Thursday 18 June 2020

இலங்கையின் திருகோணமலை பிரதேசத்தில் நிர்வாகம் செய்த வன்னிமைகள்

     


இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வடபகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று(வன்னி), திருகோணமலைப்பிரதேசம், மட்டகளப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராச்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன. இன்று நமக்கு கிடைக்கின்ற கல்வெட்டுப் பாடல்களில் அனேகமானவை கல்லிலோ செப்பு பட்டயங்களிலோ செதுக்கப்பட்டவையல்ல. நமது முன்னோரால் வாய்மொழியாக வளர்ந்து பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்தவையே அவை. மேலும் இதில் செப்பெடுகளாகக் குறிக்கப்படுகின்ற திருகோணமலை பெரியவழமைப் பத்ததிச் செப்பேடு காணாமல் போய்;விட்டதாகச் சொல்லப்படுவதோடு அதில் கோணேசர் ஆலயத்தின் நிர்வாக முறைமைகளும் சமூக வழமைகளும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. கிழக்கின் பல ஆலயங்கள் நடைமுறை தொடர்பாகவும் சமூக வழக்காறுகள் தொடர்பாகவும் செப்புப்பட்டயங்கள் எழுதப்பட்டிருப்பதை பற்றி அறியலாம்.


        இலங்கையின் கிழக்கே கடற்கரையோரமாக அமைந்துள்ள மலைத்தொடர்களையும், இயற்கைத்துறைமுகங்களையும் தன்னகத்தே அடக்கிய பிரதேசம் திருகோணமலை. இத்திருகோணமலையில் கடலினுள்ளே நீண்டு உயர்ந்து நிற்கும் குன்றில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இந்துக்கோயில்கள் மூன்று இருந்தன. அவைகள் உலக இந்துமக்களின் வழிபாட்டத்தலமாகத் விளங்கிய காரணத்தால் அக்குன்றும் அங்கிருந்த ஆலயங்களை உள்ளடக்கிய பிரதேசம் முழுவதும் புனித இந்து ஸ்தலமாகக் திருகோணேஸ்வரம் என்ற பெயரோடு விளங்கிப் பிரபல்யமடைந்திருந்தது.


திருகோணமலைக்குப் பெயர்கள் பல உள்ளன. ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் மாறிவருவது இயற்கையே. கோகண்ணம், திரிகோணமலை, திருக்குன்றாமலை, திருக்கோணமலை, திருக்கோணாதமலை, திருக்கொணாமலை, கோணமலை, கோணாமலை, மச்சேந்திரபர்வதம், மச்சேஸ்வரம், தெக்கணகைலாசம், தென்கைலாசம், திருமலை என்பன அவ்வூரின் பல பெயர்களாகும்.

       இந்தவகையில் இதுவரை திருகோணமலையின் வரலாறு ஆய்வாளர்கள் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன. ஆனால் அவற்றில் வரலாற்றுக்காலம் தான் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நாகரிக வளர்ச்சியில் வரலாற்றுக்கு முந்தியக்காலம் , வரலாற்று உருவாக்கக்காலம், வரலாற்றுக்காலம் என்று 3 வகையாகப் பிரிக்கலாம். ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியத்தவம் வாய்ந்தது. என்பதை இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மூலம் அறியலாம். அந்தவகையில் திருகோணமலையின் வன்னிமைகள் தொடர்பாக விளக்க முற்படும் முன்னர் வன்னியர் பற்றி அறிமுகத்தினை நோக்குதல் அவசியமாகும்.

       வன்னியர் தென்னிந்தியாவில் வாழ்ந்த அக்கினி குலத்தைச் சேர்ந்தவர்கள். மிகப் பிரசித்து பெற்ற போர் வீரர் இனம் நாளடைவில் அரச இனமாக மாறியிருக்கலாம் என ஆராய்ச்சி அறிஞர் எம். டி இராகவன் கூறுவர். வன்னியர் இலங்கைக்கு வந்ததைக் குறிக்கும் இரு கதைகள் வழங்கி வருகின்றன. யாழப்பாண வைபவமாலையில் வன்னியர் வருகை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

       “சாலிவாகன சகாப்தம் 358ஆம் வருடத்தில் (கி.பி.436) மனுநீதி கண்ட சோழன் மகன் குளக்கோட்டு மகாராசன் யாத்திரை பண்ணித் திருகோணசர் மலையிற் சேர்ந்து கோணசர் சிவாலயத்தை தரிசித்து தம்பலகாமத்தில் பழுதுபட்டுக்கிடந்த கோணேசர் சிவாலயத்தை பழுதுபார்ப்பித்து விக்கிரகாரம் முதலிய வேலைகள் அனைத்தையும் திருத்துவித்துக் கொண்டிருந்தான். அக்காலத்தில் கண்டி நாட்டிலிருந்து இலங்கையை அரசாண்ட பாண்டுமகாராசன் மணற்றிடர் என்று அழைக்கப்பட்ட இந்நாட்டிற்கு  (யாழ்ப்பாணம்) வந்திருந்தான்.

அவன் மனைவி குளக்கொட்டு மகாராசன் கோணேசர் கோவில் திருப்பணிகளைச் நிறைவேற்றும் செய்தி கேள்விபட்டு குளக்கோட்டனை இந்நாட்டிலிருந்து துரத்தி விடுங்கள் என்று அனுப்பிவைத்தாள். அந்தச் சேனைகள் தம்பலகாமத்திற்கு போய் அங்கிருந்த குளக்கொட்டன் நிறைவேற்றும் பணிகளையும் அவனுடன் நின்ற சேனைகளையும் கண்டு பயந்த நடுங்கின.

குளக்கோட்டு மகாராசன் திருப்பணிகளை நிறைவேற்றி அவ்வாலயப் பணிவிடைகளை நிறைவேற்றுவதற்கும் கோணேசலிங்கத்திற்கு பூசனை புரிவிப்பதற்கும், வரவு – செலவுகளுக்காக ஏழு நாடுகளில் வயல் நிலங்களையும், தோப்புக்களையும் ஏற்படுத்தி அவைகளிற் பயிரிட்டு வருமானம் செலுத்தும்படி வன்னியர்களை அழைப்பித்துக் குடியிருத்தித் தன் நாட்டிற்கு மீண்டான்.  அந்நாள் முதல் அவ்வருமானங்களால் ஆலயப் பணிவிடைகளும், அந்தணர் அக்கிரகாரங்களும், மடங்களும் சம்பிரமாகச் சிறந்து வந்தன. சிலகாலத்தின் பின் குளக்கொட்டு மகாராசன் தேகவியோகமானான். அதன்பின் மேற்கூறிய ஏழுநாடுகளிலும் பயிர்குடிகளாயிருந்த வன்னியர்கள் மிகவும் பெருகியிருந்தார்கள். பாண்டிநாட்டிலிருந்து 59 வன்னியர்களும் வந்து அவர்களுடனே கூடினார். அக்காலத்திலே சந்திரவன்னியனும் வேறு அநேக குறுநில மன்னரும் ஒருவர் பின் ஒருவராக தோன்றி அழிந்தபின், அவ்வன்னியர் அனைவரும் ஒத்திணங்கித் தங்கள் சாதியிற் தலைப்பட்ட ஏழு பேரைத் தெரிந்து அவ்வேழு நாடுகளுக்கும் தலைவராக்கி அவர்கள்  கீழ் அமைந்திருந்தனர். அது முதல் அவ்வேழு தலைவரின் சந்ததியார் சுயேட்சைப்படி ஆண்டு வந்தனர். கோணேசர் கல்வெட்டும் இக்கதையை உறுதிப்படுத்துகின்றது.

இன்னொரு கல்வெட்டிற் கூறப்பட்டிருப்பதாவது இலங்கை மன்னர்களுள் ஒருவனான வலசிங்க என்பான் இந்தியாவிலுள்ள மதரை மன்னன் மகள் சாமுத்துதி என்பாளை திரமணம் செய்ய விரும்பினான். மணம்பேசி வருமாறு தூதுவரை இந்தியாவுக்கு அனுப்பினான். மதுரை மன்னன் தனது ஆலோசகர் குழுவிலிருந்த அறுபது வன்னியரை அழைத்து அவர்களுடன் தனது மகளை இலங்கைக்கு அனுப்பினான். அவர்கள் சாமுத்துதியை வலசிங்க மன்னனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மகிழ்ச்சி அடைந்த வலசிங்க மன்னன் வன்னியர் விரும்பிய பரிசைக் கேட்குமாறு கூறினான். அவர்கள் அடங்காப்பற்று என்னும் பிரதேசத்தை தமக்கு அளிக்குமாறு வேண்டினர்.  இவ்வாறு வன்னியரின் குடியேற்றம் பற்றி இவ்விரு கதைகளையும் நாம் வெறும் கட்டுக்கதை என்று ஒதுக்கிவிட்டாலும் வன்னியர் இந்தியாவிலிருந்து கி.பி 4ஆம் 5ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வந்துவிட்டனர். என்ற உண்மையைக் ஏற்றுக்கொள்ளலாம்

வன்னியர் இலங்கையிற் குடியேறிய காலம் கி.மு 50ஆம் ஆண்டு வரையிலேன வையாபாடல் வாயிலாக கொள்ளக்கிடக்கின்றது. மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடகசவுந்தரியின் அரசுகாலம் கலிபிறந்த மூவாயிரத்தொரு நூற்றெண்பதாம் ஆண்டு முதல் 40 வருடங்களெனச் சொல்லப்படுகின்றது. அது கி.பி79 முதல் கி.பி 119 வரையுள்ள ஆண்டுகளுக்குச் சமமானது. இவளது கணவனான மகாசேனனே குளக்கோட்டு மன்னன் என்று கருதப்படுவதால் அவன் வன்னியரை இலங்கையிற் குடியேற்றுவித்த காலம் இம்மான்மியத்தின்படி கி.பி.100 வரையிலெனக் கொள்ளலாம். இவ்விரண்டு கணிப்புகளுக்கிடையில் 150 ஆண்டுகளே வித்தியாசமாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு பற்றிய குறிப்புக்களே வையாபாமலிற் பெரிதுங் காணப்படுகின்றன. கோணேசர் கல்வெட்டிலும் அவ்வகைக்குறிப்புக்களே அதிகமாகக் காணலாம். இரு நூல்களிலும் கூறப்படும் வன்னியர் வருகை இருவேறு காரணங்களுக்காக ஏற்பட்டனவாகக் காணலாம். அவ்வன்னியர்கள் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்தே இலங்கைக்குவந்தரென இரு நூல்களும் கூறும்.

