசு அமைதல் வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார். முதலாவது மக்கள் தங்களது நலல சிந்தனையின் மூலமாக அரசாங்கத்தினைச் செயற்பட வைப்பது. அதுபோன்N;ற நட்பும் சமுதாயம் ஒவ்வொன்றுக்கும் அவசியமானது. நட்பினடிப்படையில் அமைக்கப்படுகின்ற அரசானது பலம் மிக்கதாக அமைந்து காணப்படும். குடும்பத்தினைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் அரசாங்கத்திடம் காணப்பட்டது. கல்வியினை வழங்குவதென்பதனை அரசின் கடமைகளிலொன்றாகவும் அரிஸ்டோட்டில் கருதினார்.

இத்தகைய கோட்பாடடில் இருந்தே அரசினது இன்றியமையாமை பற்றிய கோட்பாடு உருவாகியதெனலாம். மனிதன் அரசியல் இயல்பினக் கொண்ட ஒரு பிராணி.  இவன் தன்னைப்போல ஏனைய மனிதர்களுடன் இணைந்த வகையில் அரசில் வாழாதவன். அவன் விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருத்தல் வேண்டும் அல்லது தெய்வத்தினுடைய இனத்தினைச் சேர்ந்தவனாக இருத்தல் வேண்டும். அரசனால் மேற்கொள்ளப்படுகின்ற அதிகாரமானது குடும்பத்தில் தந்தையின் அதிகார வழக்கத்திலிருந்து தோற்றம் பெற்றாலும் அரசும் குடும்பமும் வெவ்வேறானவை.


ஆட்சியாளர் எல்லா மக்களின்மீதும் ஒரேவிதமான அதிகாரத்தைச் செலுத்துதல் வேண்டும். இவர் அரசியலைச் சட்ட அமைப்பென வர்ணிக்கிறார். கலப்பான அரசியல் சட்டத்தினைக் ஏற்றுக்கொள்கிறார். சட்டங்கள் சிறப்பாக அமைகின்றபோது ஆட்சியும் சிறப்பாக அமையும். நா டுநல்ல குடிமக்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும். சாதாரண மனதனுக்கு குடும்பத்தினைப் பொலவெ அவனுக்கு நாடும் அவன் வாழ்கின்ற சமுதாயமும் இன்றியமையாததாகின்றது. இவர் ஜனநாயகத்தின் அவசியத்தினை உணர்ந்திருந்தார்.

மனிதர்களை ஆண்,பெண் வேறுபாடு, தொழில், இயற்கை, இனப்பண்பாடு எனும் 4 கொள்கைகளின் அடிப்படையில் பிரித்து பார்த்த இவர் பெண்களை அரசியலுக்கு ஏற்றவர்களல்ல என ஒதுக்கி வைக்கிறார். இயற்iயின் அடிபபடையில் மனிதர்களை சுதந்திரமானவர்கள், அடிமைகள் என வேறுபடுத்தி அடிமைகளையும் அரசியலுக்கு பொரத்தமற்றவர்கள் என குறிப்பிடுகிறார்.

உன்னதமான கற்பனை அரசானது மக்களின் பொருளாதார, மூக, அரசியல் வாழ்வ்pறகுப் பாதுகாப்பளித்தல் வேண்டும். அரசு வேற்றுமையில் ஒற்றுமையினை ஏற்படுத்துகின்ற வகையில் அமைக்க வேண்டும். அரிஸ்டோட்டிலின் கற்பனை அரசில் காணப்படுகின்ற மக்கள்  பிரிவுகளுக்குள் அடங்குகின்றார்கள. குருமார்கள், நட்டங்கள இயற்றுபவர்கள், ஆட்சயாளர்கள், டையினர், முதலாளிகள், தொழிலாளிகள், சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளுபவர்கள் என்ற பரிவினர்களே அவர்கள். இத்தகைய பிரவனர்கள் சறப்பாகத் தங்களுக்கேயுரிய கடமைகளைச் சிறப்பாக செய்கின்றபோதுதான் கற்பனை அரசானது சிறப்பாகச் செயற்படமடிகின்றது. .வர் மக்கள் தொடர்பாக முன்வைத்த கோட்பாட்டில் நகரரசு என்பதனையும் கிரேக்கர் என்ற இன உணர்வினையும் அடிப்படையாகக் கொண்டு கூறியுள்ளார். இவரது கருத்தின் பிரகாரம் குடிமக்கள் என்பவர்கள் ஆளுதற்கும் ஆளப்படுவதற்கும் தகைமைகளை அடைந்து நளாந்தத் தொழில்களப் பெறறு அன்றாட வாழ்க்கைக்குத் தேவயான பொருட்களை கையாள்கின்ற தொழில்களில் இருந்தும் விலகியிருக்க வேண்டும். பிறருடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தொழில் செய்பவர்கள் மக்களாகமாட்டார்கள்.

சட்ட ஆட்சி என்பது இவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. போர் தவிர்க்க முடியாதது. இருபபினும் அதனைத தவிர்;த்தல் நன்று. இது ஏற்படுவதற்குக் பல காரணங்கள உள்ளன. போருக்குப் பின்னதாக உள்நாட்டில் புரட்சிகள் ஏற்படலாம். தொடர்நது இவற்றால் மாறுதல்கள் நாட்டில் ஏற்படலாம். புரட்சிகளுக்கும் பல காரணங்கள் இருப்பதாக அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பு என்ற வகயில் அரசாங்கத்தின் உறுப்புக்களான சட்டம் இயற்றுகின்ற பிரிவு, நிர்வாக பிரிவு நீதிமனறங்கள் போன்றவற்றினது எண்ணிக்கையும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளும் இயங்குகின்ற முறைகள் பற்றியும் அரசின் இறைமை அதிகாரங்கள் குவிந்திருக்கின்ற இடங்கள் பற்றியும் இவரால் கூறப்பட்டுள்ளது. இறைமை அதிகாரம் யாரிடத்திலிருக்கின்றது என்பதனை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப் வகைப்படுத்தப்படுகினறது. இறைமை அதிகாரம் மக்களிடத்தில் காணப்படும்போது அந்நாட்டினது அரசு மக்களாட்சி எனப்படகின்றது. அரசாங்கத்தின் நோக்கம், இறைமை அதிகாரம் தங்கியிருக்கின்ற மக்களி;ன் டிதாகை என்பவைகளைப் பொறுத்தும் அரசியலமைப்புக்கள் பாகுபடுத்தப்படுகின்றன. எனவே அரசாங்கத்தினது நோக்கம் தூய்மையானது மற்றையது தூய்மையற்றதென அறிந்துகொள்வதற்கு இது ஒரு அளவு கொலாக அமைகின்றது. அரசு மக்களது வளர்ச்சினை அடிப்படையாகக் வைத்துச் செயற்பட்டால் அது தூய்மையான ஆட்சியெனவும் ஆட்சி செய்பவர்கள் தங்களது நலன்களை கருத்திற் கொண்டு செயற்பட்டால் தூய்மையற்றதாகவும் காணப்படும். இதனால் குறிக்கோளுக்குப் பொருந்துகின்ற வகையில் காணப்படுவது தூய்மையானதெனவும் அதனலிருந்தும் பிரிந்து நிற்பது தூய்மையற்றதெனவும் கொள்ளப்படுகின்றது.
அவர் அரசியலமைப்பின பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்

தூய அரசாங்கவகை                                             தூய்மையற்ற அரசாங்க வகை

முடியாட்சி                                                                       சர்வாதிகாரம்

உயர் குடியாட்சி                                                           செல்வச் சிறுகுடியாட்சி

மிதமான குடியாட்சி                                                   குடியாட்சி


வாழ்கின்ற சமுதாயத்தில் குறிப்பிட்ட நபர் ஏனையோரின் செல்வாக்குப் பெற்றவரா திகழ்கின்றபோது அக்குறிப்பிட்டநபர்  முடியாட்சியினை மேற்கொள்ள முடிகின்ற அதேநேரத்தில் அவர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பதவிக்கு வந்தவராக இருத்தல் வேண்டும். சர்வதிகார ஆட்சி என்பது மக்களால் விரும்பப்படாத அதேநேரத்தில் அவ்வகையான ஆட்சியானது வன்மைமுறைகளை அடிப்படையாக கொண்டு காணப்படுகின்றது செல்வச்சிறுகுடியினர்களது ஆட்சியென்பது குடியாட்சியினைப் போண்றதே இருப்பினும் ஆட்சி செய்பவர்களது தெகைமற்றும் பொருளாதார காரணிகளே இவற்றினை வேறுபடுத்துகின்ற தன்மைகள் கொண்டதாக காணப்படுகின்றது. செல்வச்சிறுகுடியினரின் ஆட்சியில் ஆட்சியாளர்களின் எண்ணிக்கையில் குறைந்த இவர்கள் தொகையில் அதிகரித்த வறியவர்கள் மீது செல்வாக்கினை செலுத்துவார். அதாவது அரசாங்க அதிகார பகிர்வானது செல்வத்தினை ஆதாரமாகக் கொண்டு காணப்பட்டால்; செல்வச்சிறுகுடியினர்களது ஆட்சி ஆகும். குடியாட்சியில் வறியவர்களது செல்வாக்கானது பணம் வசதிகள் படைத்த வகுப்பினர்கள் மீது செல்வக்கினை ஏற்படுத்துகின்றது. மிதமானவகை குடியாட்சியல் அரசாங்க நிர்வாக இயந்திரமானது பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுக் கோட்பானது பின்பற்றப்பட்டிருக்கும். அதாவது சட்டம் நீதி நிர்வாகம் போண்ற அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும். அலுவலர்கள் தேர்தல் அல்லது திருவுளச்சீட்டு முறையின் பிரகாரம் தேர்வு செய்யப்படுவார்கள்

அரிஸ்ரோட்டில் அரசியலமைப்புகளுக்கிடையில் காணப்படுகின்ற வேறுபாடுகளை சில விதிகளை அடிப்படையாகக்கொணடு விளக்குகின்றார். அவை முக்கியத்துவம் கொண் மூன்று பிரிவுகளாக் காணப்படுகின்றன. சட்டமனறம், நிர்வாக அதிகாரிகளது குழு, நீதிமன்றம் போன்றனவே அத்தகைய பிரிவுகளாகும. இவற்றினது செயற்பாடுகள் பொறுத்து நாடுகளின் அரசியலமைப்புக்கள் வேறுபடுவதாகக் குறிப்பிடுகின்றார். மிகச் சிறந்த அரசியலமைப்பு எது என்பதற்கு இவர் சமகாலத்தில் மக்களால் விரும்பப்படுகின்ற அரசு சில குறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய அரசு எதுவென்றும் கருத்துக்களளை முன்வைத்துள்ளார்.