பண்டைய நூல்களைப் திருகோணமலை பிரதேச வன்னமைகள் பற்றி கூறும் முக்கிய ஆவணங்களாக இரு கல்வெட்டுக்கள் கொட்டியாரம்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் திருகோணமலை வன்னிபங்கள் தொடர்பான வரலாற்றாதாரங்கள்

1.    கோணேசர் கல்வெட்டு: 
              குளக்கோட்டன் தனியுண்ணா புபால வன்னியனை திருகோணமலை நகர அரசினை பரிபாலனம் செய்யப் பணித்தமை பற்றிக் கூறுகிறது

2.    கங்குவேலிக் கல்வெட்டு:
              இது திருகோணமலை கொட்டியாரப்பற்றில் கங்குவேலி சிவன் கோயிலில் உள்ள மூன்றடி உயரமான ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை வன்னியனாரும் ஏழு கிராமங்களின் தலைவர்களும் கூடி கோணநாயகர் ஆலயத்திற்கு நிலதானம் செய்தது தொடர்பான விளக்கங்களை சொல்கிறது. 14ஆம் நூற்றாண்டுக்குரிய இக்கல்வெட்டு மலையில் வன்னியனார் என்று குறிப்பிடுவது திருகொணமலை வன்னிபத்தையாகும்.

3.    இரண்டாம் பராக்கிரமபாகு:
               ஆட்சிகாலத்தில் (1236-1271) திருகோனமலையை ஆட்சி செய்த வன்னியரகள் குறித்து சூளவம்சம் ராஜாவலிய போன்ற நூல்கள் விபரிக்கின்றன

4.    வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி :
               ஆலய சாசனம் அவ்வாலயத் திருப்பனி நடைபெற்ற போது கயிலாய வன்னியர் தெற்குபுற மதிலை கட்டியதாக கூருகின்றது

5.    யாழ்பாண சரித்திரம்:
               தம்பலகாமத்தில் தனியுண்ணாப் புபால வன்னிபம் என்பவர் கோனேஸ்வர கோயில் அதிகாரத்தையும் அவ்விடத்திற்கான அதிகாரத்தையும் கொண்டிருந்தது பற்றியும் அவ்வாறே பனங்காமம் குமாரபுரம் ஓமந்தை முதலான இடங்களுக்கு வன்னியர்கள் அதிகாரம் கொண்டிருந்தது பற்றியும் சொல்கிறது.

6.    திருகோணாசல வைபவம்:
               தனியுண்ணாப் பூபால வன்னிபம் கோணேசர் கோயிலின திரவிய இர்புக் குறித்து விசாரித்ததைக் கூறுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில்; கட்டுக்குளப்பற்று வாணிபம் கனகசுந்தரப் பெருமாளும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.

7.    கோணேசர் கல்வெட்டு:
திருகொணமலை வன்னிபங்கள் பூபாலகட்டு என்னும் இடத்தில் உள்ள மாளிகையில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அதேவேளை தனியுண்ணாப் பூபால வன்னிபத்தின் பின்னர் தொடர்ச்சியாக ஆட்சி செய்த 32 வன்னிபங்களின் பெயர் விபரங்களையும் தருகின்றது.

8. A TRUE AND EXACT DESCRIPTION OF THE GREAT ISLAND OF CEYLON என்னும் நூலில் கண்டி அரசுரிமை தொடர்பாக எழுந்த போரின் போது ஜயவீர பண்டாரனுக்கு ஆதரவாக கொட்டியாரப்பற்று வன்னிபம் போர்வீரர்களையும் யானைகளையும் அனுப்பியுள்ளதாகக் கூறுகிறது.

9.    கி.பி 1611இல் கண்டியரசன் போர்த்துக்கீசருக்கு எதிராக போர் ஆயத்தங்கள் செய்த போது அது தொடர்பான கூட்டமொன்றில் கொட்டியாரப்பற்று அதிபனாகிய “இடலி” பழுகாமத்துச் செல்லபண்டாரம் போரதீவு சண்முக சங்கரி முதலான வன்னிபங்கள் கலந்துகொண்டதை மேற்குறிப்பிட்ட நூல் ஆதாரப்படுத்துகின்றது.

10.    மேற்குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்க்காணும் உயிலின் பிரதியும் முக்கியத்துவம் பெறுகிறது.

05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயில்


05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயில்

05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயில்
05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயில்

05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயில்


திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் அடங்கியிருக்கும் இயற்கை வனப்பு நிறைந்த ஓர் ஊர் மேன்காமம். அங்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட உயில் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. 05.06.1893 ஆந் திகதியிடப்பட்ட உயிலின் பிரதியில்” இந்தப்பிரகாரம் நான் பூர்வீகம் தொடக்கம் பரம்பரையாக நடந்து வந்த இந்தத் தேச வழக்கப்படி எனக்குள்ள சொந்த உரித்தைக் கொண்டும், மேற்சொல்லிய கோயில் கூட்டத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டும் இவ் நியமன உறுதி முடித்துக் கொடுகிறேன்” என்று தம்பலகாமம் கோணநாயகர் கோயில் தொழும்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாரிசுரிமை தொடர்பான பிரச்சினை ஒன்றைத் தீpர்த்து வைத்து அதனைத் தீர்ப்பதற்குரிய அதிகாரத்தை தான் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ள இவர் கொட்டியாரப்பற்று மேன்காமத்திலிருந்த இருமரபுத் தூய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னியராவார்.

திருகோணமலை பிராந்திய தமிழர்களின் வரலாற்றாதாரங்களில் இத ஒரு முக்கிய ஆவணமாகும். இவ்உயிலின் அடிப்படையிpலும் கிடைக்கும் ஏனைய சான்றாதாரங்களின் துணை கொண்டும் வன்னிபங்களின் காலத்து திருகோணமலைப் பிரதேசத்தின் வழமைகளை ஆராயலாம். எனவே மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் பெரிய இராச்சியங்களின் வீழ்ச்சியின் பின்னர் திருகோணமலையில் வன்னிபங்களின் சுயாட்சி நிலவி வந்த வரலாற்றை ஆதாரப்படுத்துவதாக அமைந்துள்ளன.

மேற்கூறிய பண்டைய நூல்கள், கல்வெட்டுக்கள் என்பனவற்றிற்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆவணங்களாகும். அவற்றில் ஒன்று கி.பி 1551இல் திருகோணமலையில் ஆட்சி செய்த வன்னிபம் இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாரிசு உரிமை தொடர்பான ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறது.

திருகோணமலை வன்னிபத்தின் வாரிசு வயதில் இளைஞனாக இருந்ததால் திருகோணமலை வன்னிபத்தின் உறவினர்களில் ஒருவன் வன்னிபமாக பதவியேற்க முயற்சி செய்தான் என்பதையும் இதனை யாழ்ப்பாண சங்கிலி மன்னன் தலையிட்டு நிறுத்துவதற்கு முயன்றபோது அவன் போர்த்துகீசப் படைகளின் உதவியை எதிர்பார்த்து கத்தோலிக்க மதத்திற்கு மாறினான் என்பதையும் அது ஆதாரப்படுத்துகிறது. எனினும் இம் முயற்சி சங்கிலி மன்னனால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

        திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேடி ஆட்சிமுறை தளர்ந்த பிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப்; பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னிபர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு பின்னரும் இங்கு இவை தொடர்ந்திருக்கின்றது. எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். குளக்கோட்டன் காலத்தில் திருகோணமலை மாவட்டம் நான்கு பற்றுகளாக நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.பயிர்ச்செய்கை விருத்தியால் தானிய எற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த திருகோணமலையின் நான்கு வன்னிபற்றுக்களும் குளக்கொட்டு மன்னன் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்ததோடு ஒர் ஒழுங்குபடுத்தப்பட்ட வரையறைகளையும் கொண்டிருந்தது.

1.    திருகோணமலைபற்று
2.    கட்டுக்குளப்பற்று( நிலாவெளி சார்ந்த பிரதேசம்)
3.    கொட்டியாரப்பற்று (மூதூர் சார்ந்த பிரதேசம்)
4.    தம்பலகாமபற்று என்பன அவ்வன்னிப பிரிவுகளாகும்.

   இவை தனியான சுயாட்சி அலகுகள் என்பதற்கு அவை கொண்டிருந்த நில நீதி தண்டனை தொடர்பான அதிகாரங்களே சான்று பகருகின்றன. இவையனைத்தும் திருகோணேஸ்வர ஆலயதிருப்பணிகள் இடையிராது நியமப்படி நடைபெற வேண்டும் எண்பதையும் அவ்வேளைகளில் ஆலயப்பணியாளர்கள் சாதாரண மக்கள் என்பவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்

 வன்னிப்பற்றுக்கள் என்றழைக்கப்பட்ட இப்பிரதேசத்தினை ஆட்சி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் “வன்னிபம்” என்பதாகும். இது வன்னியனார், வன்னிராசர் போன்ற சொற்களுக்கு இணையானது. வன்னிபங்கள் தமது ஆட்சிப்புலத்தில் சுயாட்சி அதிகாரம் கொண்டிருந்தனர். பெரும்பாலான ஒல்லாந்து ஆவணங்கள் வன்னிபங்களை அரசன் என்றும், அவர்களது ஆட்சிப்புலத்தினை “இராட்சியம்” என்றும் குறிப்பிடுகிறது. சுயாட்சி அலகுகளான இவ்வன்னிப்பற்றுக்களில் சில வெவ்வேறு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண, கண்டி இராச்சியங்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன.


 திருகோணமலையில் இருந்த நான்கு வன்னிப்பிரிவுகளிலும் இடப்பரப்பிலும், இயற்கை வளத்திலும், படைப்பலத்திலும், துறைமுக நகராகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கிய பிரதேசம் கொட்டியாரப்புரப் பற்றாகும். இத்தகைய சிறப்புப் பெற்றிருந்த கொட்டியாரப்பற்றினை ஆட்சி செய்த வன்னிபங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்கள், பண்டைய நூல்கள், உறுதிpகள், ஐரோப்பியரின் ஆவணங்கள் என்பவற்றில் இருந்து எமக்கு கிடைக்கின்றது. இலங்கையில் காலணித்துவ ஆட்சி ஏற்பட்ட பின்னரும் வன்னிபங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் பிரதேச நிர்வாகிகளாகச் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.


திருகோணமலையிலிருந்த வன்னிமைகள் பற்றிக் கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது. மனுநீதி கண்ட சோழனுடைய மகனாகிய வரராம தேவன் கோணேஸ்வரத்தின் மகிமையைக் கேட்டறிந்து அங்கு தன் மகன் குளக்கோட்டனோடு புனித யாத்திரை வந்தானென்றும், பின் குளக்கோட்டன் சிவாலயத்தையும் பாவநாசச் சுனையையும் அமைத்து ஆலயத் திருப்பணிகள் செவ்வனே செயற்பட ஏற்பாடுகள் செய்தானென்றும் இந்நூல் கூறும்.


திருகோணமலை, கட்டுக்குளம் ஆகிய பிரிவுகளின் அதிபர்களாக வன்னிpபங்கள் நியமிக்கப்பெற்றமை பற்றிக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. அதன் உரைப்பகுதியின் பிரிவுகள் பல முழுமையும் வன்னிபங்களைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன. திருகொணமலை வன்னிமையின் உற்பத்திக்கு குளக்கோட்டனே காரணமபய் விளங்கினான. என்பதை மேல்வரும் பாடல் உணர்த்துகின்றது.

தானம் வரிப்பத்தென்னு மரன்றொழும்பர்க்குள்
        ளிகலார் தர்க்கம வந்தால்
மானபங்க மடையாம னடுத்தீர்ப்ப
        தாரெனவே மதுரையூ போய்த்
தான மதிக்குலராமன் தனியுண்ணாப்
        பூபாலன் றனைக் கொணர்ந்து
தேனமா பூந்தொடை மார்பன் திருக்கோண
        நகரரசு செய்யவைத்தான்.


இப்பாடல் திருகோணமலை வன்னிமையின் உற்பத்தியினை விளக்குவதாய் அமைகின்றது. திருகோணமலையில் ஆட்சி புரிவதும் நீதிபரிபாலனஞ் செய்வதும் வன்னிபத்தின் பிரதான கடமைகள் என்பது அப்பாடலின் மூலம் தெளிவாகின்றது. தனியுண்ணாப் பூபால வன்னிபங்கள் மதுரை நகரிலிருந்து வந்தோரின் மரபினர் என்ற ஐதீகத்தையும் வலியுறுத்துவதாகக் இப்பாடல் அமைகின்றது.  தனியுண்ணாப் பூபாலன் மரபினரின் முன்னோர்கள் குளக்கோட்டனின் காலத்திலே வன்னிபம் என்னும் பதவியைப் பெற்றிருத்தல் கூடும். ஆயினும் குளக்கோட்டு மன்னனின் காலத்தில் வன்னிமை உருவாகியது என்பதும் ஆலய சேவைகளை நடத்துகின்ற சமூகங்களின் மத்தியிலே அமைதியினை நிலைநாட்டுவதற்கென்று வன்னியர் நியமிக்கப்பெற்றனர் என்பதுவும் ஆராய்ந்து தெளிவுறுத்தற்குரியனவாகும். திருகோணமலை வன்னிபத்தின் பொறுப்புகளையும் கடமைகளையும் ஏதுவாகக் கொண்டு, வன்னிமையின் உற்பத்தியினைக் கவிராசவரோதயர் கோணேஸ்வர கல்வெட்டு எனும் நூலில் விளக்கியுள்ளார்.


திருகோணமலை வரலாற்றில் இதுவரை காலமும் எவரும் பெற்றிராத மக்களின் பேராதரவையும் வரலாற்றுப் புகழையும் பெற்றவன் குளக்கோட்டன்.  குளக்கோட்டனின் இயற்பெயர் எது என்று தெரியவில்லை. குளமும் கோட்டமும் கட்டியதால் அவனுக்கு குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.


குளக்கோட்டன் வரலாறு பற்றி அறிய உதவும் சில நூல்கள் வருமாறு

    நூற்பெயர்                                              நூலை எழுதியவர்                   எழுதிய ஆண்டு
01    கோணேசர் கல்வெட்டு                கவிராஐவரோதயர்                      கி.பி 1400
02    மட்டக்களப்பு மான்பியம்          F.X.C நடராசா                                  கி.பி 1952
03    தேட்சண கைலாயபுராணம்      பண்டிதராசர்                                   கி.பி 1400
04    யாழ்ப்பாண வைபவமாலை     மயில்வாகனபுலவர்                   கி.பி 1736
05    கைலாயமாலை                           முத்துராச கவிராயர்                    கி.பி 1591
06    வையாபாடல்                                 வையாபுரி ஐயர்                            கி.பி 1500
07    திருகோணாசல வைபவம்       வே.அகிலேசபிள்ளை                 கி.பி 1889
08    திருகரசைப் புராணம்                 வே.அகிலேசபிள்ளை                  கி.பி 1890
09    திருகோணாசல புராணம்          ம.முத்துகுமாரு      கி.பி 19ஆம் நூறறாண்டு
10    கோணமலை அந்தாதி               சு.ஆறுமுகப்புலவர்                    கி.பி 1856

மேற்படி நூல்கள் மட்டுமல்லாமல் பின்வரும் சாசனங்களும், கல்வெட்டுக்களும் பெரிதும் உதவுகின்றன.

கந்தளாய் கல்வெட்டு , குச்சவெளிக்கல்வெட்டு, திரியாய கல்வெட்டு, கங்குவெலிக் கல்வெட்டு, பளமோட்டைச் சாசனம், பிரடரிக் கோட்டை சாசனம் முதலியனவும் குடுமியாமலைக் கல்வெட்டு, தென்னிற்தியக்கோயிற் சாசனங்கள் முதலியனவும் குளக்கோட்டன் தொடர்பாகவும் கோணேசர் கோயில் தொடர்பாகவும் பல தகவல்களைத் தருகின்றது.


குளக்கோட்டனைப்பற்றி மேல்வருந் தகவல்களையும் கோணேசர் கல்வெட்டு தருகின்றது. குளக்கோட்டன் மருங்கூரிலிருந்து அழைத்து வந்த ஆறு சோழக் குடிகளைத் திருமலையிலிருத்தி அவர்களுக்குப் பரவணியாட்சியுரிமையோடு நிலங்களைப் பகிர்ந்தான். அத்துடன் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான பொருட்களையும் கொடுத்து நாள்தோறும் ஏற்படும் வரவு செலவுகளின் கணக்குகளைப் பதிவு செய்யுமாறு தானதாரைப் பணித்தான். குளக்கோட்டன் 21 வரிப்பத்தர் குடிகளைத் திருமலையிலிருத்தி மலர் கொய்தல், மாலை தொடுத்தல், கொடி, குடை பிடித்தல், விளக்கேற்றல், படிமங்களைத் ;துலக்குதல், நெல்லுக்குற்றுதல், மெழுகுதல், சந்தனமரைத்தல் ஆலத்தி செய்தல், நடனமாதர் ஆடுமித்துத் தாளத்திற்கேற்பப் பாடுதல் முதலான தொழும்புகளைச் செய்யுமாறு பணித்திருந்தான்.

அந்தவகையில் கோணேசர் கோயிலுக்குச் செய்யவேண்டி தொண்டுகள் பற்றியும் குளக்கோட்டன் வரையறுத்துக் கொடுத்திருந்தான். இதன்படி தொழும்பர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வருமாறு :
1.    தானத்தார் - இவர்கள் அன்றாடம் கோயில் வரவு- செலவுகளை கவனித்தல் வேண்டும்.
2.    சரிப்பத்தார் - இவர்கள் பட்டாடை கொய்தல், கூட்டல், பத்திர பு~;பமெடுத்தல்,மெழுகுதல் முதலிய பணிகளைச் செய்தல் வேண்டும்


இவை தவிர கணக்குகள், மானியங்கள் முதலியவற்றைப் பரிசீலனை செய்வதற்கான ஒழுங்குகள், குயவன், நாவிதன், ஏகாலி, வள்ளுவன் முதலியோர் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கோயிலில் நடைபெற வேண்டிய நித்திய, நைமித்திய கிரியைகள் குறைவின்றி நடைபெறுவதற்கு வேண்டிய நிவந்தங்களையும் ஒதுக்கீடு செய்து அதற்கான விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.


அத்துடன் கோயில் வருமானத்துக்காக வயல்களை வழங்கியதுடன் அவ்வயல்களுக்கு நீர் கிடைப்பதற்காக அல்லைக்குளம், வெண்டரசன் குளம், கந்தளாய் குளம் ஆகியவற்றையும் வெட்டிக் கொடுத்தான். குளங்களிலிருந்து நீர்ப்பாசன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இக்குளங்களுக்கு காவல் தெய்வங்களையும் பிரதிடை செய்துவைத்தான்.

.
தானத்தாருக்கும் வரிப்பத்தருக்கும் இச்சேவைகளுக்கு ஊதியமாகப் பள்ளவெளியில் வயல் நிலங்களைக் குளக்கோட்டன் கொடுத்திருந்தான். மதுரை நகரால் வந்த தனியுண்ணாப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து வன்னிபம் என்ற பட்டத்தையும் வழங்கினான். மேலும் திருநெல்வேலியிலிருந்து வந்த காராளனொருவனைக் கட்டுக்குளம் பற்றுக்கு அதிபதியாக்கி நிலாவெளியில் நிலமுங் கொடுத்து வன்னிபம் என்ற பட்டத்தையும் குளக்கோட்டன் சூட்டினான். கோணேசர் கோயிலின் வரவு செலவுகளைப் பற்றிய குருகுலக் கணக்கிற்குப் கட்டுக்குளப் பற்று வன்னியனாரும் அவனது சந்ததியினரும் பொறுப்பாக இருக்க வேண்டுமென்று பணித்து ஆடை, ஆயம், தீர்வை முதலிய வரிகளும் கோயிலுக்கே செல்ல வேண்டும் என்று அவன் ஆணையிட்டான்.