அதாவது தகுதியுடையவர் ஆட்சி செய்கின்ற போது முடியாட்சிதான் சிறந்தது. தகுதியும் திறமையும் கொண்ட சிலர் ஆட்சி செய்கின்றபோது உயர் குடியாட்சியே ஏற்றது. நடைமுறையில் தீவிரத்தன்மைகளை விடுத்து நடுவு நலைமையுடன் செயற்படக்கூடிய அரசே சிறப்பானது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வறியவரகளும் செல்வம் படைத்தவர்களும் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் அங்கே நிலையான அரசியலமைப்பு எவையும் செயற்படமுடியாது. இது இரு பகுதியினரின் ஆதரவினையும் பெறுவதென்பத மடியாத காரியம். அந்தவகையில் நடைமுறையில் இரு வகுப்பினரையும்விட நடுத்தர வகுப்பு எந்த அரசில் உறுதியாகக் காணப்படுகின்றதோ அது சிறந்த அரசாகக் காணப்படுவதுடன் அங்கு அமைதி, ஒழுக்கம் என்பனதொன்றுமெனவும் அரிஸ்டோட்டில் குறிப்பிடுகின்றார். இத்தகைய நிலைமை காணப்படாத அரசு மிதமான குடியாட்சியினக கொண்டிருக்கும். இதில் சுதந்திரமான கோட்பாடும் சொத்துடைமைக் கோட்பாடும் சேர்ந்தவகையில் காணப்படும். இதனையே இவர் சிறப்பான அரசியல் திட்டமாகக் கொள்ளுகின்றார்.

குறிப்பிட்ட ஒருவர் அரசியல் அதிகாரத்தினையோ அல்லது செல்வத்தினை வளர்ப்பதிலோ அக்கறையினைக் காட்டாமல் அவர் தனது திறமையினை வளர்த்துக் கொள்கின்ற வகையில் செயற்பட வேண்டும். வேலை போன்றன இலட்சிய அரசின் குறிக்கோள்கள அடைவதற்கு ஏறறதாகக் காணப்படுதல் வண்டும். அரசாங்கத்தின் கட்டுப்பாடடில் காணபபடக்கூடிய அளவு அரசே சனத்தொகையாக இருத்தல் வேண்டும்.

அரசாங்கமானது மக்களுக்கு கல்வயினை ஏற்படுத்தககூடிய ஆசிரியராக இருக் வேணடுமென்பதுடன் கட்டாயக் கல்வியானது அரசாங்கத்க்கு இன்றயமையாதது ன்கின்றார். ல்வியினை மக்களுக்கு சரானமுறையில் வழங்குவதே அசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. உடற்பயிற்சி , இசைப்பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும். ம்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் கண்காணித்தல் வேண்டும். அரசாங்கம இத்தகைய நடவடிக்கைகளக் மேற்கொள்கின்றபோது தான் மாணவர்கள் சிறந்த முறையில் வளர்வற்கான வாய்ப்புகள் அதிகமாகுமென்பது இவரது கருத்தாகும்.

அரசாங்கத்தினால் ஏற்படுகின்ற பயனகள் தொடரபாகவும் அரிஸ்டோட்டில் கருத்துக்களை முன்வைத்துள்ளார. இது தொடர்பாகத் தனது கருத்துக்களை முன்வைக்கின்றபோது அது சமுதாயத்தினைக் கட்டுப்படுத்துவதற்காகவே என்கிறார். அரசியல் வாழ்க்கைக்காகவே அவன் சேர்ந்து வாழ்கின்றான். அரசாங்கம் அரசியல் அமைப்புக்களிடையே வேறுபாடுடையது. அரசாங்கம் அரசின் முக்கிய அம்சமாகும்.

புரட்சிகள் நாடடில் ஏற்படுவதற்குப் பல காரணங்களைமுன்வைக்கின்றார். இருப்பினும் இத்தகைய புரட்சிகள் அமைதிக்கும் ஒழுக்கத்திற்கும் கேட்டினை வழங்கக்கூடிய வகையில் காணப்படுவதனால் அவற்றினைத் தவிர்ப்பது அரசாங்கத்தின் கடமைகளிலொன்றாகவும் கருதப்படுகின்றது. புரட்சிகளைத் தவிர்த்துக்கொள்வதென்பது எப்பொழுதும் நன்மை தருவதாகவே காணப்படும்.

தனியொரு மனிதனுடைய பண்பாக அரசு காணப்படுகின்றது. அரசு மனிதகுலத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். அரசினால்தான் மனிதனை வழிநடத்த முடியும். அது அவனுக்காக அர்ப்பணிப்பில் ஈடுபடுதல் வேண்டும்.

இன்றைய அளவுகோலின்படி நோக்கும் போது அரிஸ்டோட்டிலின சில கொள்கைகள் மிகவும் பிற்போக்கானவையாக இரக்கின்றன. எடுத்துக்காட்டாக, அடிமை முறையை அவர் ஆதரித்தார். அடிமைமுறை இயற்கை விதிக்கு உட்பட்டது என்றார். பெண்கள இயற்கையாகவே ஆண்களை விட தாழ்ந்தவரகள் என்று அவர் நம்பினார்.

கி.ம 323இல் அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னதாக மசிடோனியாவுக்கும் ஏதேன்சுக்கும் முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலையில் மசிடோனிய அரசுடன் தொடர்புகள் வைத்திருந்த இவர் நாட்டினை விட்டு வெளீயேறவேண்டிய சூழ்நிலையேற்பட்டது. தப்பிச் சென்ற மறுவருடத்தில் சாலிக்ஸ் என்ற இடத்தில் மரணமடைந்தார். 400 நூல்களை இவர் எழதியதாகக் கூறபபடகின்றது. இவற்றில் nரு;பாலானவை அழிந்துவிட்டன. அவையும் வாழ்க்கையின் கடைசி 13 வருடங்களில் எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றது. தன்னுடைய எழுத்துப் பணிகளை தொடர்ச்சியாக 50 வருடங்கள் மேற்கொண்டு கிரேக்க சிந்தனைகளுக்கு மெருங்கேற்றியவர். அந்தவகையில் இவருடைய சிந்தனைகள் பின்னாளில் சில விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டபோதும் இவரைப்போன்று பரந்த சிந்தனைகள் கொண்டவர்கள் உலகத்தில் மிகவும் குறைவென்பதே உண்மை.
 














நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் மக்கியவெல்லி .





    நிக்கலொ மக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்ககோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவல்லி (NICCOLO DI BERNARDO DEI MACHIAVELLIஒரு இத்தாலிய ராஜதந்திரியும் அரசியல் மெய்யியலாளரும், இசைக்கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மறுமலர்ச்சி  காலத்தின் மாபெரும் அரசியல் மற்றும் வரலாற்றுச் சிந்தனையாளர் நிக்கலோ மக்கியவெல்லி. இவர் தன்னுடைய அரசியல் அனுபவத்தினைக் கொண்டு எதிர்காலத்தேய அரசியல் விளைவுகளை சரியாக முன்கணிப்புச் செய்தார். இத்தாலிய ஆட்சியாளர்களிடையே சமரசம் பேசினார். மனிதர்கள் தினமும் எப்படி ஒழுகுகின்றார்கள் எக்பதனை உணர்ந்த கொள்ள விரும்பி அதனையே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகவும் கொண்டு செயற்பட்டார். மனிதர்களது செயற்பாடுகள், அவற்றினது நோக்கங்கள், விளைவுகள் பற்றிய பல தகவல்களை பொறுமையொடு திரட்டி அய்வு செய்து கோட்பாடுகளை உரவாக்கினார். கடவுள் நம்பிக்கை எதுவுமற்ற பகுத்தறிவாளருக்கும் இவருக்குமிடையிலே எந்தவிதமான வேறுபாடுகளும் இருக்கவில்லை. மறுமலர்ச்சி காலத்தில் அவரைப்போன்று அவருக்கு முன்னால் புதுமையாக சீர்தித்தவரெவருமில்லையென்றெ கூறலாம்.

அரசியல் வரலாற்றினை எடுத்து நோக்குவோமேயானால் அரசியல் பற்றிய ஆய்வுகள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்றன. பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு அறிஞர்கள் தோற்றம் பெற்று தமது கருத்துக்களையும் கோட்பாடுகளையும் தெரிவித்து இருப்பதைக் எம்மால் அவதானிக்க முடியும். இவ்வகையிலே நவீனகால அரசியலின் தந்தை என வர்ணிக்கப்படும் மக்கியாவல்லி நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை நோக்குவோம்.

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற புளோரன்ஸ் நகரத்தில் கி.பி 1469 மே 1இல் மக்கியாவல்லி பிறந்தார். அவர் தந்தை பெர்னான்டோ மக்கியவெல்லி வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்தார். தாயார் பர்த்தோலாம்மியா டி ஸ்டீபனோ நெல்லி.  இருவரும் புளொரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். ஆரம்பம் முதலாகவே கல்வியில் ஆர்சம் கொண்ட இளைஞராக காணப்பட்டார். அரசாங்கத்தில் சிறிய தொழிலில் சேர்ந்து இவர் படிப்படியாக தனத திறமையின் மூலமாக அமைச்சகப் பதவிpயினைப் பெற்றுக்கொண்டார். அரசுக்கு ஆலோசனை கூறுவதில் மக்கியவெல்லியின் பங்கு அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது.

இவர் அரசில் உயர்பதவியில் இருந்தமையின் பின்னணியில் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள, இராணுவத் தலைவர்கள் மற்றும் சமகால பிற உலகத் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமார்கள் போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகக்கூடிய சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட்டதனால் அவர்களிடமிருந்து மக்கியவெல்லி பல்வேறு அனுபவங்களினை உள்வாங்கிக்கொண்டார். குறிப்பாக சமகாலத்துப் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி போன்ற நாடுகளின் மன்னர்களோடும் தொடர்பு வைத்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிய மன்னன் 12ஆம் லூயியுடன் இரகசியப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டார். 1503இல் போப்பினைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலை நேரடியாகக் கவனிப்பதற்கு உரோமபுரிக்கு மக்கியவெல்லி அனுப்பப்பட்டார். தொடர்ந்து புதிய போப்பாண்டவரின் தூதுவராக நியமிக்கப்பட்டார் இருப்பினும் மெடசி குடும்பமானது மீண்டும் புளோரன்சின் அரியணைக்கு வந்ததும் 1512 நவம்பர் 7இல் மக்கியவெல்லி வேலைநீக்கஞ் செய்யப்பட்டார். அவ்வம்சத்தினரால் சிறைவைக்கப்பட்ட இவர் விடுதலையடைந்ததும் காஸ்யானோ என்ற இடத்திற்குச் சென்று அங்கு தன்னுடைய வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இக்காலக்கட்டத்திலிருந்துதான் மக்கியாவல்லியின் எழுத்துப்பணி ஆரம்பித்தத எனலாம். தம்வாழ்வின் பெரும் பாகத்தை தனது நாட்டுப்புற பண்ணையில் தான் கழித்தார். அப்போது தான் புகழ் பெற்ற நூலாகிய “இளவரசன்” எனும் நூலை எழுதினார். இளவரசன் மற்றும் லிவி மீதான உரைக்கோவை ஆகிய இரு நூல்களும் மக்கியாவல்லியின் இரு முண்னணி புத்தகங்களாகும்.

           இடைக்காலத்தின் இறுதியளவில் இத்தாலியினது அமைப்பு 5 பெரும் பிரிவுகளால் ஆளப்படலாயிற்று. வெனிஸ், புளோரன்ஸ், நேப்பிள்ஸ், மிலான், உரோமன் தேவாலயம் போன்ற பிரிவுகளே அவை. மேலும் இவற்றுக்கிடையிலே ஒற்றுமையும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் போப்பின் நடவடிக்கைகளே இத்தாலியினது ஒற்றுமையின்மையினைக் குறைத்து வந்தமை நோக்கத்தக்கது.