கோணேசர் கல்வெட்டில் வன்னிமைகள் பற்றிவரும் கதை எந்தளவிற்கு ஆதார பூர்வமானது என்பதை அறிந்து கொள்வதற்கு குளக்கோட்டனின் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். மனுநீதிகண்ட சோழன், வரராமதேவன் என்ற அரசர்கள் பற்றிய கதைகள் புனைந்துரைகளாகவே இருக்க வேண்டும். எனினும் குளக்கோட்டனை ஒரு கற்பனையிலெழுந்த நபரெனக் கொள்ள முடியாது.. திருமலைக் கோட்டையின் முன்பாகவிருக்கும் ஒரு கற்றூணில் “முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே” என்ற மொழித்தொடர் காணப்படுகின்றது. இக்கல்வெட்டு குளக்கோட்டன்  கோணேசர் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்திருந்தான் என்ற கருத்து அது வரையப்பெற்ற காலத்தில் வலுப்பெற்றிருந்ததென்பதைக் காட்டுகின்றது
                                                                       

குளக்கோட்டன் சோழகங்கள் என்ற பெயரைப் பெற்றிருந்தானென்று தஷ்ண கைலாச புராணம் கூறுகின்றது. குள்கோட்டன் என வழங்கிய சோழகங்கன் பத்தாம் நூற்றாண்டின் பின்னரே வாழ்ந்திருத்தல் வேண்டும் சோழப்பேரரசு எழுச்சி பெற்ற பின்பே சோழகங்கன் என்ற பெயர் வழக்கில் வந்தது. சோழகங்கன் என்ற பெயழகை; கொண்டிருந்த இளவரசரும் குறுநில மன்னரும் கலிங்கத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்தனர். ஈழத்திலும் பொலனறுவைக் காலத்தில் சோழகங்கனென்ற பெயழைந் சில இளவரசர் பெற்றிருந்தனர். இரண்டாம் கஜபாகுவின் ஆட்சிக் காலத்திற் சோழகங்க குமாரன் என்ற இளவரசன் பொலனறுவையில் இருந்தான். பின் நிஸ்ஸங்க மல்லனுடைய மருகனான சோட(ழ)கங்கன் விக்கிரமபாகுவைக் கொன்றுவிட்டுப் பொலனறுவையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். திருமலைக் கோட்டையிலுள்ள ஒரு வட மொழிக் கல்வெட்டு கி.பி 1223 இல் ஈழத்திற்கு வந்த ஒரு சோடகங்கனைப் பற்றி குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டிலுள்ள பலவரிகள் சிதைவுற்றிருக்கின்றன. சோடகங்கன் கோணசர் கோயிலிற்களித்த நிவந்தங்களைக் கூறவே இக்கல்வெட்டு வரையப்பெற்றதெனத் தெரிகின்றது. கோணேசர் கல்வெட்டில் வரும் குளக்கோட்டனான சோழகங்களையேக் இக்கல்வெட்டுக் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.


வன்னிமைகள் திருகோணமலைப் பிரதேசத்தில் ஆண்டதற்கும் தானத்தாரும் வரிப்பத்தரும் அங்கிருந்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகிpன்றன. கங்குவேலியிலுள்ள ஒரு கல்வெட்டுத் திருமலை வன்னியனாரும் ஏழுர்களைச்சேர்ந்த அடப்பர்களும் கூடித் தம்பிரானார் கோணைநாதனுக்குக் கங்குவேலியில் நிலங்களையும் புற்றரைகளிலுள்ள வருமானத்தையும் விட்டதாகக் கூறுகின்றது. மேலும் தானம், வரிபத்து என்பனவற்றையும் இக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.


கொட்டியாரம் பற்றைச் சேர்ந்த வெருகல் என்னுமூரிலுள்ள ஒரு கல்வெட்டு ஒரு கோயிலின் தெற்கு மதிலைக் கயிலாய வன்னியனார்  கட்டினாரென்று கூறுகின்றது. ஆராய்ச்சியாளர் இக்கல்வெட்டு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதுவர். இக்கருத்துப் பொருத்தமானதெனின் கயிலாய வன்னியனார் பதினாறாம் நூற்றாண்டிற் கொட்டியாரம்பத்தை ஆண்டிருக்க வேண்டும். வெருகல் ஒரு சிறப்பு மிகு கலாசாரத்தின் சங்கமம். கொட்டியாரத்தின் பெருமையை பறை சாற்றும் உறவுகளின் சந்திப்பாய் தடம் பதித்த ஒரு பண்பாட்டு படர்ச்சி திருகோணமலைத் தமிழகமும் மட்டக்களப்பு தமிழகமும் இணைந்த ஒரு தேசத்தார் கோயிலின் வரலாறாய் நீண்டிருக்கும் தொல்மரபு இங்கு புதைந்துள்ளது. வெருகல் குளக்கோட்டு மன்னனும் ஆடகசௌந்தரியும் சந்தித்த இடம் வன்னிபங்களின் ஆட்சியில் ஒரு மையமாக விளங்கிய இடம். இராஐசிங்க ராஐாக்கள் வழிபட்டு கொடையும் நிவந்தகமும் அளித்த ஆலயம்.
வெருகல் கல்வெட்டு

வெருகல் கல்வெட்டு
திருமலை கட்டுக்குளம் ஆகிய இடங்களில் குளக்கோட்டன் வன்னிமக்களை நியமித்தான் என்றும் கோனேசர் கல்வெட்டு கூறுகின்ற போது இவனே அங்கிருந்த வன்னிமக்களை தோற்றுவித்தான் என்றும் கொள்வதற்கில்லை கோனேசர் கல்வெட்டு கஜபாகுமகாராசன் திருப்பணிப்பற்றி சொல்வன குளக்கோட்டனின் காலத்திற்கு முன்பே திருமலை வன்னிமை ஏற்படாயிருந்ததென்று கொள்வதற்கு ஆதாரமாயிருந்தன பாசுபத்மறையவர் இறந்ததன் விளைவாக ஆலயத்தில் புசை முதலியன தடையுற்ற போது கஜபாகுமகாராசர் அங்கு சென்று வன்னிபம் தானம் வரிப்பத்து நாட்டவர் என்பேரை அழைத்து விசாரனை நடத்தி வெளிநாட்டிலிருந்து பிராமணர்களை கொனர்வித்து மீண்டும் ஆராதனை வழமைப்போல நடைபெற ஏற்பாடு செய்தான் அத்துடன் 1100 பொன் கொடுத்துக் குருகுலக்கணக்கில் பதித்து ஆயம் தானியவரி ஆகியவற்றிலும் பத்திலொரு பங்கை ஆலயத்திருப்பணிக்கு கொடுக்க வேண்டும் என்று அரசன் ஆணையிட்டான்


குளக்கோட்டனால் பெரும் அளவில் திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில் திருகோணமலை கோணேசர் கோயில் எனினும் அவனால் கோணேசர் கோயிலுக்கு என வகுக்கப்பட்ட சட்டதிட்டங்கள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் இடம் தம்பலகாமம் ஆதி கோணேநாயகர் ஆலயம் ஆகும்.  போர்த்துக்கேய தளபதி கோணேசர் கோயிலை இடித்த போது பூசகர்களும், பக்தர்களும் அக்கோயிலிலிருந்த விக்கிரகங்களை டுடிந்தவரை மீட்டெத்து அவற்றைக் கிணறுகளிலும் குளங்களிலும் பிற இடங்களிலும் மறைத்து வைத்தனர். அதில் ஒரு விக்கிரகம் தம்பலகாமம் சுவாமி மலையில் வைத்து வளர்க்கப்பட்டது. அதுவே பின்னர் ஆதிகோணநாயக்கர் ஆலயத்துக்கு மாற்றப்பட்டது.


குளக்கோட்டனால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குடிகளின் பரம்பரையினர் இங்கு தொடர்ந்த பணி செய்து வருகின்றனர்.  கோணெசர் கல்வெட்டில் குறிப்பிட்டபடி பாசுபதர், தானத்தார், வரியப்பத்தர் போன்ற தொழும்பாளர்களின் பணிகள் இன்றும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. சட்டதிட்டங்கள் பேணப்படுகின்றன.


திருக்குளத்து வேள்வி செய்யும்போது –
    “மன்னுபச்சைப் பட்டுவரின் மழையுதவும்
சிவப்பு மகா வெயிலே காட்டும்”

எனக் கோணேசர் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளபடி “பச்சைக் கொடி காட்டினால் மழையும், சிவப்புக் கொடி காட்டினால் வெயிலும் வரும”;. இன்றும் அவ்வழக்கம் நடைபெறுகிறது. கோணேசர் கல்வெட்டில் குறிpப்பிட்டுள்ள சகல பூஜைகளும் இன்றும் இங்கு நடைபெற்றுவருகின்றன.


அல்லைக்குளம், வெண்டரசன்குளம் ஆகிய இரு குளங்களையும் கட்டியபின் அவற்றில் நீர் போதாமையால் அவன் கந்தளாயக் குளத்தைக் கட்டி, மகாவலிகங்கை நிர் அதில் சேர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தான். அளவில் பெரியதான இக்குளத்திலிருந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட மதகு அமைப்புக்கள் இன்றும் அக்குளத்தருகே பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். கந்தளாய் குளம் கட்டி முடித்த பின் அதன் உபயோகத்துக்கான ஆணைகளையும் பிறப்பித்துள்ளான் அவை கோணேசர் கல்வெட்டு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மகாவி~;ணுவின் ஆணைப்படி குளத்துக்கு காவல் தெய்வங்களை பிரதி~;டை செய்து வைக்கப்பட்டன. இக்காவல் தெய்வங்களுக்கு ஒருவருடத்தில் மடையும் மறுவருடத்தில் பொங்கலும் வேள்வி செய்யும்படியும் குளக்கோட்டன் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கங்குவேலி என்னும் கிராமத்தில் அகத்தியர் தாபனம் என்னும் பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் முன்பாக உள்ள ஒரு கல்வெட்டில் இக்கோயிலுக்கு நிவந்தமாக சில வயல்கள் அளிக்கப்பட்ட செய்தி காணப்படுகின்றது. புரோகிதர், சாதித்தானத்தார், வரிப்பத்தார் ஆகியோர் முன்னிலையில் பிரகடனம் செய்யப்பட்டதாக அது கூறுகிறது. திருகோணமலை வன்னியர்களும் ஏழுபகுதி அடப்பர்களும் கூடித் தீர்மானிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து குளக்கோட்டன் ஏற்பாட்டுக்கமைய இந்த நிவந்தம் வழங்கப்பட்டது புலனாகிறது.


வெருகல் சித்திரவேலாயுத ஆலயம் குவேனி காலத்தைச் சேர்ந்தது என்பது கர்ணபரம்பரைக் கதை. கற்தளாய் குளத்தைக் கட்டிய குளக்கோட்டன் விவசாயம் செய்வதற்காக சிந்து நாட்டிலிருந்து சிலரைக் கொண்டு வந்து திருகோணமலையில் குடியமர்த்தினான். இவர்கள் தம்பலாகமம் தொடக்கம் வெரகல் வரை குடியேற்றப்பட்டனர். இந்தியாவிலிருந்து குளக்கோட்டனால் கொண்டுவரப்பட்ட தனியுண்ணாப் பூபால வன்னியன் ஆட்சியின் கிழ் விவசாயம் செய்த சிந்து நாட்டவர்கள் கோணேஸ்வர ஆலயத்திற்கு நெல் அனுப்பினர். இவர்கள் ஈச்சிலம்பற்றை, மல்லிகைத்தீவு, பள்ளிக்குடியிருப்பு, கங்குவேலி திரமங்கலாய், இலங்கைத்துறை, கிளிவெட்டி, சம்பூர், மூதூர் போன்ற இடங்களில் குடியமர்ந்து வெருகல் பகுதியையும் பரிபாலனம் செய்துவந்தனர். வன்னியர்களின் வருகைக்கப் பின் இக்கிராமங்கள் சிறப்புடன் திகழ்ந்தமையும் பின்னால் ஏற்பட்ட அந்நியர்களின் படைஎடுப்பால் இவை அழிந்துபட்டமையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.


பூபாலவன்னிபனுக்கும் மட்டக்களப்புக் குகன்குல வன்னிபங்களுக்கும் 2ஆம் நூற்றாண்டில் வெடியரசன் கொண்ட வழமைபோல் வன்னிபம் தரித்து என்பதற்கும், கலிங்க மன்னன் (மாகன்)  காளிகட்டத்திலிருந்து முற்குகர்களை அழைத்து வந்து அவர்களின் படைத்தலைவர்களுக்கும் “வன்னிபம்” என்னும் பட்டத்தைக் கொடு;த்தான் என்பதனாலும் புத்தளத்துக்கு முற்குக வன்னிமைகள் திருகோணமலை வரை பரவியிருந்தது என்பதனாலும் திருமலையில் வன்னிமைகள் குகன் குலத்தவர்களிடம் இருந்ததென்பது புலனாகின்றது. மேலும் குளக்கோட்டன் சோழகங்ன் என்ற பெயரைப் பெற்றிருந்தான் என்று தட்~ண கைலாயபுராணம் கூறுவதனாலும் இவன் சேதுபதி மகாராஐhவின் வழிதோன்றல் என்ற சில கருத்துக்களினாலும் வெடியரசனின் நீலகேசியின் உறவினராகவும் எண்ண இடமுண்டு. இச்சேதுபதிகள் குகன் குலத்தவராவார். கொட்டியாரம்வதi;த நேர்ந்த வெருகல் என்னும் ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு ஒரு கோவிலின் தெற்கு மதிலைக் கைலாயவன்னியர் 16ஆம் நூற்றாண்டில் கட்டினர் என்பர். கஐவாகு மன்னனின் திருப்பணி காலத்தில் வன்னிமை திருமலையில் இருந்தது என்றும் இவன் வன்னிபம் தானம், வரிப்பத்து  நாட்டவர்களை அழைத்து விசாரணை செய்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து குளக்கோட்டனின் முன்(கி.பி2) பூசை செய்வித்தான் என்பர்.  இக்காலம் வெடியரசன் காலமும் அவன் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பழமை போல் வன்னிமை பெற்றகாலமும் என்பது நூன்முகக் கல்வெட்டில் காணலாம்.


திருகோணமலையில் கோயில் அமைத்த வரராமதேவ சோழன் நோய்வாய்ப்பட்டு வரமுடியாமல் இருந்ததால் திருமலை தம்பலகாமம் கோணேஸ்வரங்களைக் குளக்கோட்டு மன்னரே பார்த்துப் பரிபாலித்து வந்தார். தம்பலகாமம் ஆலய உருவ, அருவ வழிபாடுகள் என இரண்டு வழிபாடுகள் உடையது. ஆகையால் தொழும்பு செய்வோர் தொகை 50 பேர்களுக்கு மேல் இருந்தது. இவர்களுக்கிடையே குறிப்பாக தானம் வரிபற்றுத் தொழும்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டு வந்தன. இவர்களின் பிணக்குகளைத் தீர்த்து கோயில் நிர்வாகங்கள் சரியாக நடைபெற “திருமலை இராஜ்யம்” என்றொரு தர்ம அரசை நிறுவிக் குளக்கோட்டு மன்னன் பாண்டிநாடு சென்று மதிக்குலத்துதித்த பாண்டிய இளவரசனை அழைத்து வந்து திருமலையைத் தலைநகராகக் கொண்டு தாம் நிறுவிய திருமலை ராஜ்ய மன்னராக அரசு கட்டில் ஏற்றி வன்னிமை என்ற சிறப்புப் பட்டத்தையும் ஈந்தார்.


அந்த அரச குமாரனின் இயற்பெயர் தனி உண்ணாப் பூபாலன். குளக்கோட்டு மன்னன் இந்த அரச குமாரனை திருமலை இராஜ்ய மன்னராக அரியணை இருத்தி வழங்கிய சிறப்புப் பட்டம் வன்னிமை எல்லாமாகச் சேர்ந்து திருமலை இராஜ்ய மன்னரின் பெயர் தனி உண்ணாப் பூபால வன்னிப அரசன் ஆட்சி செய்தான். ஆலோசனை கூறக் கனக சுந்தரப்பெருமாள் போன்ற தூயோர் இருந்தனர். அரசனுக்குக்கீழ் 32 தலைமைக்காரர்கள் இருந்தனர்.


திருமலை இராஜ்ய தனி உண்ணாப்பூபால வன்னிமையாகிய அரச பரம்பரை காலப்போக்கில் அருகிக் குறைந்தது. இந்த அரச மரபினரில் சிலர் பிற்காலம் தம்பலகாமம் தெற்கில் வர்ணமேட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்தனர். அந்த இடம் இன்னும் வன்னிச்சியார் திடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.


14ம் நூற்றாண்டில் யாழ்ப்பானத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருமலை வன்னிமை மேல் ஆதிக்கம் பெற்றிருந்தனரென்றும் கொள்வதற்கு சில சான்றுகளுள்ள. அந்நூற்றாண்டை சேர்ததென்று கருதப்படும் நம்பொத்த என்ற சிங்கள நூல் திருகோணமலை தெமள பட்டணத்தில் (தமிழரசின்) அடங்கியிருந்ததெனக் கூறுகின்றது 39 தஸ்ண கைலாச புராணம் சொல்வனவற்றிலிருந்து திருமலையிலே செகராசசேகரனின் ஆதிக்கம் நிலவியதென்பதை உய்த்துணர முடிகின்றது.

திருகோணமலை நெடுங்காலம் யாழ்ப்பாணத்தரசர் ஆட்சியிலிருந்து வந்தும் பின் நிகழ்ந்த குழப்பங்களினால் அவ்வரசர் ஆட்சியினின்றுந் தவறி கி.பி 1546 அளவில், வன்னிய அதிகாரிகளின் சுயவரசாக சிலகாலமும் கண்டியரசன் ஆணையின் கீழ்ச் சிலகாலமும் ஆளப்பட்டது.  அக்காலத்தில் திருகோணமலையில் வன்னியர்கள் சிற்றரசர்களாக இருந்தார்கள் எனவும் கண்டியரசன் சபையில் இவ்வன்னியர்களின் பிரதிநிதிகள் இருந்தார்களெனவும், திருகோணமலை கண்டியரசனின் துறைமுகமாகவிருந்ததெனவும் ஆங்கு ஓர் கோட்டையை கட்ட போர்த்துக்கேயருக்கு கண்டியரசனாகிய விக்கிரமபாகு உத்தரவு கொடத்தான் எனவும் தெரியவருகின்றது.


கி.பி 1551ஆம் ஆண்டளவில் திருகோணமலை வன்னியனிறக்க அவன் மகன் எட்டுவயதுள்ள சிறுவனாயிருந்ததால் சங்கிலியனாகிய செகராசசேகரன் பழைய உரிமையின்படி நாடு தனதென்று பலாத்காரமாக விவாதஞ் செய்தான். அவ்விளவலுக்குப் பரிபாலனாகிய வன்னியனொருவன் இச்சிறுவனுடனும் பரிவாரத்துடனும் கோடிக்கரை சென்று போர்த்துக்கேயரின் உதவியை வேண்டினான. அவர்கள் கொடுத்த பரதவச்சேனையுடனும் சில போர்த்துக்கேயருடனும் அவ்வன்னியன் திருக்கோணமலை வந்து தான் எண்ணியவாறு முடியாமைக்கண்டு பரதவச்சேனையுடன் வன்னியாகுமாரனைக் கோடிக்கரைக்கு போர்த்துக்கேயரிடம் அனுப்பினான்.  அத்துடன் பரிபாலகனாகிய வன்னியரசனை செகராசசேகரன் திருகோணமலைக்கு சிற்றரசனாக இருத்தி தனக்கடங்கி நடக்கும்படி நியமித்தான்.


ஆரியசக்கரவரத்தி செகராசசேகரன் பரராசசேகரன் என்ற யாழ்பாணத்து மன்னர்கள் கோணேசர் கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கிய தானங்களை பற்றிக் கோனேசர் கல்வெட்டுச் செப்புகின்றது பரராசசேகரன் செகராசசேகரன் ஆகிய இருவரும் கோண நாதரை தரிசனம் பன்னி ஏழுபட்டு முத்துமாலை பவளக்குடை ரத்தினபதக்கம் முதலியவற்றை கொடுத்து குருகுலக்கணக்கில் பதிப்பித்து ஆலயத்திருப்பணிகளுக்குத் தேவையான துணிகலை பெறுவதற்குத் திரியாயுரிலுள்ள வயல்கலையும் ஏழுகுளங்களையும் கொடுத்ததாகவும் இந்நூல் கூறும் இத்தகவல்கள்  ஆதாரபூர்வமானவையெனின் சில யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிமை மீது ஆதீக்கம் பெற்றிருந்தனரென்றும் கொள்ளலாம் எனினும் இவ்வரசர்கள் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது


15-16ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னியரோடு மணத்தொடர்பு கொண்டிருந்தனர் கனகசூரிய சிங்கையாரியனும் புதல்வரும் வடதேசத்தில் இருந்து ஈழத்திற்கு திரும்பிய போது திருகோணமலையிலே தங்கிய பின்னரே தமது நாட்டை மீட்டனரென்றும் யாழ்பாண வைபவமாலை கூறுகின்றது. செண்பகபெருமாள் என வழங்கிய சபுமள் குமாரன் யாழ்ப்பாணத்தை விட்டு கோட்டைக்கு சென்ற காலத்தில் கனகசூரிய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்திலே தன் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு தன்னுறவினனாகிய திருமலை வன்னியரிடமிருந்து படைத்துனைப் பெற்றிருக்கக்கூடும் சங்கிலியன் ஆட்சிக்காலத்திலே யாழ்ப்பாணத்தரசனும் திருமலை வன்னியனும் ஒருவருக்கெருவர் துணையாகவிருந்து போர்த்துக்பேயரை எதிர்த்து வந்தனர் திருமலை வன்னியனும் இறந்தபின்னார் அவனது மகன்  இளைஞனாக இருந்ததனால் சங்கிலி வன்னியை ஆளுவதற்கு தானே உரிமையுடையவன் என்றும் சொல்லி அதன் ஒரு பிரிவை கைப்பற்றிக்கொண்டான.; சங்கிலி இறந்தபின் கண்டியரசர் திருமலை வன்னியிலே தங்களாதிக்கத்தைத் திணித்தனர் .