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடப்போகின்றதென்ற அச்சத்தின் காரணத்தினால் போப் நாட்டில் இத்தகைய ஒற்றுமையின்மையை ஆதரித்து வந்தார். அரசருக்கும் போப்பிற்குமிடையிலான போராட்டங்களும் நாட்டினது அமைதியின்மையினைக் குறைத்து வந்தது. ஆட்சியாளர்களும் ஜனநாயகத்தினை மதிக்கவில்லை. அரசியற் கொலைகள், கடத்தல்கள் என்பன சர்வசாதாரணமாக அங்கு நடந்த வந்தன. அந்தவகையில் இத்தாலியினது குழப்பமான அரசியல் நிலையில் அதனைக் குழப்பமற்ற நாடாக்க வேண்டுமென்ற முயற்சியில் முக்கியத்துவம் பெற்றவர் மக்கியவெல்லி.

அரசியல் நிலைப்பாட்டினை வரலாற்று ரீதியாக அறிய வேண்டுமென்று எண்ணினாரே தவிர பிற விடயங்களில் அவர் தலையிடவில்லை. தமது கால அரசியலில் தீவிரமான அக்கறையினைச் செலுத்தினார். தன்னுடைய கருத்துக்களை நிரூபிப்பதற்கு அவர் வரலாற்றுக் காரணங்களினை ஆராய்ந்தார். அரசியல் தத்துவத்தினை விட நடைமுறை அரசியலில் ஆர்வங்காட்டினார். அரசாங்கம் இயங்கும் முறை அதனை இயக்ககின்ற சக்தி போன்றவற்றில் அக்கறை காட்டினார். தனிப்பட்ட நபர்களுக்காக மட்டுமன்றி சகலருக்கும் பயன்படுகின்ற வகையில் அரசு பணியாற்ற வேண்டுமென்று எண்ணினார். 

வலிமை அதிகரிக்க வேண்டுமாயின் அரசன் கருணை காட்டுதல் கூடாதெனப் போதித்தார். முன்னர் குறிப்பிட்டது போன்று மக்கியவல்லிக்கு முன்னதாக இவரைப் போன்று புதுமையான சிந்தனைகளை அரசியலில் மேற்கொண்டவர்கள் எவருமில்லை எனக் கூறலாம். உலக விடயங்களில் தெய்வத்தின் தலையீடு சிறிதும் இல்லையென்பதே இவரது வாதமாகும். அரசியலையும் சமயத்தையும் பிரித்த பெருமைக்குரியவர் மக்கியவெல்லி. அரசினை மனிதனுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற கருவியாகவே இவர் கருதினார். மதத்தலைவர்களது அறிவுரை தேவைப்படுகின்ற சமயத்தில் மட்டும் அதனைப் பெற முடியும். இதனால் நடைமுறை அரசியல் பொறுத்து மதமானது எந்தவிதமான பங்கினையும் வழங்கவில்லை. அந்தவகையில் மதத்தினுடைய தலையீடு அரசியலில் தேவையற்றதென்பது இவருடைய கருத்து. இத்தாலியின் ஐக்கியத்தினை எதிர்பார்த்து நின்ற மக்கியவெல்லி அதன் பொருட்டுப் போப் பாண்டவரினை எதிர்த்து நின்றார். இதற்காக எந்தவிதமான குறுக்கு வழிகளையும் இராஜதந்திரத்தினையும் கூடப் பயன்படுத்துவதற்கு விரும்பியிருந்தார். மேலும் அரசியல் கலையானது மனிதனுடைய சுயநலமே. அத்துடன் நாகரிகத்தினடிப்படையில் கற்றுக்கொள்வதன்று என்பதனைத் தன்னுடைய நீண்ட நாளைய அனுபவத்தின் மூலமாக அறிந்த கொண்டார். பொருளாதார சிறப்பே அரசியலுக்கு அடிப்படையெனவும் ஏற்றுக் கொண்டார்.

செல்வமானது நாட்டு மக்களிடையே எவ்வாறு பகிரப்பட்ட காணப்படுகின்றதோ அதனடிப்படையிலே தான் ஆட்சி செய்கின்ற அதிகாரங்களும் அமைந்திருப்பதாகக் கண்டறிந்தார். சூழ்நிலைகளின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் அரசியலமைப்புகள் காணப்படுவது சிறப்பானதென மக்கியாவல்லி கருதினார். ஸ்பர்ட்டா, வெனிஸ், உரோம் ஆகியவற்றினுடைய குடியரசு முறையிலான அரசாங்கத்தினைப் பாராட்டினார். செல்வந்தர்களது ஆட்சியினை ஆதரிக்கவில்லை. சிறப்புடைய ஆட்சியென கலப்பாட்சியைக் கருதினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தன்னுடைய காலத்தில் இருந்திருப்பாரெயானால் அரசும் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் இருந்திருப்பர் எனக் கூறுகிறார்.