நீதிபரிபாலனத்துறையில் வன்னிபத்திற்குரிய அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கோணேசர் கல்வெட்டு நூலில் மேல்வரும் பாடல் வரிகள் குறிப்பதாயுள்ளது.

சுத்தமிகு வன்னிமை குற்றஞ் செய்தாற்…………
இரத்தின மணியாசனத்தி லிருத்திவைத்தான்.

கொலை புரிவோருக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரம் வன்னிபத்துக்கு உரியதாயிருந்தது. பிறகுற்றங்களைப் புரிவோரை அவரவர் செய்த பழிகளுக்கேற்ப விலங்கிட்டுக் கசையடி கொடுப்பது வழமை. கோயிலிலுள்ள நாட்டியப் பெண்கள் கற்றம் புரியுமிடத்து, அவர்களை நிறைந்த நீரில் நிறுத்தி வைத்துத் தண்டிக்கவேண்டும். ஏனைய பெண்கள் குற்றம் புரியும் வேளைகளில் மண்கடகத்தைச் சுமக்குமாறு செய்தும், அடித்தும் தண்டிக்க வேண்டும். கோணேசர் கோயிலில் ஆராதனைகளையும் ஆலய சேவைகளையும் தடையின்றி சிறப்பாகவும் செய்விப்பது திருகோணமலை வன்னிபத்திற்குச் சிறப்பாகவுள்ள பொறுப்பாகும்.


 “மையனைய கணடர் திருகோணநாதர் மஹாபூசை திருப்பணியும் வழங்கச் செய்யே” என்பது வன்னிபத்தை நோக்கிச் சொல்லப்பட்ட நியதி என்று கவிராசவரோதயன் செப்புகின்றமையும் கவனித்தற்குரியது. கோயிற் காரியங்கள் தொடர்பாக தானம், வரிப்பத்தார், முதன்மை, நாட்டவர் முதலியோரை அழைத்து அவர்கள் முன்னிலையிலே சில சமயங்களில் வன்னிபம் விசாரணைகள் நடத்தியமை பற்றிக் கோணேசர் கல்வெட்டின் உரைநடைப் பகுதிலே சில குறிப்புகள் காணப்படுகின்றன.


திருகோணமலை வன்னிபம் பற்றிக் கோணேசர் கல்வெட்டிலுள்ள சில செய்திகள் கங்குவேலிக் கல்வெட்டின் மூலம் உறுதியாகின்றன. 14ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் அமைந்த அக்கல்வெட்டின் வாசகம் மேல்வருமாறுள்ளது.

மலை(யில்) வன்னியனாரும் ஏழுரில் அடப்பர்களும் கூடி
தம்பிரான் கோணைநாதனுக்கு கங்குவேலியில் வெ(ளி)
யும் புல்நடப்(பு)ம் ஆக விட்டோம். யிதுக்கு யாதொருவன்
ஆகிலும் ஆகுதம் நினைத்தவர்கள் கெங்கைக் கரையிலே
காராம்பசுiவைக்கொன்ற பாவம் கொள்ளக் கடவர் ஆகவும்,
யிப்படிக்கு யிரண்டு முதிமை, தானம், வரிப்பற்றும்.

இச்சாசனம் மூன்று வசனங்களைக் கொண்டுள்ளது. முதலாவது வசனம் கங்குவேலியிலுள்ள வெளியொன்றினையும் புல்வரியினையும் மலை வன்னியனாரும் ஏழூ;துணர முர்களின் அடப்பர்களும் கோணைநாதர் கோயிலுக்குத் தானம் செய்தமையினைக் கூறுகின்றது. அரசன் எவனைப்பற்றியும் சாசனம் குறிப்பிடாதமையாலட மலை வனடனியனார் இ;ச்சாசனம் எழுதப்பெற்ற காலத்திலே சுதந்திரமாகவே ஆட்சி செய்தான் என்பதை ஊகித்துணர முடிகின்றது. வேறெந்த வன்னிபமும் மலையில் வன்னயனார் திருகோணமலை வன்னிபமாதல் வேண்டும். மேலும் இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திற் கொட்டியாரம்பற்றிலுள்ள கங்குவேலி என்னும் கிராமமும் திருகோணமலை வன்னிபத்தின் அதிகாரத்தின் கீழிருந்தது என்பதும் அறிpயப்படுகின்றது. கரையோரக் கிராமங்களின் தலைவர்களை அடப்பர் என்று வர்ணிப்பது வழமை. இச்சாசனங் குறிப்பிடும் ஏழூர்களும் கொட்டியாரம்பத்தைச் சேர்ந்த கிராமங்களாதல் வேண்டும்.


சாசனத்தின் இறுதி வசனமானது முதலிமை, தானம், வரிப்பற்று ஆகியோரைக் குறிப்பிடுகின்றது. இலங.கையிலுள்ள சாசனங்களில் இது ஒன்று மட்டுமே இம்மூன்று வகையோரும் கோணேசர் கோயிலோடு  தொடர்புடையவர்கள் என்று நூல்கள் கூறுவதாலும், வேறெந்தவொரு கோயிலுடனும் இம்மூன்று வகையினரும் சம்பந்தப்பட்டிருந்ததைக்கு எந்தவிதமான ஆதாரங்களுங் கிடைக்காதமையாலும், கங்குவேலிக் கல்வெட்டுக் குறிப்பிடும் முதலிமை, தானம், வரிபற்று ஆகியோர் திருக்கோணேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகின்றது. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைக் கோயிலின் சார்பிலே பொறுப்பேற்றுக்கொள்வோர் என்ற வகையில் இவர்களைச் சாசனம் குறிப்பிடுகின்றது.. யிரணடு முதலிமை என்ற சாசனத்தொடரானது இருபாகை முதன்மை, ஒருபாகை முதன்மை என்று கோணேசர் கல்வெட்டு வர்ணிக்கும் பிராமணக் குரவரிருவரையுமே குறிப்பிடுவதாய் அமைகின்றது. தானத.தார., வரிப்பத்தார் என்போர் பற்றி நூல்கள் கூறுவனவும் கங்குவேலிச் சாசனத்தால் ஒருவாறு உறுதியாகின்றன.


திருகோணமலை வன்னிபங்கள் பூபாலக்கட்டு என்னுமித்திலுள்ள மாளிகையிலே வாழ்ந்தனர் என்பதைக் கோணேசர் கல்வெட்டால் அறியமுடிகிறது. தனியுண்ணாப்பூபால வன்னிபங்கள் 32போரின் பட்டியலொன்றும் இந்நூலிலுள்ளது.
 
வன்னிபம் வரவு, காரைநகரால் வந்த வன்னிபம், சோழநாட்டு வன்னிபம், மருங்கூர் வன்னிபம் என்று உரைநடைப்பிரிவில் வரும் நான்கு தலைப்புக்களின் கீழும் உள்ளவை பெயர்ப்பட்டியல்களே. திருகோணமலைப் பிராந்தியத்திலுள்ள நான்கு வன்னிமைப் பிரிவுகளுக்கு தலைவர்களாக விளங்கிய வெவ்வெறு வம்சங்களைச் சேரந்த வன்னிபங்களின் பெயர்பட்டியல்களாகவே இவை கொள்ளத்தக்கவை. மருங்கூர் வன்னிபம், சோழநாட்டு வன்னிபம், காரைசகரால் வந்த வன்னிபம் என்ற தலைப்புகளின் கீழே முறையே 37, 31, 42 என்ற எண்ணிக்கையிலுள்ளவர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. திருகோணமலை வன்னிபங்களுக்கு தனியுண்ணாப் பூபாலன் என்பது குலப்பெயராக விளங்கியது போல சிங்கன், குமாரசிங்கன் என்பன முறையேய சொழநாட்டு வன்னிபம், மருங்கூர் வன்னிபம் ஆகிய வம்சங்களுக்குரியவர்களின் குலப்பெயர்களாக விளங்கின. இந்நான்கு வம்சங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே வன்னிமைப் பிரிவில் வரிசைக் கிரமமாக ஆட்சி புரிந்தவர்கள் என்று கொள்ளும் விதமாக கூறியுள்ளதன் மூலம், வன்னியர் வம்சங்களைப் பொறுத்தவரையில் கோணேசர் கல்வெட்டு ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கனகசுந்தரப் பெருமாளை ஒரு சந்தர்ப்பத்திலே “சோழவள நாடன் திருநெல்வேலிக்கதிபதியான கனகசுந்தரப் பெருமாள்” என்று கோணேசர் கல்வெட்டு வர்ணிக்கின்றது. ஆகையாற் சோழநாட்டால் வந்த வன்னிபத்தின் வம்சத்தவரான சிங்க வன்னிபங்கள் கட்டுக்குளப்பற்றை சேர்ந்தவர்கள் என்பது உணரப்படுகின்றது. கோணேசர் கல்வெட்டு குறிப்பிடும் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களும் வெவ்வெறான நான்கு நிலப்பிரிவுகளில் அதிகாரஞ் செலுத்தியவர்கள் என்ற கருத்தும் இதனால் வலியுறுத்தப்படுகின்றது.


கட்டுக்குளம் பற்றும் ஒரு வன்னிமையாக அமைந்திருந்தது. என்பது உரைநடைப்பகுதியிலுள்ள பிரிவொன்றினாலே அறியப்படுகின்றது. குளக்கோட்டன் திருநெல்வேலியிலுள்ள காராளனொருவனை அழைத்து வந்து, அவனுக்கு “இலங்காபுரியிற் கட்டுக்குளப் பற்றடங்கலு மூராட்சியுங் கொடுத்து, நிலாவெளி நிந்தவூராகக் கொடுத்து……. வன்னிபத்துச் சரியான வரிசைமானியமுங் கொடுத்து இனி எந்தக்காலமும் இச் சிவாலயத்தில் நடக்கப்பட்ட காரியங்கள் உன் வம்சத்தவர்கள் எழுதி வரவேண்டியது” எனவும் “சற்புத்திரனாகிய பொறுதிவிசாரமுள்ள மருமக்களிடமிருந்து வரவேண்டியது” என்றும் திட்டம் பண்ணினான் என்று சொல்லப்படுகின்றது.