 இவருடைய  இளவரசன்  என்ற நூலில் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும்.    எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை அதில் எடுத்துக் கூறுகிறார். அரசனானவன் தன்னுடைய பதவியினைக் காத்துக் கொள்கின்ற அதேவேளை எதிரிகளை அவன் அடக்குதல் வேண்டும். புரட்சிகள் நாட்டில் ஏற்படாத வண்ணம் அவன் நாட்டினைக் காத்திடுதல் வேண்டும். அவன் எதிரிகளை தோற்கடிக்க எண்ணுகின்ற போது அதனை அவன் பகிரங்கமான காரணங்களோடு சரியான வழியில் மேற்கொள்ளுதல் அவசியம். மக்களுடைய சொத்துக்களில் கைவைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

அரசன் கொடியவன் என்ற பெயர் தனக்கு கிடைத்துவிடுமோ என அவன் ஒரு போதும் அஞ்சக்கூடாது. கடுமையான போக்குடன் கொடூரத்தன்மையும் அவனுக்கிருத்தல் வேண்டும். நாடு விரிவுபடுத்தப்படுவதனை ஆதரித்தார். அரசனது அதிகார எல்லையினை அதிகரிப்பது தொடர்பான விடயங்களே இவரது நூலில் காணப்படுகின்றது. அரசு தன்னுடைய எல்லைகளைப் பெருக்;க வேண்டும் அல்லது அழிந்துவிடவேண்டுமென்பது இவருடைய எண்ணமாகும். உரோமின் கொள்கையினை இவர் பாராட்டினார். தந்திரமும் அறிவுடைமையும் அரசியலுக்கும் இன்றியமையாதன என்பது மக்கியவெல்லியினுடைய வாதமாகும்.

டான்ரே போலவே இவரும் தேசபக்தி கொண்டவராக காணப்பட்டார். ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளது அரசியலமைப்புக்களைப் பாராட்டினார். திறமையான நிர்வாகியாகவும் அரசியல் நிர்வாகியாகவும் இராஜதந்;திரியாகவும் விளங்கினார்.

இவருடைய மக்களால் அரசன் விரும்பப்படுவதை விட அவனைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டுமென்ற கொள்கை சிறப்பானது. இவ்வாறு இவர் கருதியமைக்கு முக்கியமான காரணம் அவர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற எண்ணம் மக்கள் பற்றி அவர் மனதில் காணப்பட்டதே. மக்கள் சுயநல நோக்குடையவர்கள். சபல புத்திக்காரரர்கள் நன்றி மறந்தவர்கள். இவர்களைக் கட்டுப்படுத்திவிட்டால் அவர்கள் அரசருக்காக உயிரையும் கொடுப்பர.; அதே நேரத்தில் அரசன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் அரசரை அழித்துவிடவும் தயங்கமாட்டார்கள். சமகாலத்தில் இவர் இத்தகைய நிலையினைக் கருத்திற் கொண்டு இக்கருத்தினைக் குறிப்பிட்டிருந்தாலும் கூட அக்கருத்தஸ்ரீதுக்கள் இக்காலத்திற்கும் பொருந்துவனவாக உள்ளன. ஒன்றினை ஆராய்ந்து அதனை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்கியாவல்லியினது குறிக்கோள்.

 சமகாலத்தில் இத்தாலியில் குடியரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் சர்வாதிகார அட்சி ஏற்பட்டமையினைக் கருத்தில் கொண்டுதான் மக்கியவல்லி குடியரசு நடைமுறைக்கு ஏற்றதன்று எனக் கூறுகின்றார். அரசனுக்குப் பல்வேறு ஆலோசனைகளை இளவரசனில் இவர் குறிப்பிடுகின்றார். அரசன் தான் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அரசனே நேரடியாகச் சென்று சில காலத்திற்காவது சட்டம் ஒழுங்கினை மேற்பார்வை செய்து கொள்ளுதல் வேண்டும்.  கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ஜனநாயக முறைப்படியான ஆட்சியினை இவர் ஆதரிக்கவில்லை. மாறாக அப்பகுதிகள் சில காலத்துக்கு மோசமான ஆட்சியாளர்களது பொறுப்பில்விட வேண்டுமெனவும் அவ்வாறு விடப்படும்போது தான் அங்கே மிகக்குறுகிய காலத்தில் சட்டம், ஒழுங்கு போன்றன நிலை நாட்டப்படமெனக் கூறுகிறார். இருப்பினும் நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன் அத்தகைய கொடுங்கோலாச்சியாளர்களை அகற்றி விடவேண்டும். இது மக்கள் பொறுத்து அச்ச உணர்வினை ஏற்படுத்தும். ஏதேசச்சதிகாரிகளால் ஆட்சி செய்வது என்பது ஒர் முறையாகவும் ஜனநாயகமுறைப்படியும் மக்களுக்காக ஆட்சி செய்வதென்பதும் மற்றொரு வழியாகும்.

பழமையான அரசுகளுக்கும் புதிய அரசுகளுக்கும் அவற்றுக்கு முக்கியமான அடிப்படைகளாக விளங்குபவை சிறந்த சட்டங்களும் அரசனது படைகளுமே. அரசில் சிறந்த படைபலம் காணப்படாத நிலையில் நல்ல சட்டங்கள் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. இதனால் எங்கு படைபலம் சிறந்த முறையில் காணப்படுகின்றதோ அந்த நாட்டில் நல்ல சட்டங்கள் காணப்படும்.

சமயத்தின் பின்னணியில் இயங்குகின்ற அரசுகள் எப்போதும் நிலைத்திருக்கமாட்டா. சிறந்த அரசுகள் உறுதித்தன்மை அற்றவை. இறுதியில் இவை சர்வாதிகாரிகளிடம் சென்று விடும். மதச்சார்பான அரசுகளின் குறைபாடுகள் பலவற்றினை விபரிக்கின்றார். ஒற்றுமையின்மை , பேராசை. நன்நடத்தைகள் கட்டுப்பாடுகள் இருக்கமாட்டாது போன்ற இயல்புகள் அவை கொண்டிருக்கும். கடவளிடம் பயமோ பக்தியோ இருக்கமாட்டாது. பலம் வாய்ந்த படைகளைக் கொண்டிருக்க மாட்டாது. அரசன் வேட்டைக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்கியாவல்லி வலியுறுத்தினார். அரசன் ஓய்வு காலங்களில் அவன் வேட்டைக்குச் செல்லும் போது தான் அவனால் தன்னுடைய எல்லைகளின் அளவினைக் அறிந்துக் கொள்ள முடிவதுடன் அவனால் சிறப்பாகவும் இயங்க முடியாது.