கனகசுந்தரப்பெருமாள் என்னும் பட்டமும் ஆலயத்தின் முன்னீடும் கோயிற்கணக்குகளைப் பற்றிய பொறுப்பும் கட்டுக்குளம் பற்று வன்னிபத்தின் உரிமைகளாய் இருந்தன என்பது கோணேசர் கல்வெட்டிலுள்ள மேல்வரும் பகுதியினால் அறியப்படுகின்றது.


கட்டுக்குளம்பற்று வன்னியர் காராளர் குலத்தவர். கல்வெட்டிற் காராளப் பற்றியுள்ள மேல்வரும் வர்ணனை மெய்க்கீர்த்தி வடிவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“வடக்குநாடன் திருநெல்வேலிக்கதிபதி செங்குவ ……                                                                
அளவிட ற்கரிதாம்”  

வன்னியர் குலமொன்றின் சிறப்பினை மெய்க்கீர்த்தி வடிவிலமைத்துக் கூறும் இது போன்ற வர்ணனை எதுவும் வேறெந்த நூலிலுங் காணப்படவில்லை. கட்டுக்குளப்பற்று வன்னிபங்களைப் பொறுத்தவரையில் பரம்பரை உரிமைகள் மருமக்கள் தாய முறையில் உள்ளவை என்று கூறப்பட்டுள்ளமையும் ஆதாரபூர்வமானது.

கொட்டியாரம் பற்றிலே 16, 17ஆம் நூற்றாண்டுகளிலே ஆட்சி புரிந்த வன்னிபங்களைப்பற்றிய பல்வேறு மூலங்களிலிருந்த அறியமுடிகின்றது. வெருகல் சிதிதரவேலாயுதற் சுவாமி கோயிலிலுள்ள சாசனமொன்று கயில வன்னியனார் என்னுமொருவரைக் குறிப்பிடுகின்றது. இச்சாசனத்திலே காலம் பற்றிய குறிப்பேதும் இடம்பெறவில்லை. எனினும் அதிலுள்ள எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பின் அடிப்படையில் சாசனம் 16ஆம் நூற்றாண்டிலே எழுதப்பெற்றதென்று கருதலாம். அச்சாசனம் மேல்வருமாறு:

“ஸ்ரீ சுப்ரமண்ய நம, தெற்குமதில் கயில வன்னிய
னார் உபயம்(ம) திமராசா மகன் பழையிற் சிதம்பரப்
பிள்ளை. மேற்குப் பிறமதில் மட்டக்கழப்பூரவர் நிகொம்
புக்கரையூரவர். வடபுறம் செட்டியன் உபையம்”.

சித்திரவேலாயுத சுவாமி கோயிற் திருப்பணிகள் நடைபெற்ற பொழுது, அதன் தெற்கு மதில் கயிலாய வன்னியனார் என்பவரினால் கட்டப்பெற்றது என்பதை இச்சாசனம் வாயிலாக அறியமுடிகின்றது. கயிலாய வன்னிபம் என வழங்கிய மூவரைப்பற்றிக் கோணேசர் கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. காரைநகரால் வந்த வன்னிபங்களை பற்றிய பட்டியல்களில் காணப்படும் பெயர்களில் நான்காவதாக வரும் பெயர் கயிலாய வன்னிபம் என்பதாகும். சோழநாட்டு வன்னிபங்களின் வம்சத்திலுள்ளவர்களிற் பதின்மூன்றாவது பெயராக வருவது கயிலாயசிங்க வன்னிபம். மருங்கூர் மரவிலுள்ள வன்னிபங்களின் பெயர்களிற் 14ஆவது இடத்திலுள்ளது. கயிலாய குமாரசிங்க வன்னிபம் என்பதாகும். வெருகற் கல்வெட்டுக் குறிப்பிடும் கயிலாய வன்னியனார் இம்மூவருள் ஒருவனென்றும் அவனுடைய ஆட்சி கொட்டியாரம் பற்றில் அமைந்திருந்ததென்றும் கொள்ளலாம்.

கொட்டியாரப்பற்று சுதந்திர சிற்றரரசாக இருந்த காலப்பகுதி தொடர்பான தகவல் 14ஆம் நூற்றாண்டில் கிடைக்கின்றது. கங்குவேலிச் சிவன் கோயில் கல்வெட்டு அதற்கான ஆதாரமாக் காணப்படுகின்றது. இது பூமி தானம் தொடர்பன ஒரு கல்வெட்டு. இதனைப் பொறித்த வன்னிபத்தை திருகோணமலை வன்னியனார் என இனங்காணும் போராசிரியர் சி.பத்;மநாதன் அவர்கள் அவ்வன்னிபம் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் கொட்டியாரப்பற்றில் அதிகாரம் பெற்றவராக இருந்தார் என்கிறார். அத்துடன் அவ்வன்னிபம் மேலாதிக்கம் செலுத்தும் அதியரசன் எவருமில்லாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தவன் என்பதையும் அவர் பதிவு செய்கிறார்.

கொட்டியாபுர வன்னிபங்கள் தொடர்பான தகவல்களைத் தரும் இலக்கிய ஆதாரமாக கோணேசர் கல்வெட்டு என்;கின்ற நூல் முக்கிய இடம்பிடிக்கின்றது. கவிராஐவரோதயன் அவர்களால் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்;பட்டதாகக் கருதப்படும் இந்நூல் சாசன ஆதாரங்களைக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கிய நூலாகக் கருதப்படுகின்றது. குளக்கோட்டு மன்னனால் ஒழுங்கமைக்கப்பட்ட வன்னிபங்களின் பெயர் விபரங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இரண்டாவது இலக்கிய ஆதாரமான வையாபாடல் 16ஆம் நூற்றாண்டளவில் வித்துவான் வையாபுரி ஐயர் அவர்களால் இயற்றப்பட்து. இதில் மாமகன் எனும் வன்னியன் வெருகல், தம்பலகாமம் எனும் பிரதேசங்களை ஆண்டதாகச் சொல்கின்றது.

16ஆம் நூற்றாண்டிலே முடிவிலே கொட்டியாரம்பற்று வன்னிமையிற் கண்டியரசர்களின் மேலாதிக்கம் ஏற்பட்டிருந்தது. கண்டியில் அரசுரிமை குறித்து ஜயவீரபண்டாரனுக்கும் விமலதர்மனுக்குமிடையிற் போர் ஏற்பட்டபொழுது, ஜயவீரனுக்கு ஆதரவாகக் கொட்டியாரம்பற்று வன்னிபம் 7980 போர்வீரர்களையும், 600 கூலியாட்களையும், 1000 பொதிமாடுகளையும், 30 போர் யானைகளையும், 25 அலியன் யானைகளையும் அனுப்பியிருந்தான் என்று சொல்லப்படுகிpன்றது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கி.பி 1611இல் கண்டியரசன் போர்த்துக்கேயருக்கு எதிரான போராயத்தங்களை மேற்கொண்ட பொழுது அதற்காகக் கூட்டப்பட்ட இராசதானி பிரதானிகள் சபையில் கொட்டியாபுரப்;பற்று வன்னிபம் “இடலி” கலந்துகொண்டான்.; எனினும் 1612ஆம் ஆண்டில் கொட்டியாபுர வன்னிபம் கண்டியரசனுக்கு எதிரான கிளர்ச்சியொன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டத்தினில் பங்குகொண்டானென குற்றம் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக கண்டி அரசசபையிலே பிரசன்னமாகுமாறு வன்னிபத்திற்கு அரசன் கட்டளையிட்டான்.

வன்னிபமான இடலி நோய்வாய்ப்பட்டு இருந்த காரணத்தினால் தன்னை அழைத்தமைக்கான காரணத்தினைக் அறிவதற்கு தனது மருமகளை இராசதானிக்கு அனுப்பி வைத்தான். இதன் பிரதிபலனாக கொட்டியாபுரத்து வன்னிபம் கண்டி அரசனுடைய விசுவாசத்தினைப் மீண்டும் பெற்றுக் கொண்டான். அதனை அதற்கு அடுத்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகள் உணர்த்துவதாக இருந்தது.

17ஆம் நூற்றாண்டிற் போர்த்துக்கேகயராலும் ஒல்லாந்தராலும் எழுதப்பட்ட நூல்களிலே இலங்கையிலுள்ள இராச்சியங்கள், சிற்றரசுகள் என்பவற்றுட் திருகோணமலை, கொட்டியாரம் என்பனவும் குறிப்பிடப்படுகின்றன.

கி.பி 1613ஆம் ஆண்டில் கண்டி அரசன் நோயற்றிருந்தான். அவன் தான் இறக்கநேரிடும் என்ற எண்ணம் ஏற்பட்டதனால் தனது வாரிசாக இளவரசனை நியமிப்பதற்கும், அரச பரிபாலனத்தை கொண்டு நடாத்தவதற்கும் ஒரு குழுவினை நியமிப்பதற்கு இராசதானிகள் சபையினைக் கூட்டினான். அச்சபையின் முடிவுகளைத் தெரிவிப்பதற்கென இளவரசனை அழைத்துவரும் பொறுப்பினை கொட்டியாபுரப் பற்று வன்னிபத்திடம் கண்டி அரசன் ஒப்படைத்தான்.

கி.பி 1619ஆம் ஆண்டு திருகோணமலையில் உள்ள போர்த்துக்கேயரின் கோட்டையை ஒல்லாந்தரின் கடற்படைத்தலைவன் 12 கப்பல்கள் அடங்கிய படையுடன் முற்றுகையிட்டான. அவனுக்கு உதவியாக கொட்டியாபுரப் பற்றில் இருந்து 500 படைவீரர்களும் தொழிலாளர்களும் சென்றிருந்தனர். கொட்டியாரபுரத்து வன்னிபம் கண்ணில் ஊனமுற்று ஐந்து வருடங்களாக நோய்வாய்பபட்டிருந்ததால் அவ்வன்னிபம் போரில் பங்குகொள்ளவில்லை எனச் சொல்லப்படுகின்றது. எனினும் கொட்டியாரபுர வன்னிபம் மூலமாக கோட்டைக்கு போகும் இரகசியப் பாதையை ஒல்லாந்தர் அறிந்து கொண்டனர்.
இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் இளஞ்சிங்கம் என்பவன் கொட்டியாரம்பற்று வன்னிபமாக விளங்கினான. என்பதை விரக்கோன் முதலியார் பாடிய சித்திர வேலாயுதர் காதல் மூலம் அறியமுடிகின்றது. இளஞ்சியங்க வன்னிபத்தின் தலையிலே சித்திரவேலாயுத சுவாமி கோயில் மண்டபத்திலே, தேசத்தவர் கூடியிருந்த மகாநாட்டிலே, வீரக்கோன் முதலி பாடிய பிரபந்தம் அரங்கேற்றங் கண்டது என்பது இவற்றாலே தெளிவாகின்றது.

கொட்டியாரபுர பற்று வன்னிபம் இருமரபுந் துய்ய இளஞ்சிங்க வன்னியனார் வீரமும், தமிழ்பற்றும் ஒருங்கே கைவரப் பெற்றவராக விளங்கினார். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டி மன்னன் இரண்டாம் இராஐசிங்கன் (கி.பி1635 – 1687) ஆட்சிக்காலத்தில் இளஞ்சிங்க வன்னிபத்தின் முன்னிலையில் நூல் அரங்கெற்றம் ஒன்று நடந்திருக்கின்றது. தம்பலகாமத்தைச் சேர்ந்த விரக்கோன் மதலியார் பாடிய ஸ்ரீ சித்திர வேலாயுதர் காதல் எனும் நூல் அரங்கேற்றம் வெருகல் சித்திரவெலாயுதர் கோயில் மண்டபத்தில் நிறைவேறியது. அங்கு கூடியிருந்த தெசத்தவர் மகாநாட்டில் கொட்டியாபுர வன்னிபம் இருமரபுந் துய்ய இளஞ்சிங்க வன்னிபம் தலைமை தாங்கி சிறப்பிக்க நூல் அரங்கேறியிருகிறது.இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் நூல் அரங்கேற்றம் பற்றிய தகவல்களை சிறப்பாகக் கொண்டிருக்கும் இந்நூல் இளஞ்சிங்க வன்னிபம் தொடர்பான தகவல்களைத் தருவாதாக இருக்கிறது.


இதற்கடுத்ததாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாசனம் ஒன்று வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் இருக்கிறது. “ஸ்ரீ சுப்ரமண்ய நம தெற்கு மதில் கயில வன்னியனார் உபயம்” எனக் குறிப்பிடும் அச்சாசனத்தின் வரிவிடங்கள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுக்குரியவை  அக்காலத்தில் கொட்டியாரப்பற்றில் அரசு புரிந்த கயில வன்னிபத்தால் தேசத்துக் கோயிலான வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலின் தெற்கு மதிற் சுவர் கட்டிக்கொடுக்கப்பட்டதை அது ஆதாரப்படுத்துகின்றது.

18அம் நூற்றாண்டில் திருகோணமலை மாவட்ட ஒல்லாந்து ஆளுனர் ஏயுN ளுநுNனுநுN அவர்கள் 15.05.1786 அன்று கொட்டியாபுரப் பற்றுக்கு விஐயம் செய்திருந்தார். அவரை கொட்டியாரபுரப் பற்று வன்னிபம் இருமரபுந் துய்ய எதிர்வீரசிங்க நல்ல மாப்பாண வன்னியனார் மூதூரின் இறங்குதுறையில் வைத்து வரவேற்றார் ஆளுனர் தனது விஜயத்தின் போது ஊர் மக்களதும் கிராமத் தலைவர்களினதும் கூட்டத்தில் (02.06.1786) ஆளுனர் இல்லாதபோது வன்னியனாரின் வீட்டில் தங்கியிருந்த அவர் அவ்வன்னியனார் சிறிதுகாலத்துக்கு முன்னர் காலமானதைப் பதிவு செய்கிறார். எனினும் அவ்வன்னியனாரின் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

19அம் நூற்றாண்டில் கொட்டியாரபுரத்து வன்னிபம் தொடர்பாக இரண்டு குறிப்புகள் கிடைக்கின்றன.  1893.06.14 இல் கொட்டியாரபுரப் பற்று மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபம் பற்றி அவரது தம்பலகாமம் கோணைநாயகர் கோவில் பராமரிப்புத் தொடர்பான நியமன உயில் மூலமாக அறியக்கிடக்கின்றது. அவ்வுறுதியில் சாட்சியங்களாக கையொப்பமிட்டு இருப்பவர்களுள் மூதூர் தம்பையா முத்துக்குமாரு வன்னிபமும் ஒருவர் என்பமு சிறப்பம்சமாகும்.


 10.04.1815 ஆம் ஆண்டில் திருகோணமலைப்பிரதேசத்தினைச் சேர்ந்த நான்கு வன்னிப்பிரிவுகளினதும் தேசவழமைகள் குறித்த அறிக்கையினை பிரதம நீதியரசரான அலெ~hந்தர் Nஐhன்ஸ்ரன் அவர்களுக்கு வன்னிபங்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். அவ்வறிக்கையில் கொட்டியாரபுரப் பற்றிலுள்ள வழமைகள் தொடர்பில் கொட்டியாரப்பற்று வன்னிபத்தால் அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் திருமணம் தொடர்பான நடைமுறைகள், சட்டங்கள், சீதனம், சொத்துரிமை, நன்கொடைகள்,சொத்து விற்பனை தொடர்பான விடயங்கள், வளர்ப்பு பிள்ளை( மஞ்சள் நீர்ப்பிள்ளை) தொடர்பான கடமைகள் போன்ற விடயங்கள் விபரிக்கப்பட்டிருந்தன.


இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கொட்டியாரப்பற்றின் வன்னிபங்களாகச் செயற்பட்ட சிலரின் பெயரினை பிரித்தானிய ஆவணங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 1939ஆம் ஆண்டில்  திரு.வு.சங்கரப்பிள்ளை அவர்களும், 1924ஆம் ஆண்டில் திரு. சின்னப்பு நவசிவாயம் அவர்களும் கொட்டியாரப்பற்று வன்னிபங்களாகக் கடமையாற்றினார். 1912ஆம் ஆண்டு ஆடி மாதம் 15,16 திகதிகளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற மகாநாடு ஒன்றில் கொட்டியாரப்புரப் பற்று வன்னிபம் திரு. னு. துரையப்பா கலந்து கொணடிருந்தார். மேலே குறிப்பிட்டவர்களில் வன்னிபம் திரு. சின்னப்பு நவசிவாயம் அவர்களின் பாட்டனார்( கதிரவேலு வன்னிபம்), மாமனார் (கந்தப்பர் வேலுப்பிள்ளை வன்னிபம்) இருவரும் கொட்டியாரப்பற்று வன்னிபங்களாக கடமையாற்றியவர்கள். எனினும் அவர்களது பதவிகாலம் பற்றிய விடயங்கள் உறுதியாகத் தெரியவில்லை.

        திரு. யு. கனகசிங்கம் என்பவர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தி;ல் தம்பலகாமப்பற்று வன்னிபம் எனும் பதவியினை வகித்த நியமன வன்னிபமாவார்.  1939ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் தம்பலகாமப்பற்று வன்னிபமாக கடமையாற்றி இருக்கிறார். இவர் தனது பதவிக்காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலடியில் குடும்பத்தினருடன் வசித்திருக்கிறார். இவர் தனது வன்னிபப் பதவிக்கு மேலதிகமாக இங்கு இக்கிராமிய நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் செயற்பட்ட இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

திருகோணமலையின் சரித்திரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதன் உற்பத்தி வரலாறு வடமொழிப் புராணங்களிலும் சைவப்புராணங்களிலும் மிகவும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது திருகோணமலைப் பற்றிலிலுள்ள பூபாலக்கட்டு எனும் இடத்திலுள்ள மாளிகைகளில் வாழ்ந்த “தனியுண்ணாப் பூபாலன்” எனும் சிறப்புப் பட்டம் தாங்கிய 32 வன்னிபங்களுக்கு அடுத்ததாக மருங்கூர் வன்னிபம் 37பெரும், சொழநாட்டு வன்னிபம் 31பேரும், காரைநகர் வன்னிபம் 42பேரும் இந்நூலில் அடங்கியிருக்கின்றது. தம்பலகாமப் பற்று, கொட்டியாரப்பற்று,கட்டுக்குளப் பற்று என்ற மூன்று வன்னிபங்களாக காரைநகர், மருங்கூர், சோழநாட்டுக் குலங்களில் வந்த வன்னியங்கள் கருதப்படுகின்ற போதும் தனித்தனியாக அவர்களை இனங்காண்பது கடினமானதாக இருக்கின்றது.

மேலும் பல ஆய்வுகள் செய்தால் கொட்டியாபுரப்பற்றினை ஆண்ட வன்னிபக் குலம் எதுவென அடையாளம் காணலாம். அத்தடன் இதுவரை பார்த்த திருகோணமலை வன்னிபங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒரு முழுமையடையாத தொகுப்பாகும்.காலவரையறைப்படி ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் கொட்டியாபுரப் பற்று வன்னிபங்கள் தொடர்பான தகவல்களைக் பதிவு செய்ய இன்னும் பல முதல்நிலைத் தரவுகள் தேவைப்படுவதாக இருக்கிறது. அவை இன்னும் வெளிப்படுத்தப்படாத கல்வெட்டுக்களாக ஓலைச்சுவடிகளாக, காணி உறுதிகளாக, தொல் பொருட் சின்னங்களாக, ஐரோப்பியர் ஆவணங்களாக, வாய்மொழி வழங்காறுகளாக நம்மைச் சுற்றி இருக்கக்கூடும். அவற்றைத் தேடி முறையாக வெளிப்படுத்துவதன் மூலமே அந்த இலக்கினை அடைய முடியும்.

மேலும் திருகோணமலை, வெருகல், மல்லிகைத்தீவு, சம்பூர், கிளிவெட்டி, பள்ளிக்குடியிருப்பு முதலில் பழமைவாய்ந்த தமிழ்கிராமங்களை முறையான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படின் குளக்கோட்டன் திருப்பணிகள் மற்றும் திருகோணமலை வன்னிபங்கள் பற்றி மேலும் பல சான்றாதாரங்கள் கிடைக்கலாம். என்பதில் சந்தேகமில்லை.



சுரேஸ்குமார் சஞ்சுதா



No comments:

Post a Comment

1800 – 2000 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

இலங்கையின் பொருளாதாரத்தினை பொதுவாக அபிருத்தியடைந்து வரும் அல்லது குறைவிருத்திப் பொருளாதாரம் என வரையறை செய்வது மரபாகும். அத்துடன் இலங்கையின் ...