நாடுகள் இரண்டு சமபலமான நிலையில் மோதுகின்ற போது அரசன் எந்த நாடு வெற்றி வாய்ப்பினைப் பெறுகின்றதென அறிந்துகொண்டு அவற்றுடன் சேர்ந்து கொள்ளுதல் வேண்டும். மேலும் இளவரசன் எனும் நூலில் 17, 23, 24 போன்ற அத்தியாயங்களில் அரசனது கடமைகள் ஆட்சி செய்யும் முறைகளை விவரிக்கின்றன.

இவரது இளவரசன் எனும் நூலின் கருத்துக்களை நோக்கும் போது இவரும் ஏனைய அரசியல் சிந்தனையாளர்களைப் போலவே சூழ்நிலையின் தாக்கத்தற்கு உட்பட்டவராகவே காணப்படுவதை அவதானிக்கலாம். ஏனெனில் இவரின் கருத்துக்களில் முக்கிய இடம்பெற்றது அரசே ஆகும். இவர் ஒழுக்கம், மதம், கலாசாரம் என்பவற்றின முக்கியப்படுத்தவில்லை. அதிகாரத்தின் மூலமே அரசாட்சி செய்யலாம் என்பதை வலியுறுதிதுகின்றார். எனவே தான் இவர் தனது ஆய்வின்போது கிரேக்க உரோம கால பகுதியிலிருந்து சில மூலங்களை எடுத்துக் கொண்ட போதும் மத்திய கால சிந்தனைகளை அறவே நிராகரிக்கின்றார். பிரான்ஸ் நாட்டு மக்களை இவர் மதிக்காத போதும் அந்நாட்டு நிர்வாகமுறையினை விரும்பினார். ஜேர்மன் நாட்டினையும் விரும்பினார். காரணம் அந்நாடுகளில் காணப்படுகின்ற ஒற்றுமையே.

மேலும் இளவரசன் எனும் நூலினது கடைசி பகுதி இத்தாலியினைக் காட்டமிராண்டிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று கூறப்படுகின்றது. அவரது இளவரசன் என்ற நூலானது மதம், பொருளாதாரம் போன்ற சில விடயங்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை.

மக்கியாவல்லியின் டிஸ்கோர்ஸி என்ற நூலானது இளவரசன் பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு இவரது கருத்துக்கள் வழிகாட்டியாக உள்ளதோடு நவீன அரசியல் கோட்பாட்டின் ஸ்தாபகராகவும் காணப்படுகின்றார. மக்கியாவல்லி நவீன அரசியலின் ஸ்தாபகர் என்ற கருத்தை ஏற்பவர்கள் அதற்கான காரணங்களைக்’ குறிப்பிடுகின்றனர். அதாவது மக்கியாவல்லியே முதன்முதலில் யதார்த்த பூர்வமான அரசியல் பற்றி சிந்தித்த ஒரு அறிஞர் என்றும், மத்திய கால சிந்தனையின் முடிவையும் நவீனகால சிந்தனையின் ஆரம்பத்தையும் இணைப்பவர் என்றும் தெய்வீக உரிமைக்கோட்பாடு, இயற்கைச் சட்டங்கள் போன்றவற்றினை முதன்முதலாக துணிவுடன் நிராகரித்து அரசியலுக்கும் மதத்திற்கும் இடையில் உறுதியான பிரிகோட்டை வரைய முற்பட்டவர் என்றும் கூறி இவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.
இக்காரணங்களை மட்டுமன்றி அதிகார அரசியல் பற்றி கூறிய முதல்வர் என்றும் ராஜதந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு சர்வதேச ரீதியில் நோக்கிய அறிஞர் என்றும் மக்கியாவல்லியினை மேன்மைப்படுத்தி அவரின் கருத்துக்களை ஏற்கின்றனர்.

இவ்வாறு இவரது அரசு பற்றிய கருத்துக்களின் மூலம் இவர் தற்கால அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்பதற்கான காரணங்களை விளக்கினாலும்  நடைமுறை அரசியல் பற்றி ஆராய்வதிலே அதிகார அரசியலுக்கு முக்கிய இடத்தினைக் கொடுப்பதனால் தான் இவரை நவீன அரசியலின் தந்தை என கூறுவதை சிலர் நிராகரிக்கின்றார்கள். அவர்கள் மக்கியாவல்லியை “அதிகார அரசியலின் தந்தை” என கூறுவதே சாலச்சிறந்தது என தெரிவிக்கின்றனர்.

        அவருடைய கொள்கைகள் பல பிற்கால அரசியல் வல்லுனர்கள் பலரால் விமர்ச்சிக்கப்பட்டன. அரசியல் ஒன்று தான் நாட்டினைக் காக்குமென்று இவருடைய கருத்தாகும் இவருடைய அரசியல் அனுபவத்திற்குப் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது. மக்களை நன்றியற்றவர்களெனக் குறிப்பிடுகின்றார். அரசியல் அறிவில்லாத மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொணடிருக்க வேண்டும். அவர்களது மனத்தினை மாற்றுவதற்கு இதனை அவர்களது நாட்டினதும் நன்மை பொறுத்தே செய்தல் வேண்டும். மக்கள் ஆபத்தானர்கள். அதேநேரத்தில் அவர்களது மனம் பக்குவப்படாமல் காணப்படுகின்றது. தலைவனற்ற கூட்டம் ஆபத்தானது. ஏமாற்றமும் பலாத்காரமும் மக்களை ஆட்சி செய்வதற்கு சிறந்த வழிகாட்டியாக கொள்ளுகிறார். ஏமாற்றுதல் என்பது மக்கியாவல்லி கைக்கண்ட யுக்தியாகும். அதாவது நாடு ஆபத்தில் காணப்படுகின்றபோது நியாயம், அநியாயம் பார்ப்பது பயனற்றது என்பது இவரது வாதமாகும். அத்துடன் ஆட்சிக்கலை என்பது மக்கியாவல்லி எடுத்தியம்பியவற்றில் குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய பங்களிப்பாகும்.

மக்கியாவல்லியினுடைய நூல்கள் குடியரசுக் கொள்கையையினை வெளிப்படுப்படுத்தினாலும் இக்கொள்கையினைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அவற்றில் அவர் எடுத்துக்காட்டவில்லை. மதம் சம்பந்தமான கருத்துக்கள் எவற்றினையும் இவர் குறிப்பிடவில்லை. இத்தாலியின் அரசியல் நிலையினை மட்டுமே இவை வெளிப்படுத்துகின்றன. மக்கியாவல்லியின் சிந்தனைகள் தொடர்ச்சியாக சொல்லப்படாமல் சிதறிக் காணப்படுகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே கருத்தினை பல இடங்களில் குறிப்பிடுகின்றார். மக்கியவெல்லி நயவஞ்சக அரசியல் தத்துவஞானியாகக் கருதப்படுகின்றார். சர்வதேச அரசியலும் உள்நாட்ட அரசியலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனியார் நீதி ஒழக்கம், பொதுநீதி ஒழுக்கம் போன்ற பிரிவுகளை அக்காலத்திலேயே தெரிவித்தவர். இவர் பற்றிப் பலரிடையே தவறான கருத்துக்கள் காணப்பட்டபோதும் உண்மையில் அவரை குறுகிய எண்ணங்கொண்ட சுயநலமிக்கவர் எனக் கூறிக் கொள்வது எந்தளவுக்குப் பொருத்தமானதென்பது வினாவுக்குரியதே.

மக்கியாவல்லி தனது அதிகார அரசினைப் பற்றி வரைவிலக்கணப்படுத்தும் போது ஒரு தனியார் மூலமோ அன்றி வழிவழியாக பல நபர்கள் மூலமோ ஏற்படுகின்ற அரச அதிகாரத்தின் முக்கிய பண்புகளாக தலைமை தாங்கி நடாத்தும் வீரம், ஒற்றுமையை நிலைநாட்டவல்ல மனோசக்தி, நினைத்ததை செய்யும் துணிச்சல் ஈவு இரக்கமற்ற தண்டணை என்பனவெ மக்கிய அம்சங்களாக இருக்கவேண்டும் என கூறுகிறார்.
மேலும் இந்த அரசை ஆள்பவனுக்கு சில சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது ஆள்;பவன் சிங்கம் போன்ற வீரமுள்ளவனாகவும் நரிபோலத் தந்திரமுள்ளவனாகவும் காணப்படவேண்டும் என வலியுறுத்தும் இவர் பொதுமக்களின் உளவியல் தன்மையினை மிகக்கீழ்த்தரமானதாகவே வர்ணிக்கிறார்.

அதுமட்டுமன்றி மக்கியாவல்லியின் கருத்துக்கள் மனிதப்பண்புகளற்ற கருத்துக்கள் என்றும் பாசிச கொள்கைக்கு வித்திட்டவர் என்றும் இவரின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே துர்அதிஸ்டவசமாக ஏற்பட்டவை என்றும் இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டமையால்தான் இவ்வாறான அராஜக கருத்துக்களை தெரிவித்தார் என்றும் இலக்குகளைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றும், இன்னொரன்ன காரணங்களை தெரிவித்த இவரின் கருத்துக்கள் அரசியலில் இருந்து முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும் எனவாதிடுகின்றனர்.

மக்கியாவல்லியின் கருத்துக்கள் அரசியல் வரலாற்றிலே சர்ச்சைக்குரிய கருத்துக்களாகும். இவரின் கருத்துக்களை சிலர் ஏற்கின்றார்கள். பலர் நிராகரிக்கின்றார்கள். ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் மனநிலையினைப் பொறுத்த விடயமாகும்.

எது எப்படியாயினும் இவருடைய அரசியற் கண்ணேட்டம், மனித இயல்பு தொடர்பான கருத்துக்கள் , நாட்டுப்பற்று, சார்புடைமை, திறனாய்வின்மை போன்றனவும் குறைபாடுகளாகச் சொல்லப்பட்டாலும் அரசியலைச் சமயத்திலிருந்து பிரிக்க எடுத்த முயற்சியும் இளரசன் அரசியல் தத்துவதற்கும் எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன. அன்றைய இத்தாலியின் இயல்பான பிரதிபலிப்பாக இவரைக் கருதலாம். அதுமட்டுமன்றி மக்கியாவல்லி அரசியல் வரலாற்றிலே புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவர் என்பதை யாராலும் மறுக்க மடியாது. அதுமட்டுமன்றி அவர் தன்னம்பிக்கை மிகுந்தவர் என்பதை அவரின் கருத்துக்களிலிருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் ஏனையவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மனம் தளராமல் தனத சொந்தக் கருத்துக்களை துணிவுடன் வெளியிட்டமையால் இவர் ஒரு தன்னப்பிக்கை உடைய அரசியல் அறிஞர் என்றும் நவீன அரசியல் சிந்தனையின் ஸ்தாபகர் என்றும் எமக்கு காட்டிநிற்கின்றது.

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...